Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


thanks bro.Colvin

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


ebi wrote:
யேகோவா சாட்சிக்காரர்கள் போதிப்பதை தானே அன்பும், கோவை பெரியன்சும் சொல்கிறார்கள். பின்னர் ஏன் தான் யேகோவா சாட்சிக்காரர் இல்லை என்று மறுக்கிறார்?யேகோவா சாட்சிக்காரர்களுக்கும் இவர்களுக்கும் (போதனையில்)அப்படிஎன்ன தான் வித்தியாசம்?
eyepopping.gif


உள்ளது சகோதரரே! ஆனால் சிறிய சிறிய வேறுபாடுகள்; யொகோவா சாட்சிகள் செத்தாலும் மற்றவர்களுடைய இரத்தத்தை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்;அவர்கள் தேவனை யெகோவா என்றுதான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். மற்றைய நாமங்களை பொதுவாக பாவிப்பதில்லை. இவர்கள் அப்படியில்லை.

1874 இல் இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சம்பவித்தது என்றும் 1914 இல் இயேசுவின் இராட்சியம் பூமியில் ஸ்தாபிக்கப்பட்டது (R.Enroth. A guie Cults and New Religious P104) யெகோவா சாட்சிகள் கூறுவர். இவர்கள் அந்த ரகம் அல்ல. மற்றபடி யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை படிப்பீர்களானால் இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை  என்பதை அறியலாம்.

நானும் காற்கோபுரம், விழித்தெழு சஞ்சிகையின் நீண்டகால வாசகன். அவர்களின் நூல்கள்  சிலவற்றை வாசித்துள்ளேன். யெகோவா சாட்சிகளின் கருத்துதான் இவர்களின் கருத்தும் ஆயினும் அவர்களின் போதனைகளின் சிலவற்றை இவர்கள் கைக்கொள்வதில்லை. வித்தியாசம் அவ்வளவே!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


// அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும். //

காரணம் தெரியவில்லை நண்பரே, இந்த வரிகளை வாசிக்க வாசிக்க நெஞ்செல்லாம் இனிக்கிறது;கண்கள் பனிக்கிறது.

நன்றி.. நன்றி.. இன்னும் அதிக நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


//// தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship)  என்றால், படைப்புக்கு முன்பு  அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும். // நமக்கன்பான நண்பர் ஜாண் அவர்களின் மற்றொரு பொன்னான வரிகள்...(மேசியாவின்) எதிரிகள் தளத்தில்..!//


இது "Apologist" ரவி சகாரியா (www.rzim.org) அவர்கள் இஸ்லாமிய அல்லாவுக்கு அன்பு என்றால் என்ன என்ற தெரியாது என்பதற்கு உபயோகப்படுத்தியது. இது இவர்களுக்கும் பொருந்தும். இவர்களுடைய தேவனும் அல்லாவும் ஒன்று போலதான் தெரிகிறது.

//ஐயய்யோ...நம்முடைய "யௌவன ஜனம்" தளத்திலுமா..?//

நிச்சயமாக இல்லை பிரதர். அங்கே எழுதுவதை நிறுத்தியதன் முலம் வேறு விசுவாசத்தை வளர்க்கும், தேவனை மகிமைப்படுத்தும் காரியங்களை நாம் இங்கே பேசலாம்



-- Edited by John on Monday 21st of February 2011 10:44:05 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


// தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship)  என்றால், படைப்புக்கு முன்பு  அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும். //

நமக்கன்பான நண்பர் ஜாண் அவர்களின் மற்றொரு பொன்னான வரிகள்...(மேசியாவின்) எதிரிகள் தளத்தில்..!


// இதுதான் உங்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு. //

ஐயய்யோ...நம்முடைய "யௌவன ஜனம்" தளத்திலுமா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


இது நண்பர் அன்பு அவர்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு.

"அதி" "அல்பா" போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். "ஆதிக்கு முன்பாக ஒரு நேரம்(???) இருந்தது அப்போது இயேசு உருவாக்கப்பட்டார் பின்பு அவர் உருவாக்கப்பட்ட எல்லாவற்றையும் உருவாக்கினார் என்கிற 'கதை' எப்படி உருவானது என்று தெரியவில்லை. "அல்பா" என்பது கிரேக்கத்தில் முதல் எழுத்து ஆனால் இவர்களை பொறுத்தவரை "அல்பா" வுக்கு
முன்னமே ஒரு எழுத்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


ஆதியிலே வார்த்தை "இருந்தது" (In the Beginning the word WAS). நேரம், கருப்பொருள், சக்தி (Time, Matter, Energy) இவையெல்லாம் உருவாக்கப்பட்டவை. தேவன் நேரத்திற்கு வெளியே இருக்கிறார். வார்த்தையான இயேசு தேவனும் நேரத்திற்கு வெளியே இருப்பதால் தான் "In the beginning the Word WAS". இது வரை இதற்க்கு ஒரு  உருப்படியான பதிலும் இல்லை.

இயேசு "மகா தேவன்"

தீத்து 2:13 "நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது."

இயேசு நித்திய பிதா

ஏசாயா 9:6 அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு

இயேசு சர்வத்திற்கும்மேலான தேவன்

ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

இவ்வளவு வசனங்கள் இருந்தாலும் 'வசனத்தின்'(???) படி செயல்படுகிற இவர்கள் இயேசுவை தொழமாட்டார்கள்.

யேகோவா தேவன் சொல்லுகிறார்:

ஏசாயா 46:5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

இயேசு பிதாவுக்கு சமம் என்று கிழே உள்ள வசனத்தில் வசிக்கிறோம்.

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

சமம் என்றால் என்ன? தேவனுக்கு சமமாக தேவனை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? இதுவரை பதில் இல்லை

தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship)  என்றால், படைப்புக்கு முன்பு  அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும்.

யோவான் 17:24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால்...


//உங்களைப் போன்ற குருடர் காட்டுகிற வழியின் பின்னே இத்தள அன்பர்கள் யாராவது செல்லவிரும்பினால், அதை நான் தடுக்கப்போவதில்லை. ஒரு குருடன் காட்டுகிற வழியை அவர்கள் நம்புவதை தேவனே அனுமதித்திருக்கும்போது, அதைத் தடுக்க நான் யார்? எனவே உங்கள் சத்தியங்களை நீங்கள் இங்கு பதிவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.....முதலில் இம்மாதிரி மதியீனருக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்; அதன்பின், உங்கள் மதியீன தீர்ப்பின்படி lucifer-ஐ தேவனாகக் கொண்டுள்ள எங்களுக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்.//

நீங்கள் என்னை குருடன் , மதியினன் என்று சொல்லுங்கள் கவலை இல்லை. ஏன் என்றால் என் இயேசு தேவனை ஆராதிக்காமல் திரிந்த நாட்களில் நான் அப்படிதான் இருந்தேன்

நான் அது போல எழுத ஒரே காரணம், நான் திரும்ப, திரும்ப கேட்டும் நீங்கள் இருவரும் மறந்தும் கூட அந்த 24 மூப்பர்களும் , மரியாளும், பேதுருவும் , கானானிய பெண்ணும்..இன்னும் பலரும் செய்தது போல "இயேசுவின் பாதத்தில்" நாங்கள் பணிவோம் என்று சொல்லவில்லை. இயேசுவின் பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற ஒரே "தேவன்"  இயேசு தேவனுடைய மகிமையை நீங்கள் காணக்கூடாத படி கண்களை குருடக்குகிற  இந்த பிரபஞ்சத்தின் தேவனாகிய சாத்தான் தான். இந்த பொய்யை சத்தியமாக போதிக்கிறவன் பொய்யும் பொய்க்கு பிதாவுமான பிசாசு தான்.


மரியாள் இயேசு சிலுவை சுமக்கும் முன்னமே அவருடைய பாதத்தை கண்ணிரால் கழுவி , ஸ்திரிகளின் மகிமையாகிய தன் தலை முடியால் துடைத்தாள் என்றால், என் அன்பு தேவன், மா பாவி எனக்காக சிலுவை சுமந்தபின்பு அவருடைய பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற "எந்த தேவனும்" எனக்கு தேவை இல்லை.

லூக்கா 7:38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

இப்போது விரும்பி நீங்கள் உங்கள் முழங்கால்களை முடக்காவிட்டால் நீங்கள் ஆராதிக்காத என் சத்திய பிதா தாமே முழங்கால்களை  இயேசுவின் பாதத்தில் முடக்குவார்.


இதுதான் உங்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு.




-- Edited by John on Monday 21st of February 2011 10:36:24 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


நண்பர் ஜாண் அவர்களின் அற்புதமான பொன்னான வரிகள்...
கோவை வெறியன்ஸுக்கு எதிராக‌..!


//உண்டானதெல்லாம் இயேசுவால் உண்டாயிற்று என்பதால் அவர் உண்டாக்கப்பட்டவர் இல்லை என்று எப்படி புரிந்து கொள்ள முடியும்!! //

இது ஒரு "Basic Logic". உண்டானதெல்லாம் இயேசுவால் உண்டாயிற்று என்றால் அவர் உண்டாக்கப்பட்டவர் இல்லை. இதற்கு ஆங்கிலத்தில் "Law of Non-Contradiction" என்று சொல்லுவார்கள். இயேசுவும் உண்டானவர் என்றால் அவர் எல்லாவற்றையும் உண்டாகினவறாய் இருக்கமுடியாது. இல்லை என்றால் அவரை அவரே உண்டாக்கி கொண்டார் என்றும் வரும்.

இதற்கு அர்த்தம் கொடுத்தீர்களென்றால் இதை குறித்து மேலும் தொடரலாம், இல்லாவிட்டால் புரிய முடியவில்லை என்று இல்லை, புரிய கூடாது என்கிற மனதோடு தான் விவாதத்தில் பங்கு கொள்கிறீர்கள்..!!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//  நான் அங்கு எழுதும் கருத்துக்களை இங்கே பதிக்கவும் நினைக்கிறேன் ஆனால் "keep up" பண்ண முடியவில்லை //

நண்பரே உங்கள் தரத்துக்கு இது உங்களுக்கு இது தேவையில்லாத டென்ஷன்...நான் கடைபிடிக்கும் வழிமுறையையே நீங்களும் பின்பற்றுங்கள், அதுவே போதும்;அதாவது நாம் பதிலளிக்க விரும்பும் எந்தவொரு வரியையும் மேற்கோள் காட்டி இங்கே பதிலைப் பதித்து வைப்போம்;தடுமாறும் வாசகர்கள் நிச்சயமாக நம்முடைய கருத்தையறிய இங்கே வருவார்கள்;அடியேன் அப்படிப்பட்டதொரு சூழ்நிலையை உருவாக்கவே கடந்த ரெண்டு வருடமாக பாடுபட்டிருக்கிறேன்;இதில் நீங்கள் சோர்ந்துபோகாமல் உங்கள் வேத ஞானத்தினால் எனக்கு உதவிசெய்தாலே போதும்,பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும்.

மற்றபடி ஆரோக்கிய உபதேசத்தைக் கைக்கொள்ளும் நம்முடைய சகோதரர்கள் அங்கே  உறுப்பினராவதையே அடியேன் விசுவாச துரோகம் போல பாவிக்கிறேன்;நான் வெளியேறிய ஒரே காரணமும் அதுவே;இவர்களைக் குறித்து யோசிக்கும்போது ஆவியானவர் எனக்கொரு எளிமையான வசனத்தினை நினைவுக்குக் கொண்டுவந்தார்;அது...

  • "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." (சங்கீதம்.1:1&2)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


நம்முடைய புதிய நண்பர் ஜாண் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஓநாயின் பல்லை சுத்தம் செய்வதைப் போன்றதொரு செயலில் இறங்கி தனியாக சிக்கிக்கொண்டிருக்கிறார்;மென்மையான‌ அவரிடம் எந்த நாகரீகமோ மனிதத் தன்மையோ இல்லாமல் மூர்க்கத்தனமாகவும் மடத்தனமாகவும் ஒரு விவாதத்தை "அம்பும்", "வெறியன்ஸும்" நடத்திக்கொண்டிருக்கின்றனர்;அவர்களுடைய விவாதத்தில் நாம் புகுந்து எந்த கருத்தையும் சொல்லப்போவதில்லை;ஆனாலும் அவர்களுடைய விவாதத்திலும் நிலைப்பாட்டிலும் காணப்படும் வஞ்சகத்தையும் ஒருதலைப்பட்சமான போக்கையும் சுட்டிக்காட்டுவது நம்முடைய கடமையாகும்;இதனால் பலரும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்;கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக‌.

இவர்கள் எந்தவகையிலும் நியாயமான விவாதத்துக்கு தகுதியில்லாதவர்கள் என்று அறிந்தே நான் இவர்களுடன் சமமாக நின்று விவாதிப்பதில்லை;வேதப்புரட்டர்கள் என்பதால் எதையும் எப்படியும் புரட்டுவார்கள்;ஆண்டவரே வந்து நின்றாலும் அவரையே சோதித்தபிறகே நம்புவேன் என்று அடம்பிடிப்பார்கள்; இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; தோமா என்பவன் விரல்களால் தொட்டுப்பார்த்தே நம்புவேன் என்றான் எனில், இவர்கள் அந்த ஜீவாதிபதியை மீண்டும் சிலுவையில் அறைந்தாலே நம்புவேன் என்பார்கள்;இவர்களுக்குள் கிறித்துவைக் குறித்த மனதுருக்கம் இருக்குமானால் இவ்வளவு துணிகரமாக
த் தாங்கள் காணாதவைகளில் துணிகரமாக நுழைந்து புரட்டி பேசவே மாட்டார்கள்.


நாம் பின்னூட்டமிட தெரிவு செய்யும் வரிகள் ஒருவருக்கொருவர் மாறுவது இயல்பு;ஒருவருடைய மனதைப் பாதிக்கும் கருத்து இன்னொருவருக்கு சாதாரணமாக இருக்கும்;அதுவே இன்னொருவருக்கு அதிர்ச்சியைத் தரும்;அதுபோன்ற கருத்தையே நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்;இதனை நண்பர் ஜாண் அவர்கள் கருத்தில் கொண்டது போலத் தெரியவில்லை;சத்துருவை அவன் வழியில் சென்றே மடக்கவேண்டுமே தவிர பேச்சுவார்த்தை நடத்தி வழிக்குக் கொண்டுவருதல் என்பது இயலாது.

இதோ என்னை அதிர்ச்சியடையச் செய்த கருத்து:

// பரலோகத்தில் தேவன், அவரது வலது பாரிசத்தில் அவரின் குமாரனும் கர்த்தருமான இயேசு கிறிஸ்து மற்றும் கோடா கோடி தேவ தூதர்கள் இருக்கிறார்கள்.//

இவர்களுடைய பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்த அனுபவத்திலிருந்து நான் இந்த வரிகளை வாசித்தால் இவர்கள் இயேசுவானவருக்கு தங்கள் மனத்திரையில் கொடுத்துள்ள ஸ்தானம் என்ன என்பது எளிதாக விளங்குகிறது.

இதனை மனிதப் பார்வையில் விளக்கவேண்டுமானால் ஒரு உயர்ந்ததும் உன்னதமுமான சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது;அது நம்ம ஊர் சட்டசபையின் சபாநாயகர் நாற்காலி போன்றது என்று வைத்துக்கொள்ளுவோம்;அந்த விசேஷித்த நாற்காலிக்கு அருகில் உதவியாளர்கள் பலர் இருப்பார்கள் அல்லவா? அவர்களில் பிரதானமான ஒரு உதவியாளர் சபாநாயகரின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நிற்பாரே அவரைப் போல பிதாவாகிய தேவனின் சிங்காசனத்துக்கு மிக அருகில் கைகட்டி சேவகம் செய்யும் ஊழியர்களில் ஒருவராக இயேசுவானவர் இருக்கிறாராம்.

இந்த அளவுக்கு கிறித்து இயேசுவை யூதர்களோ,
இஸ்லாமியர்களோ கூட சிறுமைப்படுத்த மாட்டார்கள்;அவரை நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷனிலிருக்கும் ஏட்டு கணக்காக சித்தரிக்கும் இந்த வேதப்புரட்டர்களுடன் எப்படி வசனத்தை வைத்து விவாதிக்கமுடியும் என்பதை உண்மையான விசுவாசிகளே சிந்திக்கட்டும்.

"பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பைவிட்டுவிடு பாப்பானை அடி" என்றாராம், தந்தை பெரியார்;அதுவே இவர்களுக்கும் நடைபெறவேண்டும் என்பது எனது உள்ளத்தின் அவா;இங்கே திரு.கோல்டா அவர்கள் குறிப்பிட்டது போல புத்திசொல்லுவதற்கோ விட்டு விலகுவதற்கோ அவர்கள் நம்மில் ஒருவரல்ல;அவர்கள் இன்னாரென்று அறிந்து அவர்களைக் குறித்த விழிப்புணர்வை கிறித்தவர்கள் மத்தியில் உண்டாக்கவேண்டும் என்ற நோக்கத்துடனே அவர்களுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்.

இழந்துபோனதைத் தேடி இந்த உலகுக்கு வந்த தேவனும் தேவகுமாரனுமாகிய இயேசுவானவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பதாக வேதம் சொல்லுகிறது.

"இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்." (மாற்கு.16:19)

"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். " (வெளிப்படுத்தல்.3:21)

மேற்கண்ட இருவசனங்களையும் அவர்கள் எந்த மூலபாஷையில் வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளட்டும்;அதில் கவனிக்கத் தகுந்த ஒரே பொருள் அவர் பிதாவுடன் அவருக்கு அடுத்து அல்லது அவருக்கு சமமாக அமர்ந்திருக்கிறார்;இவர்கள் சொல்லுவது போல- டவாலி போல பிதாவின் முகத்தை பரிதாபமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு எதிரில்‌ நிற்கவில்லை; இதுவே மனிதப்பார்வையில் எளிதான நம்முடைய புரிதல்;

வேதம் என்பது விண்ணகத்துக்குரியதாக இருப்பினும் மனிதப் புரிதலுக்காக மனித மொழியில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது;எனவே சங்கீதக்காரனைப் போல உம்முடைய வேதத்திள்ள அதிசயங்களைப் பார்க்க்ம்படி எனது கண்களைத் திறந்தருளும் என்று நாம் விண்ணப்பித்தால் ஆவியானவரே அனைத்தையும் போதிப்பார்;அவர்கள் ஆவியானவரைக் குறித்து அறிந்திராதபடியினால் அவரைப் பெறவோ அல்லது அவரிடமிருந்து எதையாகிலும் பெறவோ முடியாது.

இதையும் மறுத்து தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த வசனத்தினைத் திரிப்பார்கள்;முதலில் வசனத்தின் மொழிபெயர்ப்பு சரியில்லை என்பது அடுத்து அதற்கு இதுவே அர்த்தம் என்பது அப்புறம் அந்த வசனமே மூலபிரதியில் இல்லை என்பது;இதுவே அவர்களுடைய ஒரே நிலைப்பாடு;இதையே மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.


ஆனால் அவர்களுக்கு எதிரான ஒரு  வலுவான ஒரு ஆதாரத்தையோ விவாதத்தையோ புறக்கணித்து அதற்கொரு புதிய அர்த்தத்தையும் கேள்வியையும் தொடுப்பார்கள்;அண்மைய விவாதத்திலிருந்து இதோ ஒரு உதாரணம்...

அம்பு:
//மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிற தேவனாகிய கர்த்தர் யார்?//

john wrote:
//திரித்துவ தேவன்தான் அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?//

அம்பு:
திரித்துவ தேவன் தான் என்பதற்கான வசன ஆதாரம் தராமல் இப்படிக் கேட்டால் எப்படி?


திரித்துவ தேவனுக்கு வசன ஆதாரம் கேட்கிறார்கள்,மேலும் திரித்துவம் என்ற வார்த்தையே வேதத்தில் இல்லை என்கிறார்கள்;அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுவோம்;ஆனால் இதே விதி எல்லாவற்றுக்கும் பொருந்தவேண்டுமல்லவா? அதான் இல்லை;இதுவே அவர்கள் காரியமென்றால் விதி மாறுகிறது பாருங்கள்...

வெறியன்ஸ்:
////தேவ தூதர்களுக்கோ மற்ற ஆவி ஜீவிகளுக்கோ, நம்மை போன்று சரீரம் இல்லாததினால், அவர்களுக்கு நிச்சயமாக "கால்" கிடையாது!!//

john wrote:
// எந்த வசனத்தின் அடிப்படையில் இதை கூறுகிறீர்கள்? //

வெறியன்ஸ்:
// ஏனென்றால் தேவ தூதர்களுக்கும் ஆவி ஜீவிகளுக்கும் "கால்" இருக்கிறது என்கிற வசனம் இல்லாததினால்...பாதம் என்றால் "கால்" என்று மெய்யாகவே எடுத்துக்கொண்டீர்கள்//


நம்மை வசனம் கேட்கும் அவர்களிடம் திருப்பி வசனம் கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் எத்தனை நிர்தாக்ஷண்யமாக‌ ப்ளண்ட்டாக இருக்கிறது என்று பாருங்கள்;பாதத்தில் விழுந்து வணங்கினார்கள் என்பதில் பாதம் என்பது வேறு, கால் என்பது வேறு என்றொரு கொடூரமான விளக்கம்,ஆனால் அதே நேரத்தில் திரித்துவம் என்ற வார்த்தைக்கு வசன ஆதாரம் வேண்டுமாம்;இவர்களும் ஓரளவு படித்து இந்த நவநாகரீக உலகில் நம்மோடு வாழ்பவர்கள் தான்;ஆனால் காட்டுமிராண்டிகளைப் போல யோசிக்கிறார்களே..!

நண்பர் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு காவற் கோபுரம் என்ற ஒரே ஒரு வார்த்தையைச் சொன்னதற்கு எவ்வளவு ரியாக்ஷன்,பாருங்கள்;இதுவே அவர்கள் ஸ்டைல்;இதுவே எல்லா தூஷணங்களுக்கும் ஆரம்பம்;இதுவே எனக்கும் நடந்தது;வேதத்தின்படியான ஒரு ஐயத்துக்கும் விவாதத்துக்கும் வேதத்திலிருந்தே விளக்கம் சொல்லமுடியும்;ஆனால் இவர்கள் விதண்டாவாதம் செய்வதற்காகவே இவர்களுடைய பாரம்பரியத்தில் பிரபலமான ஒரு ஸ்தாபனத்தின் கொள்கையை எதிரொலித்தால் நாம் அதனைக் கண்டிக்கக்கூடாதாம்,உடனே ரோஷம் பிய்த்துக் கொண்டுவருகிறது..!

john wrote:

நீங்கள் வேதத்தை "பிதா ஒருவரே தெய்வம்" என்கிற "காவல் கோபுர" பார்வை பார்கிறீர்கள். காவல் கோபுரத்தை விட்டு கிழே இறங்கினால் திரித்துவம் நன்றாக தெரியும்...அவரோட நேரடியாக உரையாடினவர்களுக்கு நன்றாக புரிகிறது அவர் தன்னை "தேவன்" என்று சொல்லுகிறார் என்பது. நீங்கள் காவல் கோபுரத்தை படித்து விட்டு இல்லை என்று மறுக்கிறீர்கள்.


வெறியன்ஸ்:

ஆமா, "காவல் கோபுரம்" என்றால் என்ன‌? (ஐயோ,பாவம்..!?)

//வேதத்தை விட்டு வெளியே இறங்கினால் இன்னும் வேறு விஷயங்கள் கூட நன்றாக தான் தெரியும்!! //

john wrote:

இதைத்தான் நானும் சொல்லுகிறேன். நிங்கள் வேதத்தை விட்டு இறங்கி காவல் கோபுரத்தில் ஏறிவிட்டீர்கள். அதனால்தான் உங்கள்ளுக்கு "நிறைய" தெரிகிறது.

//திரித்துவம் இல்லை என்பதும் மிகவும் சிலரே சொல்லுகிறார்கள், ஆனால் தேவன் மூன்றாக இருக்கிறார் என்கிற மனித போதனை இன்று அநேகரால் பின்பற்றப்படுகிறது!! ஆகவே தான் பவுலும் இப்படி எழுதினார்,//

john wrote:

பரலோகத்தில் ரொம்ப சிலரே இருப்பர்களோ? நிச்சயமாக "கிரேக்க" மொழி (proskuneo என்கிற வார்த்தை எங்கே வருகிறது என்று கண்டுபிடித்து அதை ஏசுவுக்கு என்று வரும்போது "Worship" என்று  மொழிமாற்றம் செய்யக்கூடாது)  தெரியாதவர்களும் "காவல் கோபுரம்" வாசிக்கதவர்களும் அதில் பிரவேசிக்க முடியாதுபோல தெரிகிறது.

நண்பர் ஜாண் நம்மைப் போல டென்ஷன் ஆகமாட்டார் என்பது தெரிந்ததும் முழுபெலத்துடன் புகுந்து விளையாடுகிறார் பாருங்கள்...

காவல் கோபுரம் என்றால் Watchtower என்பது எனக்கு தெரியும்!! ஆனால் அப்படி இந்த தளத்தில் உள்ளவர்களை பார்த்து சொல்லும் நோக்கத்தை தான் புரிந்துக்கொள்ளவில்லை!! Watchtower படிப்பதால் என்ன குற்றம்!! அதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு!? ஒருவர் குரானையே வீட்டில் வைத்து தன்னை "கிறித்தவன்" என்று சொல்லிவருவதை காட்டிலும், நீங்கள் நகைப்பாக நினைக்கும் "காவல் கோபுரம்" மேல்!! இந்த புத்தகம் ஆரம்பித்தது வேறொருவர். ஆனால் இப்பொழுது இருப்பது வேறொருவரிடம்!! புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று படித்தது உண்டா, அல்லது "போதகர்கள்" சொல்லுகிறார்கள் என்பதால் ஒதுக்கி வைக்கிறீர்களா!! கான்ஸர் கட்டியை இயேசு நாதர் நீக்குகிறார், அதை என் கண்களால் பார்க்கிறேன் என்றும், கிட்னியை இயேசு நாதர் சரி செய்து விட்டார் என்று சாட்சிக்கொடுத்து, அடுத்த நான்காம் நாளில் இறந்து போனவரின் சாட்சியங்களை தாங்கி வரும் ஜெபகோபுரப் புத்தகம், நாலுமாவடி புத்தகம், ஆசீர்வாத டீவி புத்தகம் போன்ற பொய் சாட்சி புத்தகங்களை காட்டிலும் "" எந்த விதத்திலும் குறைந்து போகவில்லை!!

சுய விளம்பரத்திற்காக விற்கப்படும் புத்தகங்களை காட்டிலும், தேவனின் மகிமைக்கென்று வருகிற புத்தகங்கள் மேல்!! என்றாவது முடிந்தால் வாசித்து பாருங்கள், தேவை இல்லாததை விட்டு விடுங்கள்!!

I தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

//பரலோகத்தில் ரொம்ப சிலரே இருப்பர்களோ? //

ஏன் நம்பிக்கை இல்லையா? கிறிஸ்தவ போதகர்கள் தங்கள் சபைகளில் ஆள் சேர்க்க இத்துனை பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறேன் என்றும், பாஸ்டர் மீட்டிங்கில், நான் இத்துனை பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று மார்த்தட்டி பேசுவதற்கும் தானே அன்றி, பரலோகம் செல்வதற்கு அல்ல!! அப்படி என்றால் அமேரிக்கா, இங்லாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் சிறையில் இருப்பார்கள், அவர்கள் எல்லோரும் ஞானஸ்நானம் எடுத்து விட்ட ஒரே காரணத்திற்காக பரலோகம் போய்விடுவார்களோ!! பரலோகம் போவதற்கு தகுதியே சீஷத்துவம், இந்த சீஷத்துவத்தை பின்பற்றுபவர்கள் நிச்சயமாக இடுக்கமான வாசல் வழியே பிரவேசிப்பவர்களே அன்றி விசாலமான பாதையில் நடப்பவர்கள் அல்ல!! பவுலை போன்று கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் குப்பை என்று சொல்லுபவர்கள் தானே அன்றி, சொகுசாக அடுத்தவன் அனுப்பு பணத்தில் பென்ஸ், ஹோண்டா அக்கார்டில் சுற்றுபவர்கள் அல்ல, இதில் நான் அரசு உத்தியோகத்தை விட்டு விட்டு ஊழியத்திற்கு வந்து விட்டேன் என்கிற மமதை வேறு!! நண்பரே பரலோகத்தில் நிச்சயமாக உங்கல் கேள்வியில் உள்ளது போல் சிலரே இருப்பார்கள்!! மனிதனுக்கு என்று இந்த பூமியை தான் தேவன் படைத்தார், பரலோகத்தை அல்ல‌!!

சங். 115:16. வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

ஏசா 45:18. வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

பி.கு. ஊரார் பணத்தில் நாட்டிற்கு நாடு ஜெபகோபுரம், அப்புறம் உள்ளூருகளில் திறப்பின் வாசல்கள், பண்னைகள் போன்றவற்றை கட்டுவோரை காட்டிலும் "காவல் கோபுர"க்காரர்கள் மோசம் இல்லை!! அவர்கள் அடுத்தவர்களின் பணத்திற்கு ஆசைப்படுவதில்லை!! ஆனால் இப்படி அவர்களை குறித்து எழுதிய்தால் நானும் அவர்களும் ஒன்று தான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது!! //

இறுதியாக, எனது நண்பர்களிடம் நான் வேண்டிக்கேட்டுக்கொள்ளுவது இதுதான்;இவர்களுடன் ஒரு வரட்டு (பிடி)வாதத்தை நடத்தி உங்களை பெலவீனப்படுத்திக்கொள்ளாதீர்கள்;நாடி வைத்தியரைப் போல செயல்பட்டு நோயைக் கண்டறிந்து நோய்க்குக் காரணமான கிருமியை விரட்டியடியுங்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

நன்றி சகோதரி Golda.  நண்பர்கள் . அன்பு மற்றும்  பெரியன்ஸ் அவர்கள் சத்தியத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அனேக கிறிஸ்தவ சகோதரார்கள் அங்கே செல்வதாலும், சத்தியத்தை அங்கு வருபவர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்றுதான். கூடிய விரைவில் துரத்தப்படுவேன் என்று நம்புகிறேன்.  "Truth will defend itself". இப்போது இவர்கள் முழங்காலை முடக்காவிட்டால் கடைசி நாளில் தேவன் அவர்களுடைய "தேவனோடு (lucifer)" சேர்த்து இவர்கள் முழங்காலையும் முடக்குவார் but it will be too late. நான் அங்கு எழுதும் கருத்துக்களை இங்கே பதிக்கவும் நினைக்கிறேன் ஆனால் "keep up" பண்ண முடியவில்லை

-- Edited by John on Sunday 20th of February 2011 06:53:26 AM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


To Brother John:

--
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
--


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


கர்த்தருக்குள் பிரியமான நண்பர் ஜாண் அவர்களின் முயற்சிகள் சிறப்படைய மனதார வாழ்த்துகிறேன்; கர்த்தரில் நிலைத்திருப்போம்..!

N.B: பதிவிடுவது சம்பந்தமான ஒரு ஆலோசனை:
நம்முடைய வாசகர் அவர் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நமது இணையப் பக்கத்தைவிட்டு செல்லாதிருக்க,எந்தவொரு தளத்தின் தொடுப்பை இணைக்கும்போது அந்த செக் பாக்ஸின் மூன்றாவது வாய்ப்பாக Open in a new tab என்று இருக்கும்;அதனைத் தெரிவுசெய்து பிறகு நீங்கள் பதித்தால் நாம் நம்முடைய வாசகர் நம்முடைய பக்கத்தைவிட்டு சென்றுவிடாமல் தடுக்கலாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

இவர்கள் என்னதான் சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன் புதிதாக ஒரு திரியை அவர்களுடைய தளத்தில் துவக்கி உள்ளேன். http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=41248820


திரித்துவ திரியில் நீங்கள் பதிலளிக்க விரும்பாததால் இந்த புது திரியில் கேட்கிறேன். நீங்கள் முன்னமே கொடுத்த பதிலின் அடிப்படையில் எனக்கு எழுகிற கேள்விகள் இவைகள்.

...ஆக இயேசு தேவன்தான் ஆனால் தொழதக்கவர் இல்லை என்றால் "எந்த"  தேவன் தொழதக்கவர்? எப்படி "பிதா" ஆகிய தேவனை தொழலாம் என்கிறீர்கள்?

"யேகோவா" என்பதின் அர்த்தம் "நான் நானே" (IAM that IAM). யார் இந்த நான் நானே? அது பிதாவுக்கு மட்டும்தான் பொருந்துமா அல்லது குமாரனுக்கும் பொருந்துமா?

மிகாவேல் தேவனால் உருவாக்கப்பட்டவரா?

அவருடைய காலில் விழலாமா?

பரலோகத்தில் தேவோனோடு ஆளுகை செய்கிற மூப்பர்களுக்கு எப்படி இந்த அடிப்படை (தங்களுக்கு தெரிகிற) உண்மை கூட  தெரியாமல் காலில் விழுந்தார்கள்?

தேவ துதனுடைய காலில் விழலாம் என்றால் ஏன் ஒரு தூதன் அதுகூட தெரியாமல் யோவானை கடிந்து கொள்ளவேண்டும்?.



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

யேகோவா சாட்சிக்காரர்கள் போதிப்பதை தானே அன்பும், கோவை பெரியன்சும் சொல்கிறார்கள். பின்னர் ஏன் தான் யேகோவா சாட்சிக்காரர் இல்லை என்று மறுக்கிறார்?யேகோவா சாட்சிக்காரர்களுக்கும் இவர்களுக்கும் (போதனையில்)அப்படி 
என்ன தான் வித்தியாசம்?
eyepopping.gif



-- Edited by ebi on Friday 18th of February 2011 04:02:07 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


நம்முடைய இந்த எழுத்துக்கள் எதிரிகளின் கூடாரத்தில் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது;குடிப்பதற்கு வாங்கிய டீயைக்கூடப் பருகாமல் அதில் ஈ விழுந்து கிடக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்;இந்த ஒரு பின்னூட்டமானது மேசியாவின் எதிரி புதிய திரியைத் துவங்குமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது;அதன் விவரங்களையறிய தொடுப்பைத் தொடரவும்.

சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=41140751

யார் மதியீனன், யார் அறிவீனன்?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=41235460



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


"ஓடறவன கண்டா துரத்துபவனுக்கு இளப்பம்" என்பார்கள்;அதாவது பிரச்சினைக்கு அஞ்சி ஒதுங்கிச் செல்லுபவனை அவன் பயந்து செல்லுவதாக நினைத்துக்கொண்டு ஊர் எல்லை வரை துரத்திச் செல்லுவான், ஊர்க்காரன்;ஆனால் அவனை ஊர் எல்லை வரைக்கும் தந்திரமாக வரவழைக்க ஓடிக்கொண்டிருப்பவன் திரும்பிக் கொண்டால் நிலைமை விபரீத‌மாகும்;உண்மையான‌ பழமொழி வேறாக இருந்தாலும் நாகரீகத்துக்காகவும் பொருள் விளக்கவும் இவ்வாறு குறிப்பிடுகிறேன்; அசல் பழமொழி என்ன என்பது அறிந்தவருக்கு மட்டும் அறியப்பட்டால் போதும்.

அதுபோலவே எனது அன்புக்குரிய நண்பர்களான கொல்வின் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோர் அநித்திய சீவலின் தளத்தில் எதையோ எழுதி ஏதோ நியாயத்தை நிலைநாட்ட சென்ற அவர்கள் நாகரீகமில்லாத அந்த எபேசு பட்டணத்தின் மிருகங்களால் கடித்து குதறப்படுவதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை;அவர்களை அந்த தளத்தில் பார்த்ததும் உடனே நானும் அங்கே உறுப்பினராக இணைந்து களமாட துடித்தேன்; ஆனாலும் உணர்ச்சிவயப்படக்கூடாது என்று என்னை அமைதிபடுத்திக்கொண்டு காத்திருந்தேன்.அதற்கேற்ப அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டனர்;நான் அங்கே இணைந்திருந்தால் நிச்சயமாகவே என்னை அவமானப்படுத்தியிருப்பார்கள்;பெரியவர் அன்பு, தன்னுடைய தளத்தின் விருந்தினர்கள் முன்வைக்கும் மாற்று கருத்துக்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்களை வெளியேறச் சொல்லுவதைப் போல  எழுதுகிறார்;இவர்களுடைய புனிதமான தளத்தில் நரகத்தைக் குறித்து எழுதினால் அவர்களுடைய தளம் மாசுபட்டு விடுமாம்;இதே கோபம் தான் கோவை வெறியன்ஸுக்கும் என்மீது ஏற்பட்டது;இதுதான் அவர்களுடைய உண்மையான முகம்;மாற்று கருத்தை எதிர்கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் மற்றவர்களை எப்படி குற்றஞ்சாட்டலாம்?

இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் போடப்படும் சுள்ளிகளான இரஸலின் சிஷ்யர்களுக்கே இவ்வளவு வைராக்கியம் இருக்குமானால் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த மார்க்கத்தமைந்த எங்களுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கவேண்டும்;இது கிதியோனின் காலமாக இருந்தால் வந்து கொளுத்திப்போடுவோம்; பினெகாஸின் காலமாக இருந்தால் எங்கள் வாய் பேசாது,செய்து காட்டுவோம்.

நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.

எதிரியை தடுமாறச் செய்து வீழ்த்துவது ஒன்றே குறிகோளானால் எந்த வேடத்தையும் ஒருவன் போடுவான் என்பதற்கு பெரியவர் அன்பு அவர்களே நல்ல உதாரணம்;அவருக்கு வசனம் வேண்டுமாம்; மாணவனாம்;மாணவன் எதிர்த்து கேள்வியே கேட்கவே கூடாதே?

வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?

நாங்களெல்லாம் பாரம்பரியத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதற்காக வேதத்தை மறுதலிப்பதாக மிக எளிதாக சொல்லிவிடலாம்;ஆனால் நீங்கள் வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறமுடியுமா?

நீங்கள் இங்கே தமிழில் வாதிடும் ஒவ்வொரு பொருளும் அதன் தர்க்கிக்கும் முறை உட்பட ஏற்கனவே ஆங்கிலத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அங்கே உங்க ஆட்கள் ஆங்கிலத்தில் பிதற்றுவதையே இங்கே தமிழில் சொம்படிக்கிறீர்கள் என்பது இரண்டையும் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்;என்னைப் போல வேலையற்றவன் தான் இந்த குப்பைகளையெல்லாம் படித்து மனசைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்; ஆனால் வாக்குதத்த சந்ததியான ஈசாக்கின் வழிவந்து ஆபிரகாமின் விசுவாசத்தின்படி இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கு அந்த பயிற்சி இல்லை;எனவே உங்கள் முன்பாக நில்லாமல் விலகி ஓடுகிறார்கள்;ஏனெனில் 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பது அவர்களுக்குத் தெரியும்.

இரஸலின் கூட்டத்தாருடைய வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட புழுக்களான நீங்கள் தற்போது குளவிகளாக மாறி கிறித்தவ உலகை பதட்டப்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்து வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறுவது பொய் தானே?

நாங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எப்படி உங்களுக்கு நாங்கள் எந்த சபைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் நம்பும் உபதேசம் எது என்றும் தெரியவருகிறதோ அதுபோலவே உங்கள் கட்டுரைகள் நீங்கள் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது;அது நிச்சயமாக வேதத்தை மட்டுமே சார்ந்தது அல்ல;அது மனித போதகமே.

நீங்கள் அந்த போதகத்தை யாரிடத்திலிருந்து பெற்றீர்களோ அவர்களைக் குறித்து எதையும் கூறாமல் சொந்தமாகக் கண்டுபிடித்தது போல செயல்படுவது ஒரு மாபெரும் கருத்து மோசடியாகும்;உங்கள் கொள்கைகளும் உபதேசங்களும் உண்மையோ பொய்யோ அதை இன்னாரிடத்திலிருந்து பெற்றீர்கள் என்பதை சொல்லாமல் மறைப்பதே முதல் குற்றமாகும்;அடுத்து அந்த உபதேசத்தைப் பரப்ப சத்திய வேதத்தைத் திரித்து போதிப்பது அடுத்த மோசடியாகும்;ஏனெனில் இங்கே விநியோகிக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே அது உங்களுடையதாகிவிடாது அல்லவா? ஏனெனில் உங்கள் கூட்டத்தினர் உயர்த்தி பிடிக்கும் உன்னத நாமமான யெகோவா எனும் நாமம் புதிய ஏற்பாட்டில் இல்லை;நீங்கள் மொழியை வைத்து, அவர் தான் இவர் என்று சொன்னால் நாங்களும் இவர் தான் அவர் என்று சொல்லமுடியுமே?

நான் கூட என் வீட்டில் குரான் புத்தகத்தின் பிரதியை வைத்திருக்கிறேன், அதற்காக நான் முஸ்லிமாகி விடமுடியுமா அல்லது நானே படித்து தேறிவிட்டதாகக்கூறி இஸ்லாமியருக்கு எதிராக கலகம் செய்யமுடியுமா? அதுபோலவே இஸ்லாமியரும் இன்றைக்கு கிறித்தவர்களைவிட அதிகமாக வேதத்தை வாசிக்கிறார்கள்;எதற்கு? அதிலிருந்து குறை கண்டுபிடிக்க‌..! உங்களுக்கும் அவர்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?

பரிசுத்த வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக்காக சல்லிக்காசும் செலவிடாத நீங்கள் அதில் மொழி பெயர்ப்பு குறைகளைச் சொல்லுவதற்கும் அதிலிருந்து வசனங்களை எடுத்து வியாக்கியானம் செய்வதற்கும் எந்த உரிமையும் இல்லை;ஏனெனில் அது இயேசுவை தெய்வமாகத் தொழுவோர் தியாகத்துடன் பிரயாசப்பட்டு கொடுத்ததாகும்.இயேசு தெய்வமாகத் தொழப்படாவிட்டால் புதிய ஏற்பாடே இல்லை;புதிய ஏற்பாட்டின் உபதேசங்களை நீங்கள் ஏற்காவிட்டால் நீங்கள் கிறித்தவனே இல்லை;"பொறம்போக்கு" என்று அதற்காகவே குறிப்பிடுகிறேன்.

மந்தைக்கும் உட்படாமல் வேலியையும் தகர்த்துபோட்டு ஓநாய் மனிதர்களாக மாறிப்போன உங்களை வீழ்த்துவதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறோம்; தாவீதைப் போல வீறுகொண்டு எழுந்து உங்கள் வாயில் சிக்கியிருக்கும் ஆடுகளை உயிருடன் மீட்போம்.

ஒன்றான மெய்த் தேவனைக் குறித்த அறிவே இல்லாத உங்களுக்கு அவருடைய நேசக் குமாரனைக் குறித்து என்ன தெரியும்? அல்லது அவரால் அனுப்பப்பட்ட ஆவியானவரைக் குறித்து என்ன தெரியும்? முதலில் இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவதை இழிவுசெய்து எழுதுவதை நிறுத்திவிட்டு பிறகு திரித்துவத்தைக் குறித்து கேளுங்கள் சொல்லுகிறோம்.

கடந்த 2000 வருடமாகப் பிரசங்கிக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;இரட்சிக்கப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;நியாயந்தீர்க்கப்போகும் ஒரே நாமம் இயேசுவின் நாமமே;எங்களுக்கு யாவே என்பவரைக் குறித்தோ யெகோவா எனும் நாமத்தைக் குறித்தோ ஒன்றும் தெரியாது;அவருடைய குமாரனாக சொல்லிக்கொண்டு வந்தவரே அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்;அப்படியானால் அவரை வணங்கட்டுமா என்று இவரிடம் கேட்டோம்;என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்றார்;பிதாவிடம் கேட்டோம்,குமாரனை வணங்கலாமா, என்று.அவரும் குமாரன் வழியாகவே நான் மகிமையடைவேன் என்று சொல்லிவிட்டதால் வேத வசனமும் பரிசுத்தவான்களும் அதனை ஆமோதிப்பதால் இயேசுவையே தெய்வமாகத் தொழுது துதிசெய்து வருகிறோம்;இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் போகும் பாதையைக் குறித்து ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்;ஆம்,அவரைக் குறித்து அறியாததால் நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்று இயேசு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்;அவர் ஆள்தத்துவமாக இருப்பதாலேயே நிரப்புகிறார்,சாட்சி கொடுக்கிறார்,பேசுகிறார் என்பதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி எக்காளத்தை உங்கள் அபிமான தூதனாகிய மிகாவேல் ஊதும் போது மேகத்தின் மீது இராஜாதி இராஜாவாக மேசியா வரும்போது அவரோடு நாங்களும் வரும்போது உங்கள் கூட்டத்தின் தலைவன் இரஸ்ஸலுடன் நீங்களெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள்;ஏனெனில் நீங்கள் மரிக்காமலிருந்தாலும் சரி, மரித்துப்போனாலும் சரி உங்களுக்கு அதில் பங்கில்லை;ஏனெனில் முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களின் வரிசையில் மேசியாவின் எதிரிகளான உங்களுக்கு இடமில்லை;"ஐயய்யோ பிரதான தூதனே இயேசு என்று நினைத்தோமே, "பிரதான தூதா,  பிரதான தூதா" என்று நீங்கள் கதற அவனோ கைகட்டி வாய்பொத்தி உங்களைப் பார்த்து சிரிக்க அந்த காட்சியைப் பார்க்க கண் கோடி வேண்டுமய்யா? அவரைக் குத்தினவர்கள் வரிசையில் உங்கள் பெயர் எழுதப்படும்; ஒரு நாளில் அவரைக் குத்தினவர்களும் குத்திக்கொண்டிருப்பவர்களுமான உங்கள் கண்களெல்லாம் அவருடைய இராஜமேன்மையைப் பார்த்து புலம்பும் என்பது நிச்சயம். இப்போதே அவருடைய திருப்பாதத்தை முத்தஞ்செய்தால் ஒருவேளை மீட்கப்படுவீர்கள்;ஆனாலும் நிலைமை ரொம்ப மோசமாகவே இருக்கிறது; பாதாளம் உங்களுக்கு நேராக வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறது; இன்னொரு பக்கம் ஏணியும் அதோ வைக்கப்பட்டிருக்கிறது;எப்படி வசதி..? ஏன்யா நீ என்ன லூசா, பாதாளம் என்றாலும் சிரிக்கிறாய்,ஏணி என்றாலும் சிரிக்கிறாய்? உனக்கு ரெண்டும் வேண்டாமா,எக்கேடும் கெட்டுப்போ..!

இரத்தசாட்சிகளெல்லாம் இயேசுவின் நாமத்துக்காகவே மரித்தார்கள்; யெகோவா நாமத்துக்காக வைராக்கியம் பாராட்டியவர்களே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்;உங்களிடம் வீண்பேச்சு எதற்கு என்றே இத்தனை காலம் கிறித்துவின் சபையார் அமைதியாக இருந்தார்கள்;இனி காலம் செல்லாது;உன்னை அடித்தால் தான் இன்னொரு முட்டாள் எச்சரிக்கப்படுவான் என்றே இணையத்திலிருந்து உங்க ஆட்களின் கணையத்துக்கு குண்டு வைக்கிறோம்; யேகோவா தேவனுக்கே ஆயிரம் நாமங்கள்;அதில் எதில் எதைச் சொல்லி அவரை ஆராதிப்பீர்களோ? பழைய ஏற்பாடு முழுவதும் யெகோவா எனும் ஒரே நாமத்தினால் மாத்திரமே தேவன் தொழப்பட்டாரா என்று இரஸ்ஸலின் மூத்திரத்தைக் குடித்த முட்டாள்களைக் கேட்க விரும்புகிறேன்; யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவன் மாத்திரமா உலகத்தைப் படைத்தார்? உங்கள் கூற்றுப்படி அவரால் சிருஷ்டிக்கப்பட்டஇயேசுவே உலகத்தைப் படைத்தார் எனில் இயேசுவானவரே யெகோவா என்று சொல்லுங்கள்,வேண்டுமானால் யோசிக்கிறோம்..!

"எகிப்தில் தெண்டனிட்டு பணியுங்கள்" என்று பார்வோன் கட்டளையிட்ட போது அனைத்து மக்களும் இராஜாவான பார்வோனை விட்டு விட்டு யோசேப்பை பணியவில்லையா? முட்டாள்களே சந்தடி சாக்கில் சர்வ வல்ல தேவனை அவருடைய திருக்குமரன் நிமித்தமான விவாதத்தில் புறக்கணித்து தூஷிக்கும் பாவத்துக்குள்ளாக்க பிசாசு உங்களை ஏவுகிறான் என்பது மட்டும் புரிகிறது;இனி உங்களுடைய இறையியல் விளக்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை;உங்களுக்கு எந்த வசனத்தையும் தரப்போவதில்லை;எங்கள் ஊரில் மாட்டுக்கு வாழைப் பழத்தோலையும் கழுநீரையும் எச்சில் இலைகளையும் மட்டுமே போடுவோம்;உங்களுக்கு இதுபோதும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


தமிழக சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கிறது;அங்கே சபாநாயகர் என்று ஒருவர் இருக்கிறார்; அவர் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்பவே செயல்படுவார்; அதன்படி ஆட்சியாளர் நினைத்தால் எதிரிக்கு மன்னிப்பு கிடைக்கும் அல்லது தண்டிக்கப்படுவார்; அதுபோன்ற ஒரு கூத்து இறைவன் தளத்தில் நடந்திருக்கிறது;செய்யாத ஒரு தவறுக்கு குற்றஞ்சாட்டப்படுகிறேன், தண்டிக்கப்படுகிறேன், பிறகு என்ன நினைத்தார்களோ நம்மை விரோதிப்பவர்களிலேயே ஒருவர் நமக்காக பரிந்துபேச நமக்கு அரைகுறையாக ஒரு மன்னிப்பு கிடைக்கிறது..!

என்ன இருந்தாலும் அவிங்களும் மனுஸெங்க தான‌..!



anbu57 wrote:


உங்கள் குற்றச்சாட்டில் சிறு சந்தேகம் இருந்தால்கூட, உங்கள் குற்றச்சாட்டை வாபஸ் பெறுங்கள்.

அபாண்டமான சொல்லை நாம் ஏற்கக்கூடாது என்பதைவிட மிகமிக முக்கியம், மற்றவர்களை நாம் அபாண்டமாக எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதே.



என்பெயரில் இவ்வாறு தவறான பதிவிட்டு கெடுக்கும் தன்மைகொண்ட வேறு  ந்த எதிரியும் எனக்கு கிடையாது சகோதரரே!  இப்படி ஒரு பதிவு  என் பெயரில் ழுதப்பட்டுள்ளது என்று நம் சகோதரர்கள் எனக்கு போன்பண்ணி சொன்னபோது  நான் மிகவும் ஆடிவிட்டேன்.  இவ்வாறு கீழ்த்தரமான ஒரு காரியத்தை  செய்ய அதிகமான வெறுப்பு அல்லது பகை வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட யாரும் கிடையாது. இவர் ஒருவர்தான் நமது எல்லா கருத்தையும் திரித்து விமர்சிப்பவர்  எனவேதான்  நான் அவ்வாறு அனுமானித்தேன்.

ஆகினும் தங்களின்  இந்த சுட்டுதலுக்கு மிக்க  நன்றி.

நாம் அறியாமல்கூட தவறு செய்துவிடாதபடிக்கு  நூற்றுக்கு நூறு உண்மை என்று தெரியாத அந்த குற்றசாட்டை   தங்கள் அறிவுருத்துதலின் அடிப்படையில் நீக்கி விடுகிறேன். அது ஒருவேளை தவறான அனுமானமாக இருக்குமாயின் ஆண்டவரிடமும் சம்பந்தபட்ட்வரிடம் மன்னிப்பு கோருகிறேன்!

I சாமு 25:39 தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்;

நன்றி
சுந்தர்

{அத்தனை துணிகரமும் நெஞ்சுரமும் இருந்தா நாங்களும் தரிசனம் பாப்போமே'ணேன்..!}



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உங்களிடம் யெகோவா சாட்சிகளின் பாதிப்பு நிச்சயம் இருக்கிறது; இதன் காரணமாகவே நீங்கள் இயேசுவை ஆராதிப்பதை எதிர்க்கிறீர்கள்; கத்தோலிக்கம் ஒருபோதும் திரித்துவத்தை அறிமுகப்படுத்தவில்லை; அவர்கள் பல்வேறு மதநம்பிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய ஒன்றுபட்ட மார்க்கத்தைக் கொடுத்தார்கள் அவ்வளவே; இதில் சூழ்ச்சி ஏதுமில்லை; அவர்களுடைய பிரதான நோக்கம் எப்படியாவது இந்த உலகத்தின் அசைக்கமுடியாத சாம்ராஜ்யமாகத்  தாங்களே தொடரவேண்டுமென்பதே; அதற்கு இடையூறாக இருக்கும் பல்வேறு தடைகளைக் களைந்துகொண்டே வரும்போது அக்காலத்தில் மிகப்பெரிய தடையாகவும் குழப்பத்துக்குக் காரணமாகவும் இருந்தது யூத கிறித்தவ மோதல்களே அதற்குத் தீர்வு காணும்பொருட்டாக கிறித்தவத்தில் ஏற்கனவே இருந்த உபதேசங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு யூதர்கள் ஒடுக்கப்பட்டனர்; இதற்கு விலையாக ஆதிகிறித்தவர்கள் அதாவது அப்போஸ்தலர்களுக்குப் பிறகு வந்த அடுத்த தலைமுறை கிறித்தவர்கள் சில சமரசங்களைச் செய்து கொண்டது வரலாறு; அதன் விளைவாக வேதம் சிறைவைக்கப்பட்டதும் கிறித்துவின் ஆரோக்கிய உபதேசம் முடக்கப்பட்டதும் உண்மைதான்; ஆனாலும் கர்த்தருடைய பெரிதான கிருபையினால் மீண்டும் வசனம் விருத்தியடைந்து சபைகள் பெருகத் துவங்கிவிட்டது;இது சாத்தானின் கூட்டத்தாருக்கு எரிச்சலாக இருக்கிறது; மீண்டும் குழப்பத்தைக் கொண்டு வரும் சத்துருவை உயிர்த்தெழுந்த கர்த்த‌ருடைய நாமத்தினால் சங்கரிப்போம்; எனவே கத்தோலிக்கம் திரித்துவத்தை அறிமுகப்படுத்தியது என்பதற்கு மாறாக கத்தோலிக்கம் திரித்துவத்தை சில சமரசங்களுடன் ஏற்றுக்கொண்டது எனும் வரலாற்று உண்மையை கிறித்துவின் அடியவர்கள் அறிய வேண்டுகிறேன்.

அன்றைக்கு அரசாங்கங்கள் சபை வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்தது; இன்றோ கள்ள உபதேசங்களே அச்சுறுத்தலாக இருக்கிறது; நமக்குள் மோதல்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதால் சபைக்கு வெளியிலிருந்து உபத்திரவம் இல்லை; ஆனால் உபத்திரவம் இல்லாமல் சபை வளர்ந்ததில்லை என்பதால் சபையானது உயிர்மீட்சியடைந்து மீண்டும் உபத்திரவங்களை நோக்கி முன்னேறினால் மட்டுமே கர்த்தருடைய வருகை சம்பவிக்கும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

எங்களைவிட நீங்களே திரித்துவம் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்; இயேசுவை ஆராதிக்கவோ, தொழவோ, பணிந்துகொள்ளவோ , ஸ்தோத்தரிக்கவோ கூடாது என்று சொல்லும் யாராக இருந்தாலும் அல்லது அவர்களோடு சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும்- அது சுந்தர் அவர்கள் உட்பட எங்களுக்கு எதிரிகளே; இயன்றமட்டும் உங்களை ஆதாயப்படுத்த முயற்சிப்போம், ஆனாலும் எங்களையே கவிழ்த்துப்போட நீங்கள் எண்ணினால் கைகளை உதறிவிட்டு வெளியேறுவோம்..!

"தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். (அப்போஸ்தலர்.
20:26,27 )

இந்த குறிப்பிட்ட வசனத்தின் பின்னணியிலும் இன்னும் நேரடியாகவும்
"..கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் .." (அப்போஸ்தலர்.16:31)என்று உள்ளதே, அப்படியானால் கர்த்தராகிய இயேசுகிறித்துவை விசுவாசிப்பது என்றால் என்ன என்று எனது அன்புக்குரிய வாசகர்கள் யோசிக்கட்டும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அறைகூவல் என்றால் என்ன‌.? அறையிலிருந்து கூவிக் கொண்டிருப்பது அறைகூவல் எனப்படும்; நைனா, இங்கே யாரும் ஒருபோதும் திரித்துவம் என்ற வார்த்தையை எமது உபதேசத்துக்கு ஆதாரமாகப் பயன்படுத்தவே இல்லை; ஆனால் கிறித்துவின் எதிரிகளான நீங்களே அதனை மீண்டும் மீண்டும் எடுத்து வைத்துக்கொண்டு திருத்தி திரித்து திரிந்து கொண்டிருக்கிறீர்கள்; இந்நிலையில் அறைகூவல் விடுகிறாராம், அறைகூவல்..! நான் அங்குமிங்கும் புலம்பித் திரிவதாகக் கூறி விமர்சித்த கோவை பெரியன்ஸ் இந்த பெரியவரின் புலம்பலுக்கு என்ன பதில் சொல்லுவாரோ..? நீங்களெல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுதானே, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ..!

// திரித்துவம் திரித்துவம் என வாய்கிழியப் பேசும் அனைவருக்கும் ஓர் அறைகூவல் விடுக்கிறேன். உங்கள் திரித்துவத்தில் மெய்யாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், திரித்துவக் கொள்கைகள் என்னென்ன என்பதை தகுந்த வசன ஆதாரத்துடன் விபரமாக எழுதி எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்படி கேட்கிறேன். பிறரோடு கலந்தாலோசிக்காமல்  (???) திரித்துவம் பற்றி நீங்கள் அறிந்ததை அப்படியே எழுதி அனுப்பும்படி கேட்கிறேன். அதன்பின் உங்கள் கொள்கை விபரீதங்கள் என்னென்ன என்பதை வசனஆதாரத்துடன் நான் வெளிப்படுத்திக் காட்டுகிறேன்.//

நீங்கள் நினைப்பது போன்ற‌ திரித்துவம் என்று எதையும் கொள்கையாக நாங்கள் இங்கே பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கவில்லை; ஆனால் இயேசுவை தொழுவது வேறு மரியாதை செலுத்துவது பணிந்துகொள்வது வேறு கீழ்ப்படிவது வேறு அவருடைய சித்தம் செய்வது வேறு அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது வேறு என்று பல்வேறு கொள்கைக் குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் நீங்கள் புறசாதிகள் இரட்சிக்கப்பட பிதாவினால்  கொடுக்கப்பட்ட‌ நாமமாகிய இயேசு நாமத்தைப் புறக்கணித்து தேவ தூஷணம் செய்கிறீர்கள்; உங்கள் மேட்டிமையான இருதயத்துக்கும் விருத்தசேதனம் செய்யப்படாத காதுகளுக்கும் நேராக தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறது,நைனா; கண்ட நேரத்திலேயும் வெட்ட வெளியிலே போகாதிரும், சொட்டத் தலையிலே கல் ஏதாவது வந்து விழப்போகுது..!

"சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது." (
ரோமர்.1:18)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard