நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதாம் தற்போது “ஆபிரகாமின் மடியிலா, பாதாள அக்கினியிலா?”


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஆதாம் தற்போது “ஆபிரகாமின் மடியிலா, பாதாள அக்கினியிலா?”
Permalink  
 


சமீபத்தில் “கிறிஸ்துநேசன்” எனும் தளத்தைக் காண நேரிட்டது. அதில் தங்கராஜ் என்பவர் கேட்ட ஒரு கேள்வி பதிலளிக்கப்படாமல் 10 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.

அவரது கேள்வி இதுதான்:

//6000 வருடங்களாக ஆதாம் உணர்வுடன் இருக்கிறார் என்கிறீர்கள். அவர் “லாசருவைப்” போல ஆபிரகாமின் மடியிலிருப்பாரா, அல்லது “ஐசுவரியவானைப்” போல பாதாள அக்கினியில் வேதனையுடன் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருப்பாரா?//

இக்கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் அதை இங்கு பதிக்கலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

6000 வருடங்கள் அல்ல, இன்னும் கிறிஸ்து வரும் நாள் மட்டும் ஆதாம் அவனுக்கு (அவனுக்குள் மாம்சமான எல்லா மனிதர்களும் தான்) நியமிக்கப்பட்ட மண்ணிற்குள் மண்ணாகத்தான் இருப்பான்!! ஆதாம் மாத்திரம் அல்ல, அவனுக்குப் பின் உண்டான மனித சந்ததிகள் எல்லாருக்கும் இதே நிலைதான், இதே இடம்தான்!!

உவ‌மைக்காக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ஆபிர‌காமே அதே ம‌ண்ணில் தான் போயிருக்கிறார், கிறிஸ்து வ‌ரும் நாள் ம‌ட்டும்!! உயிர்த்தெழுத‌லில் இவ‌ர்க‌ள் யாவ‌ரும் ப‌ங்குபெறும் நாள் ம‌ட்டும், ஆபிர‌காமின் ம‌டியும், எரி ந‌ர‌க‌மும் ஒன்றும் கிடையாது!!

ஆதி 3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

1 கொரி 15:21. மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. 22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

ம‌ற்ற‌ப்ப‌டி ஆதாமிற்கு எந்த‌ விசேஷ‌மான‌ அல்ல‌து மோச‌மான‌ இட‌ம் என்று ஒன்றும் இல்லை!! மர‌ண‌ம் என்றால் என்ன‌வென்று தெரிந்துகொண்டாலே போதும்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பதில் தந்த பெரியன்ஸ்-க்கு நன்றி.

சகோதரரின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

ஆனால் கொல்வின் இன்னும் பதில் தராமல் மவுனம் சாதிக்கிறார். இது பற்றி சில்சாம் கேள்வியெழுப்பியபோது, “கிறிஸ்து நேசன்” தளத்தில் பதில் தராத கொல்வின், சில்சாமின் தளத்தில் பதில் தந்துள்ளார். அவர் தந்த பதிலும் அதற்கான தொடுப்பும்:

//சகோ. சில்சாம்

இதைக்குறித்து எழுதவதென்றால் பக்கம் பக்கமாகக எழுத வேண்டும். ஆயினும் நான் ஒரு காரியம் செய்துள்ளேன். சகோ. வசந்தகுமார் எழுதிய நூல் என்றினை தரவேற்றம் செய்துள்ளேன். அதில் பின்வரும் விடயங்கள் காணப்படுகின்றன. ......//

//உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என நம்புகிறேன். இலங்கையில் இந்த நூல் பல பதிப்புகளை கண்டு விற்பனையில் சாதனை படைத்தது. தற்போது விற்பனைக்கும் கிடைப்பதில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உங்களுக்கு தந்துள்ளேன். படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.//

தொடுப்பு: http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=40027002

நறுக்குத் தெரித்தாற்போலுள்ள கேள்விக்கு நறுக்குத் தெரித்தாற்போல் பதில் சொல்லாமல், பக்கம் பக்கமாக எழுதவேண்டும் என்று சொல்லி ஒரு புத்தகத்தை கைகாட்டி விட்டு ஒதுங்கிவிட்டார், கொல்வின்.

கிறிஸ்து நேசன் தளத்தில் கேள்வி எழுப்பின நண்பர் தங்கராஜ், யாரும் பதிலளிக்காத நிலையில் இவ்வாறு எழுதியுள்ளார்.

//சகோ.கொல்வின் மட்டுமின்றி, "மரித்தபின்னர் மனிதன் தன் ஆத்துமாவில் உணர்வுள்ளவனாக இருப்பான்" என நம்புகிற எவராலுமே எனது கேள்விக்குப் பதில் தரஇயலாது.

எனது கேள்வி இதுதான்.

//6000 வருடங்களாக ஆதாம் உணர்வுடன் இருக்கிறார் என்கிறீர்கள். அவர் “லாசருவைப்” போல ஆபிரகாமின் மடியிலிருப்பாரா, அல்லது “ஐசுவரியவானைப்” போல பாதாள அக்கினியில் வேதனையுடன் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருப்பாரா?//

எனது கேள்விக்குப் பதிலாக: “லாசருவைப் போல ஆபிரகாமின் மடியில் ஆதாம் இருப்பார்" என்று சொன்னால், தேவனின் கட்டளையை மீறின ஆதாமை ஆபிரகாமின் மடிக்கு அனுமதித்த தேவன், அந்த “ஐசுவரியவானை” மட்டும் ஆபிரகாமின் மடிக்கு அனுமதிக்காமல், பாதாள அக்கினியில் வேதனையுடன் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்கச் செய்தது ஏன் எனும் கேள்வி எழும்பும். (இக்கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல இயலாது என்பது அடுத்த விஷயம்).

தொடர்கிறது ...//


தங்கராஜின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத கொல்வின், தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார். ஆனால் இடையில் நுழைந்த சில்சாம், தானும் பதில் தெரியாத நிலையில், தனது வழக்கமான பாணியில் எதிராளியின் வாயை அடக்க முயல்கிறார்.

சில்சாம்:
//நண்பரே (Thangaraj),தங்கள் கேள்விகள் அறிவை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலோ அல்லது அறிவுவிருத்தியைக் குறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் நோக்கிலோ இருந்தால் உடனுக்குடன் பதில் பெறமுடியும்;ஆனால் எதிராளியை எதிரியாக பாவித்து எப்படியாவது வீழ்த்திவிடவேண்டுமென்ற வேகத்தில் வருவீர்களானால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

இந்த குறிப்பிட்ட கட்டுரையின் தொடர்பாக எதுவும் சொல்லாமல் வாதத்தை எங்கோ கொண்டு செல்லுவதால் உமக்கோ எனக்கோ ஒரு பயனும் இராது.

உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடியின் முன்னின்று இயேசு தெய்வமல்ல, என்று சத்தமாக சொல்லுங்கள்; அதனால் உங்களுக்கு நிம்மதி கிடைத்தால் எனக்கு சந்தோஷம்; ஆனால் இங்கே வந்து அவர் தெய்வமில்லை,என்று சொல்லுவீர்களானால் அதைப் போன்ற இழிவான செயல் ஏதுமிராது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;

எதைச் சொன்னாலும் அதிலிருந்து ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பும் உத்தியைக் கையாளும் வாதநோய் கொண்டவர்களுடன் நேரத்தை செலவிட இங்கே யாருக்கும் மனமில்லை என்பது எனக்குப் புரிகிறது;உங்களுக்கு அது புரிகிறதா..? //

இப்படித்தான் எந்த விஷயத்திலும் தங்களால் தாக்குப்பிடிக்கும் நிலைவரை எதையாவது சொல்லி விவாதிக்கும் சில்சாம் போன்றவர்கள், இனி தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை வந்ததும், எதிராளியைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

கண்ணாடி முன்னின்று “இயேசு தெய்வமல்ல” எனக் கூறும்படி தங்கராஜுக்கு ஆணையிடுகிற சில்சாம், அவரும் அம்மாதிரி “இயேசு தான் ஒரே தெய்வம்” என தன் வீட்டுக் கண்ணாடி முன்னின்று சொல்லிக் கொள்ளவேண்டியதுதானே?

இத்தனைக்கும் “இயேசு தெய்வமல்ல” என நண்பர் தங்கராஜ் தனது பதிவுகளில் கூறவேயில்லை. அதுபற்றிய விவாதத்தில்தான் அவர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதற்குள் முடிவை நோக்கிச் சென்று, சில்சாம் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்.

வாதநோய் கொண்டவர் என தங்கராஜைச் சொல்லி பழிக்கிற சில்சாம் எவ்வளவாய் வாதம் செய்கிறார் என்பதை உலகறியும். விவாதமேடை எனும் தளத்தை நிர்வகித்து அதில் விவாதங்கள் எனும் பகுதியையும் உருவாக்கி வைத்துக்கொண்டு மற்றவர்களைப் பார்த்து “வாத நோய் கொண்டவர்” எனக் கூறி தனது அறிவீனத்தை மீண்டும் சில்சாம் நிரூபித்துள்ளார்.

சில்சாம் இந்நிலையில் நின்றுகொண்டிருக்க, சாலொமோன் எனும் புதியவர், சற்று நீண்ட விளக்கத்துடனான ஒரு பதிலைக் கூறியுள்ளார். அப்பதிலில் தங்கராஜின் கேள்விக்கு அவர் சொல்லும் விடை:

//Adams soul may be rested in heaven. OR God may be kept ADAM's soul in paradise alone. But according to my readings, I dont know that now currently the souls are in PARADISE. So I personally belive Adams soul must be rested in a seperate part of the heaven.//

அதாவது, “ஆதாமின் ஆத்மா பரலோகத்தில் இளைப்பாறலாம்; அல்லது தேவன் ஆதாமின் ஆத்மாவை பரதீசில் மட்டும் வைத்திருக்கலாம். ஆகிலும் என்னைப் பொறுத்தவரை, தற்போது ஆத்துமாக்கள் பரதீசில் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது. எனவே நான் தனிப்பட்ட முறையில் நம்புவது: ஆதாமின் ஆத்துமா பரலோகத்தின் ஒரு தனிப்பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே.”

அதாவது: தேவனுக்குக் கீழ்ப்படியாத ஆதாம் கீழ்ப்படியாமையின் விளைவாக சரீரத்தில் மரித்தார்; ஆனால் அவரது ஆத்துமாவோ பரலோகத்தின் ஒரு பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்.

இப்படிச் சொல்லும் அவர், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் அனைவரும் பரதீசிக்குச் சென்றிருப்பார்கள் என்றும், ஆதாமும் பரதீசிக்குத்தான் சென்றிருப்பார் என்றும் கூறுகிறார்.

ஆக, இவரது கருத்துப்படி ஆதாம் பரதீசிலும் இருப்பார், பரலோகத்திலும் இருப்பார் என்றாகிறது. வசனஆதாரம் இல்லாமல் தங்கள் சுயகற்பனையின்படி பேசுகிறவர்கள் அனைவரும் இம்மாதிரி முரண்பாடான நிலையைத்தான் அடையவேண்டி வரும்.

நீதிமான்கள்தான் பரதீசுக்குச் செல்வார்கள் எனச் சொல்லும் இவர், ஆதாமும் பரதீசிக்குச் சென்றிருப்பார் என்கிறார். அவ்வாறெனில் “ஆதாம் நீதிமானா?” தேவனுக்குக் கீழ்ப்படியாத அவரை எப்படி நீதிமான் எனச் சொல்லமுடியும்?

இத்தளத்தை சாலொமோன் பார்ப்பாரோ இல்லையோ, ஆனால் சில்சாம் நிச்சயம் பார்ப்பார், கொல்வினும் பார்ப்பார் என நம்புகிறேன். அவர்கள் இவ்விஷயத்தில் ஒரு தெளிவான பதிலைச் சொல்வார்களா? அல்லது வழக்கம்போல் சப்பைக்கட்டு கட்டுவதிலும் எதிராளியைத் தாக்குவதிலும் இறங்குவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: ஆதாம் தற்போது “ஆபிரகாமின் மடியிலா, பாதாள அக்கினியிலா?”
Permalink  
 


கொல்வின் அவர்களுக்கு வஸந்தகுமார் எழுதும் வேதாகம கட்டுறைகள் வேதத்தை காட்டிலும் பெரிய பொக்கிஷம் என்று நினைத்து அடிக்கடி வசனத்தை காட்டிலும் வஸந்தகுமாரை தான் எழுதுவார், சில்சாம் அவர் தகுதிக்கு ஏற்பவும் ஒன்றும் இல்லாதவரிடமிருந்து வேதத்தை கற்றுகொண்டவர், அவரிடம் பதில் இல்லை, நையாண்டியும், சாபத்துடன் கூடிய விமர்சனமும், தன்னை கிறிஸ்துவின் நேரடியான காரியதரிசியாக நினைத்து கிறிஸ்தவ பாதுகாவலராக பாவிக்கிற ஒரு மனிதன், ஐசுவரியவான் லாசருவில் கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில் என்ன, அதன் அர்த்தம் கூட தெரியாது, பாரம்பரியம் அப்படி தான் அவர்களுக்கு சொல்லி தந்திருக்கிறது!!

பதில் தெரியாவிட்டால் திசை திருப்ப வேண்டியது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட தந்திரம்!! இப்படி பட்ட தந்திரத்தினால் தான் பிசாசு தொடக்க முதல் கிறிஸ்துவத்திற்குள் களையை விதைத்துக்கொண்டு இருக்கிறான்!! முன்பு எல்லாம் ஊழியக்காரனுக்கு ஒரு திமிர் இருந்தது, அதாவது, அவர்களிடம் யாரும் கேள்வி கேட்காமல் அவர்கள் சொல்லுவது "தேவ செய்தி" என்று அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, அதை தான் இப்பொழுது சில்சாம் செய்துக்கொண்டு இருக்கிறார், அவரை யாராவது எதிர்த்தாலோ, அல்லது எதிர் பதில் பதிந்தாலோ, அல்லது அவர் கொண்டிருக்கும் பாரம்பரிய விசுவாசத்திற்கு எதிராக ஏதாவது எழுதினாலோ, மூர்கத்தனமான வார்த்தைகளால் பதில் தந்தவரை சாடுவார், அதற்கு ஆமாம் சாமி போடவும், அட அப்படியா, சில்சாம் சரியாக தான் எழுதுகிறார் என்று சொல்லும் ஒரு கூட்டம் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும், இந்த பாராட்டுக்களை எதிர்ப்பார்த்து இருக்கும் சில்சாம் அடுத்த பதிவில் அதற்கு நன்றி தெரிவிப்பார்!! இதை காட்டிலும் வேறு என்ன தெரியும்!!

மரணம் என்றால் என்ன, ஆத்துமா என்றால் என்ன, என்று தெரியாத இந்த கபட கூட்டத்தாருக்கு ஐசுவரியவான் லாசரு புரியவே புரியாது!! அக்கினியில் எரிந்துக்கொண்டிருப்பவனுக்கு "ஒரு" சொட்டு தண்ணீர் போதுமா, அந்த அக்கினிக்கு அருகில் வந்தால் அதுவும் காணாமல் போய் விடுமே!! இவர்களிடம் கேள்வி கேட்டால், இவர்கள் அதிலும் விமரசக பிரமுகர் சில்சாம் உடனே தன் சுத்தியல் கோடாளியை எடுத்து வந்து அவர் பாணியில் ஒரு மிரட்டு மிரட்டி அவரின் சொருபத்தை காண்பித்து போவார்!!

கொல்வின் என்பவர் கத்தோலிக்க பாரம்பரியத்தில் இருப்பவர், சில்சாம் என்பவர் மார்க்கம் மாற்றிக்கொண்டு வந்தவர், இவர்கள் பாரம்பரியத்தினால் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டவர்கள், இவர்களுக்கு பதில் தெரியாது, சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!! வசனமே இல்லாத விவாத மேடை (ஒரே ராகத்தில் பாடுவதை தான் இவர்கள் விவாதம் என்பார்கள்) பக்கம் பக்கமாக எழுதுவார்கள்!! நண்பர் தங்கராஜின் நியாய‌மான கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் ஒன்று பதில் கேட்க வேண்டும், அல்லது ஒதுங்கி இருந்து பார்க்க வேண்டும்!!

இவர்களுக்குக்கு சொல்லவேண்டிய சில வசனங்கள்:

மத்தேயு 22:29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

 பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக என்று எழுதியிருக்கிறதே என்று சொன்னால், வீட்டு வாசலில் நின்று இயேசு தான் அந்த தேவன் என்று பிதற்றுகிறார்கள்!! அட அறிவீனர்களே, இயேசு தான் அந்த தேவன் என்றால் ஏன் இயேசு கிறிஸ்து மூலமாய் அந்த தேவனை மகிமைப்படுத்துங்கள் என்று பேதுரு எழுதுகிறார் என்று கொஞ்சம் கூட வசனத்தை படித்து யோசிக்க முடியாதா!!

II தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

திருவசனத்தினால் தான் உபதேசம் கொடுக்க சொல்லுகிறாரே தவிர, பாரம்பரிய விசுவாசத்தினால் அல்ல‌!!

ஐசுவரியவான் லாசருவை விளக்கினால் இவர்கள் புத்திக்கு எட்டாது, ச்சீ, ச்சீ இந்த திராட்சை புளிக்கும் என்பார்கள், பாரம்பரிய விசுவாசிகள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard