நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?


Militant

Status: Offline
Posts: 830
Date:
வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?
Permalink  
 


தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, தம்மை மணவாளனுக்கு ஒப்பிட்டுக் கூறுவதை மத்தேயு 9:14,15 வசனங்களில் பார்க்கிறோம். மணவாளன் என ஒருவர் இருந்தால் மணவாட்டி என ஒருவரும் இருக்கவேண்டும். அவ்வாறெனில் கிறிஸ்துவாகிய மணவாளனின் மணவாட்டி யார்? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

எபேசியர் 5:25-27 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

புருஷன் மனைவிக்கு ஒப்பாக, கிறிஸ்துவையும் அவரது சபையையும் ஒப்பிட்டு இவ்வசனங்களில் பவுல் கூறுகிறார். எனவே கிறிஸ்துவின் சபையே அவரது மணவாட்டி என அறிகிறோம். கிறிஸ்துவின் சபையாகிய மணவாட்டியைக் குறித்து சொல்கிற வேதாகமம், மற்றொரு பெண்ணைக் குறித்தும் கூறுவதை பின்வரும் வசனத்தில் பார்க்கிறோம்.

வெளிப்படுத்துதல் 14:8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.

பாபிலோன் மகா நகரம் என ஆரம்பத்தில் சொன்ன தூதன், பின்னர் அதை வேசித்தனம் செய்த ஒரு பெண்ணாகக் கூறுகிறான். கிறிஸ்துவின் மணவாட்டியும் பெண்தான், பாபிலோன் மகா நகரமும் ஒரு பெண்தான். ஆனால் கிறிஸ்துவின் மணவாட்டியானவள் கற்புள்ள கன்னிகையாகக் காட்டப்படுகிறாள் (2 கொரி. 11:2); மகா நகரமாகிய பாபிலோனோ ஒரு வேசியாகக் காட்டப்படுகிறாள்.

எனவே பாபிலோன் நகரமாகிய வேசியும் கிறிஸ்துவாகிய மணவாளனுடன் உறவுடையவள்தான்; ஆகிலும் வேறு பல ஆண்களுடனும் அவள் உறவுகொள்பவளாக இருக்கிறாள். எனவே அவளுங்கூட ஒரு சபையாகத்தான் இருக்கிறாள். அந்த பாபிலோன் சபையாகிய வேசி சபை எது? இக்கேள்விக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம்.

பதில் தெரிந்த அன்பர்கள் தகுந்த வசன ஆதாரத்துடன் தங்கள் பதிலைக் கூறலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

///அந்த பாபிலோன் சபையாகிய வேசி சபை எது? இக்கேள்விக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம். பதில் தெரிந்த அன்பர்கள் தகுந்த வசன ஆதாரத்துடன் தங்கள் பதிலைக் கூறலாம். ///

சகோதரர் ''அன்பு'' அவர்கள்
வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?  என்ற திரியில்  அருமையான கேள்வியை முன்வைத்து இருக்கிறார். நிச்சயமாக இந்த வெளிப்படுதல் 14 :8 வசனத்துக்கு கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளவர்களோ  அல்லது திருத்துவத்துக்கு ஆதரவாக பேசுபவர்களோ பதில் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. காரணம் பாபிலோனிய மகா வேசி குறிப்பது உலகத்தில் உள்ள பொய் மதத்தை அதில் ரோமன் கதோலிக்கமும்; அதில் இருந்து பிரிந்து வந்த புரட்டஸ்தாந்து சபையையும் போதனைகளையும் குறிக்கிறது. மற்றும் ''அன்பு'' அவர்கள் கேட்ட கேள்விக்கு நானும் எனக்கு தெரிந்த பதிலை சொல்வது நலமாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.   நான் கீழே எழுதும் பதிவுகளில் ஏதும் உண்மை சத்தியத்துக்கு அல்லது போதனைகளுக்கு முரணாக இருந்தால் அன்பு அவர்கள் அதை தெளிவுபடுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். காரணம் நான் வயதில்  சிறியவனாக இருப்பதினால் வேதஅறிவு கூட அது போலவே இருக்கும். நன்றி

மகா பாபிலோனை அடையாளம் காணுதல்:-     வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள சில வார்த்தைகளை அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
வெளி 1 : 1 ''சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்''.


உதாரணத்துக்கு, நெற்றியில் ''மகா பாபிலோன்'' என்ற பெயர் எழுதப்பட்டு இருந்த ஒரு வேசியைப்  பற்றி வெளிப்படுத்துதல்  சொல்கிறது.  அந்த வேசி, 'கூட்டங்கள் மீதும் ஜாதிகள் மீதும்'  உட்கார்ந்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

வெளி 17 : 1 ,5 ,15   ''1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
15. பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.


இங்கே குறிப்பிட்டுள்ளபடி சொல்லர்த்தமான எந்தப் பெண்ணாலும் அப்படி உட்கார முடியாது; ஆக, மகா பாபிலோன் அடையாள அர்த்தமுடையவையாகவே இருக்கவேண்டும். அப்படியானால்,  அந்த வேசி எதற்கு அடையாளமாக இருக்கிறாள்?

அடையாளபூர்வமாக அந்தப் பெண், ''பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம்'' என்பதாக வெளிப்படுதல் 17 :18 விமர்சிக்கிறது. ''நகரம்'' என்ற வார்த்தை ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் தொகுதியையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த ''மகா நகரம்'' ''பூமியின்  ராஜாக்கள்'' மீது அதிகாரம் செய்வதால், மகா பாபிலோன் என்ற பெயருடைய அந்தப் பெண் மிகுந்த செல்வாக்குள்ள உலகளாவிய ஊர் அமைப்பாகத்தான் இருக்கவேண்டும். அதனால், மகா பாபிலோனை ஓர் உலகப் பேரரசு என்று மிகச் சரியாகவே நாம் அழைக்கலாம்.

எத்தகைய பேரரசு அது? 

அது ஒரு மதப் பேரரசு. இந்த முடிவுக்கு வர வெளிப்படுதல் புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன என்பதை அடுத்த பதிவில் கவனிப்போம் .......



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

தொடர்ச்சி ....

வெளிப்ப 17 :1 ,2 ''1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
2. அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி'';

யாக்கோபு 4 :4 ''விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்''.

ஒரு பேரரசு என்பது அரசியல் பேரரசாகவோ, வர்த்தகப் பேரரசாகவோ, மதப் பேரரசாகவோ இருக்கலாம். மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் ஓர் அரசியல் பேரரசாக இருக்க முடியாது. ஏனெனில் ''பூமியின்  ராஜாக்கள்'' அதாவது இவ்வுலக அரசியல் அமைப்புக்கள், அவளோடு ''வேசித்தனம் பண்ணியதாக''  கடவுளுடைய வார்த்தை தெரிவிக்கிறது. வேசித்தனம் செய்தது இவ்வுலக ஆட்சியாளர்களோடு அவள் கூட்டுச் சேர்ந்து இருப்பதைக் குறிக்கிறது. அதோடு, அவள் ''மகாவேசி'' என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தையும் அது அளிக்கிறது.

வெளி 18 அதிகாரம்  3. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

9. அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
10. அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
15. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
16. ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.
17. மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,

மகா பாபிலோன் ஒரு வர்த்தகப் பேரரசாகவும் இருக்க முடியாது. ஏனெனில் ''பூமியில் வர்த்தகர்'' அதாவது வணிக அமைப்புக்கள், அவளுடைய அழிவின் போது அவளுக்காகத் துக்கித்து அழுது கொண்டிருப்பார்கள். சொல்லப் போனால், ராஜாக்களும் வர்த்தகர்களும் மகா பாபிலோனை ''தூரத்திலிருந்து'' பார்த்துக் கொண்டிருப்பது போல விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, மகா பாபிலோன் என்பது ஓர் அரசியல் பேரரசும் அல்ல, வர்த்தகப் பேரரசும் அல்ல, ஆனால் அது ஒரு மதப் பேரரசு என்ற முடிவுக்கு வருவதே நியாயமானது.

**மகா பாபிலோன் எல்லா ஜாதிகளையும் தனது ''சூனியத்தால்'' மோசம் போக்கிறாள் என்ற வசனம், அவள் ஒரு மதப் பேரரசு தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது**.

வெளிப் 18 :23   '' விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே''.

எல்லா விதமான சூனிய வேலைகளும் மத சமந்தமானவை என்பதாலும், அவற்றிற்குப் பேய்கள் தான் காரணம் என்பதாலும் மகா பாபிலோன் ''பேய்களுடைய குடியிருப்பு''  என்று பைபிள் அழைப்பதில் ஆச்சரியமே இல்லை. ( வெளிப்  18 :2 /  உபாகமம் 18 :10 -12 ) இந்தப் பேரரசு  'தீர்க்கதரிசிகளையும்' 'பரிசுத்தவான்களையும்'' துன்புறுத்துவதன் மூலம் மெய் வணக்கத்தைச் தீவிரமாய் எதிர்த்து வருகிறது எனவும் விவரிக்கப் பட்டுள்ளது:

 வெளி 18: 24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

உண்மையில், மெய் வணக்கத்தை மகா பாபிலோன் அந்தளவு அதிகமாக வெறுப்பதால், ''இயேசுவினுடைய மணவாட்டிகளை'' அவள் கொடூரமாகத் துன்புறுத்தி, கொலைகூட செய்கிறாள். வெளி 17 : 6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ஆகையால், மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் பொய் மத உலகப் பேரரசே அடையாளப்படுத்துகிறாள். யேகோவா தேவனை எதிர்த்து நிற்கிற எல்லா மதங்களுமே அந்தப் பொய் மதங்களில் அடங்கும்......  பாபிலோனியன் நகரமாகிய வேசியின் பதிவுகள் தொடர்ந்து வெடிக்கும் .....



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?
Permalink  
 


சகோ.டினோ அவர்கள் எனது கேள்விக்கான பதிலை தகுந்த வசன ஆதாரங்களுடன் கூறி வருகிறார். எனது பணியை எளிதாக்கிய சகோதரருக்கு நன்றி.

தொடர்ந்து உங்கள் பதிலைப் பதியுங்கள் சகோ.டினோ அவர்களே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நாம் அங்கம் வகிப்பது பாபிலோன் வேசியின் சபையா அல்லது கற்புள்ள கன்னிகையாகிய மணவாட்டி சபையா என்பதை அறிவது மிக அவசியம்.

சகரியா 2:7,8 பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்;

தேவன் நமக்கு மிகக்கண்டிப்பானதொரு நிபந்தனையை சகரியா தீர்க்கதரிசி மூலம் விதித்துள்ளார். ஆம், நாம் குடியிருப்பது பாபிலோன் சபையா என்பதை ஆராய்ந்தறிந்து அதைவிட்டு வெளியே வருவது நமது கடமையாகும்.

இக்கடமையைச் செய்தால்தான் கிறிஸ்துவால் நமக்கு மகிமையுண்டாகும் என திட்டவட்டமாக தேவன் கூறுகிறார். எனவே தள அன்பர்கள் இத்திரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் குடியிருப்பது பாபிலோன் சபையா என்பதை அறியும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?
Permalink  
 


இந்தப் பகுதியே தொடரலாம் என்று பார்த்தேன், ஆனால் யாரும் இதற்கு பதில் கொடுக்க  முன் வரவில்லை.
தமிழ்  கிறிஸ்தவ தளத்து வேதப் பண்டிதர்கள் யாராவது இதற்கு முயற்சிக்கலாமே.



-- Edited by Dino on Friday 1st of April 2011 11:16:39 AM

__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?
Permalink  
 


மகா பாபிலோன் நகரமாகிய வேசி யார் எனும் கேள்விக்கு அழகாகப் பதிலளித்துவந்த சகோ.டினோ அவர்கள், கீழ்க்காணும் பதிவில் என்ன சொல்லவருகிறார் என்பது  தெரியவில்லை.

//இந்தப் பகுதியே தொடரலாம் என்று பார்த்தேன், ஆனால் யாரும் இதற்கு பதில் கொடுக்க  முன் வரவில்லை.
தமிழ்  கிறிஸ்தவ தளத்து வேதப் பண்டிதர்கள் யாராவது இதற்கு முயற்சிக்கலாமே.//

சகோ.டினோ மகா பாபிலோன் நகரத்தைப் பற்றி இதுவரை தந்துள்ள குறிப்புகள் எல்லாவற்றிற்குமே தகுந்த வசனஆதாரங்களைத் தந்துள்ளார். அவரது கருத்து, மகா பாபிலோன் என்பது முழுக்க முழுக்க மதரீதியான அமைப்பு என்பதாக உள்ளது. அதாவது அது ஒரு வர்த்தக அமைப்பாகவோ அரசாங்க அமைப்பாகவோ இல்லாமல், மதரீதியான அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார். அதனடிப்படையில் கத்தோலிக்க மத அமைப்பு மற்றும் அதிலிருந்து பிரிந்துவந்த பிற மத அமைப்புகள் அனைத்தையும் சேர்த்து அவற்றையே பாபிலோனிய சபை என்கிறார்.

dino wrote:
//பாபிலோனிய மகா வேசி குறிப்பது உலகத்தில் உள்ள பொய் மதத்தை அதில் ரோமன் கதோலிக்கமும்; அதில் இருந்து பிரிந்து வந்த புரட்டஸ்தாந்து சபையையும் போதனைகளையும் குறிக்கிறது.//

ஆனால் மகா பாபிலோனைக் குறித்து ஒரு முக்கியமான குறிப்பை பின்வரும் வசனம் தருகிறது.

வெளி. 17:5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

பூமியிலுள்ள அருவருப்புகளுக்குத் தாய் என மகா பாபிலோனைக் குறித்து இவ்வசனம் கூறுவதால், மகா பாபிலோன் என்பது பூமியிலுள்ள சகல அருவருப்புகளுக்கும் பிறப்பிடமாகவும் இருக்க வேண்டும் என அறிகிறோம்.

இன்றைய நிலவரப்படி பார்க்கையில், பல கத்தோலிக்க சபைகளில் ஹோமோசெக்ஸ் போன்ற அருவருப்புகள் அங்கீகரிக்கப்பட்டுவருவதாக செய்திகள் மூலம் அறிகிறோம். புராட்டஸ்டண்ட் சபைகளிலும், மத்தேயு 5:32-க்கு மாறாக, விவாகரத்து செய்வதும் மறுமணம் செய்வதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதையெல்லாம் வைத்து, இவ்வமைப்புகளை “பூமியின் அருவருப்புக்கு தாய்” எனக் கூற முடியுமா என்பதே கேள்வி.

இக்கேள்வியின் அடிப்படையில் சிந்தித்து தங்கள் கருத்தைப் பதிக்குமாறு சகோ.டினோ அவர்களையும் பிற அன்பர்களையும் வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

தன்னை தாய் சபை என்றே கத்தோலிக்க சபை சொல்லுவது இந்த வசனத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

///பூமியிலுள்ள அருவருப்புகளுக்குத் தாய் என மகா பாபிலோனைக் குறித்து இவ்வசனம் கூறுவதால், மகா பாபிலோன் என்பது பூமியிலுள்ள சகல அருவருப்புகளுக்கும் பிறப்பிடமாகவும் இருக்க வேண்டும் என அறிகிறோம்.

இன்றைய நிலவரப்படி பார்க்கையில், பல கத்தோலிக்க சபைகளில் ஹோமோசெக்ஸ் போன்ற அருவருப்புகள் அங்கீகரிக்கப்பட்டுவருவதாக செய்திகள் மூலம் அறிகிறோம். புராட்டஸ்டண்ட் சபைகளிலும், மத்தேயு 5:32-க்கு மாறாக, விவாகரத்து செய்வதும் மறுமணம் செய்வதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதையெல்லாம் வைத்து, இவ்வமைப்புகளை “பூமியின் அருவருப்புக்கு தாய்” எனக் கூற முடியுமா என்பதே கேள்வி.///

சகோதரர்  அன்பு அவர்களே, நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்றே பதில் சொல்லவிரும்புகிறேன்!!!  பூமியின் அருவருப்புக்கு தாய் என்ற சொல் வெளிப்படுத்தல்  17:5 - ல் இவ்வாறு    வாசிக்கிறோம்:-   மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.  இதை அடிபடையாக கொண்டு நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலை விரிவாக ஆராய்வோம்!!!

முதலாவது மகா பாபிலோனின் முழுப்பெயர்  என்ன?  அதன் உட்பொருள் என்ன?
எவ்வகையான மிருகத்தை அந்த மகா வேசி சவாரிசெய்ய தேர்ந்துஎடுகிறாள்? மகா பாபிலோனாகிய அந்த அடையாளக் குறிப்பான வேசியே யோவான் எப்படி விவரிக்கிறார் ? போன்ற கேள்வியே முதலில் ஆராய்வோம்!!!!

அந்த மகா வேசி சவாரிசெய்வதற்கு ஆபத்தான மிருகத்தை தெரிந்துகொண்டு இருப்பதை குறித்து யோவான்  விரைவில் கற்றுக்கொள்ள இருக்கிறார். எனினும், முதலில், அவர் மகா பாபிலோனிடமே தன கவனத்தை திருப்புகிறார். அவள் ஆடம்பரமாக தன்னை அலங்கரித்து இருக்கிறாள், ஆனால் என்னே அருவருக்கதக்கதாய் இருக்கிறாள்!!   ''
அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். (வெளி 17 : 4 -6)

பூர்வ ரோமில் இருந்த பழக்கவழக்கத்தின்படி இந்த வேசி அவளுடைய நெற்றியில் எழுதப்படிருந்த பெயரினால் அடையாளம் கண்டுகொள்கிறாள். அது ஒரு பெரிய பெயராய் இருக்கிறது: "மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமிலுள்ள அருவருப்புக்கும் தாய்." அந்தப் பெயர் "இரகசிய" மாக இருக்கிறது. மறைவான பொருளைக் கொண்டிருக்கக் கூடிய ஏதோவொன்று. ஆனால் கடவுள் தம்முடைய உரிய காலத்தில், அந்த இரகசியத்தை விளங்கச் செய்வார். உண்மையில், இந்த விவரவிளக்கத்தை உடைய பெயரின் முழு உட்பொருளையும் பகுத்தறிந்து கொள்வதற்கு அந்தத் தூதன் இன்றுள்ள உண்மை வணக்கதவர்களுக்கு வேண்டிய தகவலை யோவானுக்கு கொடுக்கிறார். மகா பாபிலோன் எல்லா பொய் மதங்களயுமே உள்ளடக்குகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பான்மையான பிரிவுகள் உட்பட உலகத்தில் உள்ள எல்லா தனிப்பட்ட பொய் மதங்களும் அவளுடைய குமாரத்திகளாக, அவளைப் பின்பற்றி ஆவிக்குரிய வேசித்தனத்தை செய்வதின் நிமித்தம் அவள் "வேசிகளுக்குத் தாய்" ஆக இருக்கிறாள். விக்கிரகாராதனை, ஆவயுலகத் தொடர்பு, குறிசொல்லுதல், சோதிடம், கைரேகை பார்ப்பது, மனித பலி, ஆலய வேசித்தனம் மற்றும் அன்பு சொன்னது போன்று //இன்றைய நிலவரப்படி பார்க்கையில், பல கத்தோலிக்க சபைகளில் ஹோமோசெக்ஸ் போன்ற அருவருப்புகள் அங்கீகரிக்கப்பட்டுவருவதாக செய்திகள் மூலம் அறிகிறோம். புராட்டஸ்டண்ட் சபைகளிலும், மத்தேயு 5:32-க்கு மாறாக, விவாகரத்து செய்வதும் மறுமணம் செய்வதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன//  பொய்த் தேவர்களைக் கனப்படுதுவதத்க்கு குடித்து வெறித் இருத்தல் மற்றும் மற்ற கெட்ட பழக்கவழக்கங்கள் போன்ற அருவருப்பான சந்ததியே அவள் பிறப்பித்த நிமித்தம் அவள் "அருவருப்புகளுக்கும்"  தாயாக இருக்கிறாள்.

மற்றும் அன்பு கேட்ட கேள்வியே பல கேள்விகள் கேட்டு விவரிக்க முயலுகிறேன்!!!
அதாவது மகா பாபிலோன் "இரத்தாம்பரமும் சிவப்பான" ஆடை தரித்து இருப்பதாக காணப்படுவதும்  "பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்" பட்டிருப்பது ஏன் பொருத்தமானது?
அருவருப்புக்களால் நிறைந்த பொத்பாதிரத்தில்  இருந்தது எதற்கு அடையாளமாக இருந்தது? இந்த அடையாளக்குறியான வேசி எக்கருத்தில் குடித்து வெறித்திருகிறாள்?  என்பதையும் எனது அடுத்த பதிவில் ஆராய்வோம் !!!  தொடரும் .....



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

மகா பாபிலோன் "இரத்தாம்பரமும் சிவப்பான ஆடை" யையும் தரித்திதிருக்கிறாள், அரச குடும்பத்தின் வண்ணங்களாக அவை இருக்கின்றன. மேலும் அவள் "பொன்னினாலும் இரத்தத்தினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்"திருக்கிறாள். எவ்வளவு பொருத்தமா  இருக்கிறது!!!  காணப்படுகிற அணைத்து மகத்தான கட்டிடங்கள், அரிதாக காணப்படும் சிலைகள் சித்திரங்கள், விலைமதிப்புள்ள உருவச்சிலைகள், மற்ற மத உபகரணங்கள், இந்த உலக மதங்கள் சேர்த்துவைக்கும் சொத்துக்கள் மேலும் பெரும் நிதித்தொகைகள்  போன்றவற்றை சற்று நினைத்துப்பாருங்கள். வாடிகானிலும் ஐக்கிய மாகாணங்களில் இஸ்தாபிக்கப் பட்டிருக்கிற டிவி சுவிசேஷங்கள் இருக்கும் இடத்திலும் கிழக்கத்திய நாடுகளில் இருக்கும் கவர்சிகரமான தொட்டிகளிலும் ஆலயங்களிலும் மகா பாபிலோன் பெருஞ் செல்வதைக் குவித்துவைத்து இருக்கிறது- சிலசமயங்களில் இழந்துவிட்டும் இருக்கிறது. 

இப்பொழுது அந்த வேசி தன் கையில் என்ன வைத்திருக்கிறாள் என்று பாருங்கள். யோவான் அதைக் கண்டு மலைத்துப் போயிருக்கவேண்டும்.- 'தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த  பொற்பாத்திரம்'!!!  "தன் வேசித்தனமாகிய உக்கிரமான மது" வைக்கொண்ட பாத்திரமாக இது இருக்கிறது. இதையே அவள் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாள்.

வெளி 14 : 8. வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.

வெளி 17 : 4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

அது வெளியே பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருக்கிறது, அதிலுள்ளதோ அருவருப்பாயும் அசுத்தமாயும் இருக்கிறது  ( மத்தேயு 23 :25 ,26 ஒப்பிட்டு பாருங்கள் )

25. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

அந்த மகா வேசி தேசங்களை ஏமாற்றி, தன்னுடைய செல்வாக்கின் கிழ அவர்களை கொண்டுவருவதற்குப் பயன்படுத்திய எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களையும் பொய்களையும் அந்தப் பாத்திரம் உடையதாய் இருக்கிறது. அந்த வேசி குடித்து வெறித்து இருப்பது  தானே யோவானுக்கு பார்ப்பதற்கு இன்னும்  அருவருப்பாய் இருக்கிறது.  அவள் கடவுளுடைய ஊழியர்களின் இரத்தத்தைக் குடித்திருகிறாள்.!!! உண்மையில், வெளி 18 : 24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்". என்று வாசிக்கிறோம். எத்தகைய பெருத்த இரத்தப்பழி!!!!  தொடரும் ...



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?
Permalink  
 


கடந்த பல நூற்றாண்டுகளாக, பொய் மத உலக பேரரசு பெரும் இரத்தத்தைச் சிந்தி இருக்கிறது. உதாரணமாக; ஜப்பானில், இடைநிலைக் காலப்பகுதியில், கியோடோவில் இருந்த ஆலயங்கள் புகலிடங்களாக மாற்றப்பட்டன. "புத்தருடைய பரிசுத்த பெயரில்" பிரார்த்தனை செய்துவந்த வீரசன்நியாசிகள் தெருக்களில் பெரும் இரதம் ஓடுமளவுக்கு ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டனர். கிறிஸ்தவ மண்டல குருவர்க்கதினர், இந்த நூற்றாண்டில், அவரவர்களுடைய நாட்டின் யுத்தப் படைகளோடு சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் கொலை செய்து இருகின்றனர்.(http://abithacharan.blogspot.com/) இதினால் குறைந்தபட்சம் பத்துக் கோடி ஆட்கள் உய்ரிழந்து இருகின்றனர். ஐ. மா.- வின் முன்னாள் ஜனாதிபதி, நிக்ஸன் அக்டோபர் 1987 -ல் இவ்வாறு கூறினார்: " சரித்திரத்திலேயே 20 :ம் நூற்றாண்டு தானே பெருமளவுக்கு இரத்தத்தைச் சிந்தி இருக்கிறது. இந்த நூற்றாண்டு ஆரண்பிப்பதட்க்கு முன்பு நடந்த போர்களைக் காட்டிலும் இந்த நூற்றாண்டில் நடந்த எல்லா யுத்தங்களில் அநேகர் மாண்டு இருகின்றனர்''. இவ்வெல்லா காரியங்களிலும் அவை ஈடுபடுவதன் காரணமாக உலகத்திலுள்ள மதங்கள் தங்களுக்குக் தீங்குண்டாக்கும் அளவுக்கு கடவுளால் நியாயம் தீர்க்கப்படுகின்றனர் ; தேவன் "முற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கையே'' வெறுக்கிறார்.

நீதிமொழிகள் 6 : 16. ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை...

முன்னர், யோவான் பலிபீடத்தில் இருந்து ஒரு மகா சத்தத்தைக் கேட்டார்: வெளி 6 : 10. ''அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்''?  வேசிகளுக்கும் பூமியில் உள்ள அருவருப்புக்களுக்கும் தாயாக இருக்கிற மகா பாபிலோன் அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதட்குறிய காலம் வரும் பொது புரியும் ....நன்றி



-- Edited by Dino on Saturday 9th of April 2011 07:15:34 PM



-- Edited by Dino on Saturday 9th of April 2011 07:16:05 PM

__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?
Permalink  
 


கத்தோலிக்க மத அமைப்புதான் பாபிலோன் சபை என சகோ.டினோ தகுந்த முறையில் விளக்கியுள்ளார். அவரது விளக்கங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. சகோ.டினோவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

கத்தோலிக்க அமைப்பாகிய பாபிலோன் சபையிலிருந்து பிரிந்துவந்த புராட்டஸ்டண்ட், லூத்தரன், பெந்தேகோஸ்தே போன்ற பல சபைகள், கத்தோலிக்க சபையில் காணப்பட்ட ஒருசில அருவருப்புகளிலிருந்து விடுபட்டுக்கொண்டாலும், சில அருவருப்புகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை (உதாரணம்: திரித்துவம்). எனவே அவைகளும் பாபிலோன் சபையின் அங்கமாகத்தான் இன்னமும் விளங்குகின்றன.

எனவே இந்த பாலிலோன் சபை அங்கங்களில் ஏதேனும் ஒன்றில் நாம் குடியிருந்தால், சகரியா 2:7,8 கூறுகிறபடி, அந்த பாபிலோன் சபையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

பாபிலோன் சபையிலிருந்து எவ்வாறு விடுவித்துக் கொள்ளவேண்டும், கற்புள்ள கன்னிகையாகிய மெய்யான சபையை எவ்வாறு அடையாளங்கண்டு அதனோடு இணையவேண்டும் எனும் கேள்விகளுக்கான பதிலை இனி பார்ப்போம்.

இக்கேள்விகளுக்கு தள அன்பர்கள் பதில்தரும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

வெளி 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

இது தேவன் நமக்கு கொடுக்கும் கட்டளை!! நாம் அப்படிபட்ட ஒரு சபையில் தான் இருக்கிறோமா என்பதை அறியவே வேத வசனங்கள் நமக்கு இருக்கிறது!! தேவன் வந்து ஒவ்வொருத்தரிடமும் நேரடியாக பக்கத்தில் அமர்ந்து பேச மாட்டார், அவர் பேசியது, சொல்லியது எல்லாம் வேத புத்தகத்தில் தான் இருக்கிறது!! அத்துடன் ஒன்றையும் கூட்டாமலும், அதிலிருந்து ஒன்றையும் எடுக்காமால் விசுவசித்தாலே நாம் எதில் இருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்!!

பாரம்பரியங்கள், பாரம்பரிய பாடல்கள், ஆராதனை கீதங்கள், சபை விசுவாச அறிக்கைகள், பாஸ்டர்கள், போதகர்கள், சுவிசேஷர்கள், நவீன அப்போஸ்தலர்கள், ல் கிடைக்கும் புத்தகங்கள், சாட்சிப்புத்தகங்கள், ஸ்தோத்திர புத்தகங்கள், போன்றவற்றினால் விசுவாசத்தை பெறாமல், வேதம் என்ன சொல்லுகிறது என்பதை மாத்திரமே நாடுவோமே!!

யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

தேவனின் வார்த்தையை கிறிஸ்து மூலமாகவும், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களானவர்களின் மூலமாகவும் நமக்கு கிடைத்த வார்த்தைகளை கொண்டு மாத்திரமே விசுவாசம் கொண்டால் போதுமே!! நாம் அந்த வார்த்தைகளை கொண்டு தேவன் யார், கிறிஸ்து யார் என்பதை புரிந்துக்கொள்ள அவர் நமக்காகவும் வேண்டிக்கொண்டவராயிற்றே!!

//கத்தோலிக்க மத அமைப்புதான் பாபிலோன் சபை//

இது மாத்திரம் இல்லை,

வெளி 14:8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.

சகல ஜாதிகளும் இன்று இவள் கொடுத்த மதுவை (கள்ள உபதேசங்கள், காதுக்கு தினவாக தோன்றும் உபதேசங்கள்) குடித்து மயங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்று வசனமே சொல்லுகிறதே!! அப்படி என்றால் அநேகர் (பெரும்பாலுமானோர்) இந்த மதுவை குடித்துக்கொண்டிருப்பவர்கள் தானே!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard