நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவைபெரியன்ஸ் தள கேள்விகளுக்கான பதில்கள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவைபெரியன்ஸ் தள கேள்விகளுக்கான பதில்கள்
Permalink  
 


20. கிறிஸ்துவின் சரீரமான சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது தெரியுமா?

ஆம், நிச்சயமாக. ஊழியக்காரன் விசுவாசி என்ற பாகுபாடு மட்டுமல்ல, பேராயர், ஆயர், குரு, பிதா, போப்பாண்டவர், போதகர், பாஸ்டர் எனும் எந்தப் பாகுபாடும் கிடையாது. எல்லோரும் கிறிஸ்துவின் சரீரமாக இருப்பதோடு ஒருவருக்கொருவர் சகோதரராகவும் இருக்கின்றனர். மத்தேயு 23:8-10 படித்துப் பார்க்கவும்.

புதிய ஏற்பாட்டுச் சபையில் உக்கிராணக்காரன் (சபை கணக்குகளைப் பார்ப்பவன்) மூப்பன் (மூத்தவன்) எனும் பாகுபாடு மட்டுமே உண்டு.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

21. மிகப்பழமையான தோற்சுருள்களில் மாற்கு16:9-20 வசனங்கள் முதலான அனேக வசனங்கள் இலலை. அறிவீர்களா?

ஆம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

22. "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற பிசாசின் உபதேசம்தான் ('நீங்கள் மரிப்பதில்லை, உங்கள் சரீரம்தான் மரிக்கிறது') காலாகாலமாக எல்லா சபைகளிலும் போதிக்கப்படுகிறது தெரியுமா?

பல சபைகளில் போதிக்கப்படுகிறது. ஆனால் எல்லா சபைகளிலுமா என திட்டமாகக் கூற இயலாது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

23. இத்தனை சபைப்பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும் போது ஏன் இத்தனை உபதேச வேறுபாடுகள், பிரிவினைகள்?

மொழி பெயர்ப்பு குறைகள் மற்றும் வேதத்தைப் புரிந்துகொள்வதில் வேறுபாடுகள் ஆகியவை பிரதான காரணமாக இருக்கலாம். இதுபோக, தங்கள் சுயஆதாயத்திற்காக சபையைப் பிரிப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

24. இவ்வளவு குழப்பத்தையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் 'சபை' உண்மையிலேயே கிறிஸ்துவின் சபைதானா?

கிறிஸ்துவின் சபை எதுவெனத் தீர்மானிக்கக்கூடியவர்கள் தேவனும் கிறிஸ்துவும் மட்டுமே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

25. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதங்கள் நடக்கிறது? பவுலுக்கும், எப்பாப்பிரோதீத்துவுக்கும் கிடைக்காத சுகம் இவர்களுக்கு கிடைப்பது எப்படி?

யார் யாருக்கு அற்புதம் கிடைக்கிறது என்ற விபரம் எனக்குத் தெரியாது. அற்புதம் கிடைத்துள்ளதாக யாராவது சொல்வதை ஒரு பொருட்டாக நான் எண்ணுவதுமில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

26. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்லுதல், தசமபாகம் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் சக மனிதர்களிடம் கிறிஸ்துவின் அன்பை விட்டுவிட்டதேன்?

ஆலயம் செல்தலும் தசமபாகம் செலுத்துவதும் கடினமான செயல்கள் அல்ல, ஓரளவு எளிதானவையே.

ஆனால் சக மனிதரிடம் அன்பு செலுத்துவதென்பது அத்தனை எளிதானதல்ல. எனவேதான் தவறாமல் ஆலயம் செல்பவர்களும் தசமபாகம் செலுத்துபவர்களும் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தத் தவறிவிடுகின்றனர்.

27. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதை தனக்கு சாதகமாக மாற்றி சபைகளில் 'தசமபாக வேட்டை' நடப்பது ஏன்?

தங்களின் சுய ஆதாயத்திற்காகவே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

28. அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்த உபத்திரவம் மற்றும் பாடுகள் ஒரங்கட்டப்பட்டு ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் போதிக்கப்படுவது ஏன்?

இழிவான ஆதாயத்தைப் பெறுவதற்காகவே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

29. அந்நிய பாஷை என்று கூறிக்கொண்டு உபயோகமேயில்லாமல் எவருக்குமே புரியாத ஓசையெழுப்பி பரவசம் கொள்வது (சில சபைகளில் மாத்திரம்) சரியா?

சரியல்ல.

ஏன் எல்லா சபைகளிலும் அது வரவேற்கப்படுவதில்லை?

அச்சபையார்கள் அன்னிய பாஷை என்ற பெயரில் எதையாவது உளறத் தெரியாதவர்களாக இருக்கலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

soulsolution wrote at Kovaibereans:
//'மணவாட்டி' அந்தஸ்து பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்படவில்லை. அவர்களுக்கு பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களும் வாக்க‌ளிக்கப்பட்டது (இன்னும் நிறைவேறவில்லை எபி11:39) பழைய ஏற்பாடு முழுவதும் காணலாம். அவர்கள் நம்மையல்லாமல்(சபை) பூரணராகாதபடிக்கு என்று எபிரேயர் புத்தகத்தில் வாசிக்கலாம்.
"அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்" எபி11:40.

"... அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" 1தெச4:16.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்துவுக்குள் மரிக்கவில்லை, கிறிஸ்துவை அவர்கள் அறியவே இல்லை என்பது திண்ணம். "புது சிருஷ்டியாகும்" வாய்ப்பு அவர்களுக்கு அருளப்படவில்லை. ஏனென்றால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் மட்டுமே அவன் புது சிருஷ்டியாக முடியும். பழைய ஏற்பாட்டில் அவர்கள் பழைய உடன்படிக்கையில் இருந்தார்கள். புது உடன்படிக்கை கிறிஸ்துவுக்குப் பின் வந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.//


தங்கள் விளக்கம் மற்றும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் உள்ளன. ஆயினும் பழையஏற்பாட்டு பரிசுத்தவான்களில் எவரும் முதலாம் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாக மாட்டார்கள் என்பதை தெளிவான வசன ஆதாரங்களோடு விளக்கினால் நல்லது எனக் கருதுகிறேன்.

தாவீது, யோபு போன்ற பலருங்கூட கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களே எனக் கருதப்பட வாய்ப்புண்டு என்பதற்கு பின்வரும் வசனங்கள் தூண்டுதலாக உள்ளன என்பதை அறிக.

சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

யோபு 19:25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.


பழையஏற்பாட்டு விசுவாசிகளிலும் பரிசுத்தவான்கள் உண்டு என்பதற்கு லேவி. 20:26; எண்ணாகமம் 16:5; உபாகமம் 33:2,3; சங்கீதம் 31:23; 79:2 போன்ற பல வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

(பின்குறிப்பு: எபிரெயர் நிருபத்தின் வசனங்களை ஏற்கலமா என்பது என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறியே.

ஏனெனில் எபிரெயர் நிருபத்தை யார் எழுதினார் என்பது திட்டமாகக் கூறப்படவில்லை.

தேவனால் அல்லது இயேசுவால் நேரடியாக சாட்சி பெறப்பட்டவர்களின் புத்தக/நிருப வசனங்களை மட்டுமே வேதவாக்காகக் கருதவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.)


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

30. ஏன் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சட்டங்களை மாத்திரம் (ஓய்வுநாள், தசமபாகம்) 'கைக்கொள்ள' அதிகம் அறிவுறுத்தப்படுகிறது?

இம்மாதிரியான சட்டங்களை அதிகமாக வலியுறுத்துவது இயேசுவின் நாட்களில்கூட இருந்தது. எனவேதான் இயேசு இவ்வாறு கூறினார்.

மத்தேயு 23:23  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

விசேஷித்தவைகளாகிய நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவை இந்நாட்களிலும் அதிகமாக வலியுறுத்தப்படுவதில்லை. தசமபாகக் கட்டளை என்பது முழுக்க முழுக்க இஸ்ரவேலர்களுக்கானது. மேற்கூறிய வசனத்தை இயேசு சொன்னதும் இஸ்ரவேலர்களாகிய வேதபாரகர் பரிசேயரிடம்தான். தசமபாகக் கட்டளை புதியஏற்பாட்டு விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. இன்றைய சபைத்தலைவர்கள் தங்களது சுயஆதாயத்திற்காகவோ அல்லது அறியாமையாலோ தசமபாகத்தை வலியுறுத்துகிறார்கள் என நான் கருதுகிறேன்.

ஓய்வுநாளைப் பொறுத்தவரை அதை வலியுறுத்துவதால், சபைத் தலைவர்களுக்கு சுயஆதாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், இம்மாதிரியான எளிதான போதனைகளைச் சொல்லி சபை மக்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக ஓய்வுநாளை வலியுறுத்தக்கூடும்.

சனிக்கிழமைதான் ஓய்வுநாள் எனச் சொல்வது தவறல்ல. ஆயினும் ஓய்வுநாள் போதனையை அதிகம் வலியுறுத்துபவர்கள், மத்தேயு 23:23-ல் இயேசு சொன்னபடி, நீதி, இரக்கம், விசுவாசத்தையும் அதிகமாக வலியுறுத்தவேண்டும் என்பது எனது கருத்து.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

31. வேதம் உண்மையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருக்க, அதன் பின் அநேக நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் காலாகாலத்திற்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமா?

அல்ல.

32. பிதாவாகிய தேவன் யார்? அவரது குமாரன் இயேசுகிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது யார்? ஏன் இதற்கு வேதத்தின்படி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை?

ஒரே தேவனாகிய யெகோவா எனும் நாமமுள்ள தேவன்
தான்பிதாவாகிய தேவன் ஆவார். அவரது குமாரனாகிய இயேசு, மனுக்குலத்தை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்து மரித்து உயிர்த்தெழுந்தவராவார்.

பரிசுத்த ஆவி என்பது ஒரு நபரல்ல. தேவனின் ஆவியே பரிசுத்த ஆவி. அந்த ஆவியை தேவன் இயேசுவிடம் அளவில்லாமல் ஊற்றியுள்ளார். அதேவிதமாக, பரிசுத்ததை நாடுகிற அனைவரிடமும் தேவன் தமது ஆவியை ஊற்றுகிறார்.

யோவான் 7:37-39 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.

லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

இவ்விஷயங்களில் காலங்காலமாக வசனத்திற்கு புறம்பான வேறுபாடான போதனைகள் போதிக்கப்பட்டு அதில் ஜனங்கள் மூழ்கிப்போனதால், சரியான போதனைகளை ஜனங்கள் ஏற்பதில்லை. மாத்திரமல்ல, சரியான போதனையைச் சொல்பவர்களை, ‘வித்தியாசமான உபதேசத்தைப் போதிப்பவர்கள்’ என்று பட்டம் கட்டி, அவர்களை ஓரங்கட்டியும் விடுகின்றனர். உதாரணமாக, Tamil Christians தளத்தின் ஒரு திரியில் சகோ.அற்புதம் என்பவர் நித்திய ஜீவன் தளத்தைப் பற்றி கூறியுள்ளதை இத்தொடுப்பில் படித்துப் பாருங்கள். இம்மாதிரி பலர் இருப்பதால்தான் வேதத்தின்படியான போதனையைத் தர பலர் முன்வருவதில்லை. விளைவு?

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப் போகிறார்கள் என ஏசாயா 5:13-ல் தேவன் கூறியுள்ளபடியே, தவறான போதனைகளுக்குள் ஜனங்கள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

33. நானே பிதாவாகிய தேவன் என்று இயேசுகிறிஸ்து ஒருமுறையேனும் வேதத்தில் கூறியிருக்கிறாரா? (அவரே அவரிடத்திலேயே வேண்டிக்கொள்வதும், பரிந்துபேசுவதும் வினோதமாக இல்லை?)

தம்மைத் தேவனுடைய குமாரன் என்றுதான் இயேசு கூறியுள்ளாரேயொழிய, பிதாவாகிய தேவன் நான்தான் என ஒரு முறையும் கூறவில்லை.

பலர் சொல்கிறபடி இயேசுவும் பிதாவும் ஒருவரே என்றால், இயேசு தம்மிடமே வேண்டிக்கொள்வதும் பரிந்துபேசுவதும் வினோதமாகத்தான் இருக்கும்.

34. ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காவிட்டால் அநாதி தேவனுடைய மீட்பின் திட்டம் காலதாமதமாகிவிடுமா? அல்லது நிறைவேறாமலேயே போய்விடுமா? தேவன் மனிதனுடைய ஜெபத்தைச் சார்ந்துதான் செயல்படுகிறாரா?

தேவனின் தீர்மானத்தை ஜெபம் மாற்றும் என்பதற்கு உதாரணமாக நினிவே பட்டணத்தார்மீதான தீர்மானத்தை தேவன் மாற்றின சம்பவத்தைக் கூறலாம். இன்னும் மோசேயின் விண்ணப்பத்தைக் கேட்டு, இஸ்ரவேலரை அழிக்காமல் போனது, யோபுவின் விண்ணப்பத்தைக் கேட்டு அவரது நண்பர்களை தேவன் மன்னித்தது என பல உதாரணங்களைச் சொல்லலாம். எனவே ஜெபத்திற்கும் தேவனின் செயல்பாட்டிற்கும் நிச்சயமாக சம்பந்தம் உள்ளது எனக் கூறலாம்.

இதனால் யாருமே ஜெபிக்காவிடில் தேவனின் அநாதி திட்டங்கள் நிறைவேற காலதாமதமாகுமோ அல்லது நிறைவேறாமல் போகுமோ எனக் கூறமுடியாது. அநாதி திட்டங்கள் என்பது, தனிப்பட்ட மனிதர்கள் மீதான திட்டங்கள் அல்ல. தனிப்பட்ட மனிதர்கள் மீதான தேவனின் தீர்மானங்கள்தான், ஜெபத்தால் மாறக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் உலகம் முழுமைக்குமான தேவனின் அநாதி திட்டங்கள் சற்றும் மாறாமல், அவர் செய்யத் தீர்மானித்த காலத்தில் துல்லியமாக நிறைவேறும் என்பதே உண்மை.

யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

பிரசங்கி 3:11,14 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது;


எசேக்கியேல் 12:25 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

லூக்கா 21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.


மனிதனின் அல்லது மனிதக்கூட்டத்தாரின் தனிப்பட்ட காரியங்களில் தேவன் மனிதனுடைய ஜெபத்தைச் சார்ந்து செயல்படுகிறார் என்பது மெய்யேயாயினும், உலகம் முழுமைக்குமான தமது அநாதி திட்டங்களைச் செயல்படுத்தும் விஷயத்தில் மனிதனின் ஜெபத்தைச் சார்ந்து அவர் செயல்படுவதில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

35. இன்றைக்கு சபையின் பெயரிலும், ஊழியத்தின் பெயரிலும் நடக்கும் அக்கிரமங்கள் உண்மையிலேயே பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா?

அக்கிரமங்கள் என்று சொல்லி விட்டீர்கள், பின்னர் அவை பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா என்ற கேள்வி எதற்கு?

ஆயினும் தங்கள் கேள்விக்குள்ளாகவும் ஓர் அர்த்தம் உள்ளது. எப்படியெனில், அக்கிரமங்களைப் பொறுக்கமாட்டாதவர்களைப் பொறுத்தவரை, இன்றைய சபையின் அக்கிரமங்கள் ஒழிய வேண்டும் எனும் வைராக்கியம் மேலும் அதிகமாகும் எனக் கூறலாம்.

36. நவீன ஊழியக்காரர்களின் படாடோப ஊழியங்கள், வாரிசு அரசியல் போல வாரிசு ஊழியங்கள் அனைத்தும் அப்போஸ்தலர்கள் ஒருபோதும் செய்ததில்லையே?

ஆமாம், செய்ததில்லைதான். ஆனால் இன்றைய பெரும்பாலான விசுவாசிகள் இம்மாதிரி ஊழியர்களைத்தானே அங்கீகரிக்கின்றனர்.

37. 1 யோவான் 5:7 வசனம் ஏன் அடைப்புக்குறிக்குள் [Bracket] ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? இந்த வசனம் மலையாள வேதாகமத்தில் ஏன் இல்லை?

மூலப்பிரதியில் இல்லாத வார்த்தைகள்தான் அடைப்புக்குறிகளுக்குள் போடப்படுவதுண்டு. எனவே 1 யோவான் 5:7-ம் வசனம் மூலப்பிரதியில் இல்லை என அர்த்தமாகும்.

இதனால்தான் மலையாள வேதாகமத்தில் அவ்வசனம் இடம்பெற்றிருக்காது.

திரித்துவ கோட்பாட்டைச் சொல்பவர்கள், இவ்வசனத்தைத்தான் தங்கள் கோட்பாட்டிற்கு முக்கிய ஆதாரமாகக் கூறுவதுண்டு. ஆனால் அந்தோ, அவர்களின் முக்கிய ஆதார வசனம் மூலப்பிரதியில் இல்லை என்பதை அறியமுடியாத பரிதாப நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

38. ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' எதற்கு?

ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' தேவையில்லை.

ஆனால் எல்லோரும் தங்கள் வரிசையின்படி பிற்காலத்தில் உயிர்த்தெழுவார்கள் என வேதாகமம் கூறுவதால், ஒருவர் மரித்ததும் உடனடியாக பரலோகத்திற்குப் போவார் எனும் கூற்று தவறானது.

39. நவீன பிரசங்கிமார்கள் அடிக்கடி பரலோகத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று வருகிறார்களே; இது யோவான் 3:13-க்கு எதிராக இருக்கிறதே; எது உண்மை? ஆண்டவரின் வார்த்தையா? மனிதர்களின் மாயையா?

யோவான் 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

இவ்வசனத்தில் “பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” எனும் வாசகம் (கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும்) முக்காலத்தையும் குறிப்பிடுகிறதா அல்லது கடந்த காலத்தை மட்டும் குறிப்பிடுகிறதா என்பது தெரியவில்லை. கடந்த காலத்தை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தால், தற்போது சிலர் பரலோகம் சென்று வந்ததாகக் கூறுவது அவ்வசனத்திற்கு முரணானது அல்ல.

பவுலுங்கூட ஓர் இடத்தில் இவ்வாறு கூறுகிறார்.

2 கொரிந்தியர் 2:2-4  கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

இவ்வசனங்களில் பவுல் சொல்வது தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரையும் குறித்தா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் சொல்வதிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின்னான காலத்தில் யாரோ ஒருவர் மூன்றாம் வானம் எனப்படுகிற ஓரிடத்திற்கு சென்று வந்துள்ளார் என அறிகிறோம். இந்த மூன்றாம் வானமும் பரலோகம் எனப்படும் இடமும் ஒரே இடமா என்பது தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் அதைக் குறித்த தகவலை, அங்கு சென்று வந்தவர் மிகச்சாதாரணமாகக் கூறவில்லை எனப் பார்க்கிறோம்; ஒருவேளை அங்கு சென்று வந்தவர் பவுலாக இருந்தால்கூட, அவர் அத்தகவலை நேரடியாகக் கூற மறுக்கிறார் எனப் பார்க்கிறோம். அதுவும் அத்தகவலை 14 வருடங்களுக்குப் பிறகு கூறுவதாகவும் பார்க்கிறோம்.

எனவே மெய்யாகவே ஒருவர் பரலோகம் சென்று வந்திருந்தால், அது மிகச்சாதாரணமாக (casual-ஆக) தம்பட்டம் அடிக்கக்கூடிய ஒரு தகவல் அல்ல என அறிகிறோம். ஆனால் இன்றோ பல பிரசங்கிமார்கள் தாங்கள் பரலோகம் சென்றுவந்ததை மிகச்சாதாரணமான விஷயமாகச் சொல்லி தம்பட்டம் அடிக்கின்றனர். எனவே இவர்கள் கூறுவது பொய்யாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அறிகிறோம்.

மேலும் பவுலின் தகவலில் மூன்றான் வானம் வரை சென்றவர், மனுஷரின் வாக்குக்கிட்டாத வார்த்தைகளைக் கேட்டாரெனப் பார்க்கிறோம். ஆனால் இன்று பரலோகம் சென்று வந்ததாகக் கூறுபவர்கள், மனுஷரின் வாக்குக்கெட்டுகிற வார்த்தைகளைக் கேட்டு வந்து இங்கு சொல்கின்றனர். எனவே இவர்களின் கூற்று நம்பத்தக்கதாக இல்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

40. வியாதியே இல்லாத அல்லது வராத சுகமளிக்கும் வரம் பெற்ற ஒரு ஊழியர் பெயர் கூறுக?

எனக்கு யாரையும் தெரியவில்லை.

41. ஆத்துமாவுக்கு வடிவம் உண்டா? இல்லை என்றால் எப்படி அடையாளம் காண்பது?

ஆத்துமாவுக்கு வடிவம் கிடையாது.

42. "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்"
. 'ஆத்துமா' சாகுமா சாகாதா?


பாவம் செய்கிற ஆத்துமா சாகும் எனும் வேதவசனத்தைச் சொல்லிவிட்டு, கூடவே ஆத்துமா சாகுமா சாகாத என்ற கேள்வி எதற்கு?

43. பரலோகத்தில் விலங்குகள் உண்டா? இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை பறக்குமா, ஓடிவருமா அதற்கு இறக்கைகள் இருக்குமா?

பரலோகத்தில் விலங்குகள் உண்டா என்பது தெரியவில்லை. அங்கு விலங்குகள் இருக்காது என்றே கருதுகிறேன்.

இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை அடையாளாமாக தரிசனத்தில் காட்டப்பட்ட ஒன்றேயொழிய உண்மையான வெள்ளைக்குதிரையல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

44. எக்காள சத்தம் தொனிக்கும்போது எல்லோருக்கும் கேட்குமா?

திட்டமாகத் தெரியவில்லை. இறுதி எக்காளதொனி எல்லோருக்கும் கேட்கும் என்றே கருதுகிறேன்.

45. "பாவத்தின் சம்பளம் மரணம்", "பாவத்தின் சம்பளம் நரகத்தில் நித்திய வாதை" இதில் எது வேதத்தின்படி சரி?

பாவத்தின் சம்பளம் மரணம் என்பதே வேதத்தின்படி சரி.

46. பாவத்துக்கு தண்டனை நரகத்தில் முடிவில்லா வாதை என்றால் இயேசு அந்த தண்டனையையல்லவா ஏற்றிருக்க வேண்டும்? ஏற்றாரா?

நல்ல கேள்வி.

இயேசு நரகத்தில் முடிவில்லாத வாதையை அனுபவிக்கவில்லை. மாறாக, மரணத்தை மட்டுமே அனுபவித்தார். எனவே பாவத்துக்கு தண்டனை நரகத்தில் முடிவில்லா வாதை எனும் கூற்று முழுக்க முழுக்க தவறானது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

47. தேவன் ஒருவரா மூவரா அல்லது மூன்றான ஒருவரா? வசன ஆதாரம்.(அடைப்புக்குறிக்குள் இருக்கும் வசனங்கள் வேண்டாமே).

1 தீமோத்தேயு 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

1 கொரிந்தியர் 8:6,7 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.


இத்தனை தெளிவாக வசனம் கூறியுள்ள போதிலும், அறிவு இல்லாத பலர்: 3 தேவன், 3 தேவனும் சமம், ஒருவருக்குள் ஒருவர், பிதாதான் இயேசுவாக வந்தார் என்றெல்லாம் சொல்லி விசுவாசிகளை குழப்பி வருகின்றனர்.

மிகப்பெரும் பித்தலாட்டக்காரரான மோகன் சி.லாசரஸ் தான் கூறுகிற குழப்பமானக் கூற்றிற்கு ஆதாரமாக வேதவசனத்தையே பின்வருமாறு புரட்டிச் சொல்லியுள்ளார்.

பாளையங்கோட்டை இயேசு விடுவிக்கிறார் அலுவலகத்தின் வாசலில் ஒரு பலகையில் இப்படியாக எழுதி வைத்துள்ளார்.

தேவன் ஒருவரே, ... எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த ... கிறிஸ்து இயேசு அவரே; (1 தீமோ. 2:5,6)

எத்தனை துணிகரமாக மோகன் சி.லாசரஸ் வேதப்புரட்டு செய்கிறார் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

anbu57 wrote:

42. "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்"
. 'ஆத்துமா' சாகுமா சாகாதா?


பாவம் செய்கிற ஆத்துமா சாகும் எனும் வேதவசனத்தைச் சொல்லிவிட்டு, கூடவே ஆத்துமா சாகுமா சாகாத என்ற கேள்வி எதற்கு?


இந்த கேள்விக்கு தாங்கள் பதில் தெளிவாக தந்திருக்கிறீர்கள், ஆனால் இன்னும் ஆவி தான் சாகிறது ஆத்துமா சாவதில்லை என்று துனிச்சலாக வேதத்திற்கு விரோதமாக போதனை இருக்க தான் செய்கிறது. சபைகளின் போதனையே, கிறிஸ்து ஆவியில் மரித்தார், ஆனால் ஆத்துமா மரிக்கவில்லை என்பது தானே!! காதுள்ளுவர்களுக்கு இந்த கேள்வி பொருந்தாது!!

 



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

48. இயேசுகிறிஸ்துதான்  தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?

இயேசுகிறிஸ்து கூறியதில்லை. இயேசுவைத் தேவன் என அப்போஸ்தலர் கூறியுள்ளதாக ஞாபகம். வசனம் கிடைத்தபின் திட்டமாகக் கூறுகிறேன். ஆனால் சங்கீதக்காரன் இயேசுவைத் தேவன் எனக் கூறியதற்கு ஆதாரமான வசனம் உண்டு.

சங்கீதம் 45:6,7 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

இவ்வசனத்தில் தேவனே எனும் வார்த்தை இயேசுவைக் குறிக்கின்றது. உம்முடைய தேவன் எனும் சொற்றொடர் யெகோவா எனும் நாமமுள்ள தேவாதி தேவனைக் குறிக்கிறது.

எனவே இயேசுவும் ஒரு தேவனாக இருந்தாலும், அவருக்கும் தேவனாக யெகோவா தேவன் இருக்கிறார் என்பதை நாம் அறியவேண்டும்.

49. இயேசு மரித்தாரா?
ஆம், இதிலென்ன சந்தேகம்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

anbu57 wrote:
49. இயேசு மரித்தாரா?
ஆம், இதிலென்ன சந்தேகம்?


இயேசு மரித்தார் என்று வேதம் சொல்லுகிறது!! ஆனால் திரித்துவர்களால் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை!! தேவனால் (பிதாவால்) மரிக்க முடியாது என்கிற வசனம் தெரிகிறது, பிதா கிறிஸ்துவாக வந்தார் என்று போதிப்பவர்கள் கிறிஸ்து மரித்தார் என்று உண்மையில் ஒத்துக்கொள்வதில்லை!! மாறாக அவர் ஆவியில் மரித்தார் என்று சிலரும், அவர் ஆத்துமாவில் மரித்தார் என்று பலரும் சொல்லுவதே வழக்கம்!! அவர் மற்ற மனிதர்களை போல் முழுவதுமாக மரித்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவம்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard