நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிடில் ...


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிடில் ...
Permalink  
 


நிக்கேதோமு எனும் பரிசேயனுக்கும் இயேசுவுக்குமிடையே நடந்த ஒரு சம்பாஷணையின்போது, இயேசு சொன்ன ஒரு வசனம் பலருக்கும் பரிச்சயமானது (யோவான் 3:5). முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தால்தான் பரலோகரஜ்யம் பிரவேசிக்கமுடியும் எனக் கூறுகிற பெந்தேகோஸ்தே சபையார், தங்கள் கொள்கைக்கு இவ்வசனத்தைத்தான் பிரதானமான ஆதாரமாகக் கூறுவார்கள்.

ஆனால் உண்மையில் இவ்வசனத்தில் முழுக்கு ஞானஸ்நானத்தைத்தான் இயேசு வலியுறுத்துகிறாரா? அல்லது வேறு ஏதாவது போதனையைக் கூறுகிறாரா? தள அன்பர்கள் தங்கள் கருத்தைப் பதிக்கும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யோவான் 3:5 ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

இவ்வசனத்தில் ஜலத்தினால் பிறத்தல் என்பது தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதையே குறிப்பிடுவதாக தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை இறைவன் தளத்தின் நிர்வாகி இறைநேசன் ஒரு பதிவில் ஆமோதித்துள்ளார். அவற்றின் தொடுப்புகள்:

http://tamilchristians.com/index.php?option=com_content&view=article&id=385:-10-&catid=91:2009-03-30-07-38-03&Itemid=276

http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=38861454

தமிழ் கிறிஸ்தவ தளத்தார் இறைவன் தள நிர்வாகி மற்றும் அவர்களின் கருத்தை ஏற்பவர்கள் முன்பாக சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன்.

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான்ஸ்நானகன் மத்தேயு 3:11-ல் பின்வருமாறு கூறியுள்ளார்.

மத்தேயு 3:11 எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், ... அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

ஜலத்தினால் பிறத்தல் என்றால் சாதாரண தண்ணீரில் மூழ்கிஎழுகிற ஞானஸ்நானம் எனக் கூறுவோரே, அக்கினியால் ஞானஸ்நானம் என்றால் என்ன? சாதாரண அக்கினிக்குள் மூழ்கிஎழுவதுதான் அக்கினியால் ஞானஸ்நானமா? இந்த ஞானஸ்நானத்தை உங்களில் எத்தனை பேர் பெற்றுள்ளீர்கள்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

தண்ணீர் என்பது தேவனுடைய வார்த்தையையும் குறிக்கும் சொல்லாகும்.

யோவான் 4:11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.

யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நன்றி, சகோ.பெரியன்ஸ் அவர்களே!

பொருத்தமான வசனஆதாரத்துடன், தண்ணீர் என்றால் என்னவென்பதை எடுத்துரைத்துள்ளீர்கள். ஆனால் “இந்த அறிவு” எல்லோரிடமும் இல்லை.

தண்ணீர் என்றால் சொல்லர்த்தமான தண்ணீர் என்றுதான் பலரும் கருதுகின்றனர். ஆனால் அக்கினி என்றால் மட்டும் சொல்லர்த்தமான அக்கினி என அவர்கள் கருவதில்லை. ஏனெனில்,
சொல்லர்த்தமான தண்ணீரில் மூழ்கிஎழுதலில் கஷ்டம் எதுவுமில்லை: ஆனால் சொல்லர்த்தமான அக்கினியில் மூழ்கிஎழுந்தால் எரிந்துபோவோமே?

எனவே தண்ணீர் என்றால்
சொல்லர்த்தமான தண்ணீர் எனக் கூறுகிற அவர்கள், அக்கினி என்றால் மட்டும் வேறெதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்கின்றனர்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

Bereans wrote:

 தண்ணீர் என்பது தேவனுடைய வார்த்தையையும் குறிக்கும் சொல்லாகும்.

 யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.



யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

யோவான் 7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.
 
இவ்வசனங்களை பொறுத்தவரை "தண்ணீர்" என்பது எதை குறிக்கிறது என்பதை இன்னொரு  வசனமே தெளிவான வியாக்கீனமாக கொடுத்துள்ளது. எனவே இயேசு குறிப்பிட்ட ஜீவ தண்ணீரை தேவனின் வார்த்தை என்று கருதுவது சரியான நிலை அல்ல என்றே நான் கருதுகிறேன். 
 

 



-- Edited by SUNDAR on Thursday 28th of October 2010 06:14:03 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:
ஜலத்தினால் பிறத்தல் என்றால் சாதாரண தண்ணீரில் மூழ்கிஎழுகிற ஞானஸ்நானம் எனக் கூறுவோரே, அக்கினியால் ஞானஸ்நானம் என்றால் என்ன
தங்கள் கேள்விக்கு நான் அறிந்து புரிந்துகொண்ட  பதிலை கீழ்கண்ட சுட்டியில் தனி கட்டுரையாக கொடுத்துள்ளேன். வாசித்து  தங்கள் கருத்தை  கூறவும்    
 
 
 
anbu57 wrote: 
//சாதாரண அக்கினிக்குள் மூழ்கிஎழுவதுதான் அக்கினியால் ஞானஸ்நானமா? இந்த ஞானஸ்நானத்தை உங்களில் எத்தனை பேர் பெற்றுள்ளீர்கள்?///
 
தண்ணீரை "தண்ணீர்" என்றும் அக்கினியை"தேவனின் வார்த்தை" என்ற கருத்திலும் நாம் கையாளுகிறோம் காரணம், தண்ணீர் ஞானஸ்தானம் எப்படிபட்டது என்பதை ஏசுவே நமக்கு எடுத்துகாட்டியதோடு  வேறு பலருக்கும் முன்மாதிரியாக அந்த தண்ணீர் ஞானஸ்தானம் கொடுத்துள்ளார்கள். இவ்வாறு தெளிவாக செய்து காடடியபின்னர் நமது விருப்பத்துக்கு அதை நாம் மாற்ற முடியாது. ஆனால் அக்கினிக்குள் சென்று யாரும் ஞானஸ்தானம் பெற முடியாது! எனவே அக்கினிக்கு ஒப்பானதை வசனத்தின் அடிப்படையில் 
தேர்ந்தெடுத்துள்ளேன்.

 



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

சுந்தர் காட்டிய வசனம்:

யோவான் 7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். 39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.

"அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர்" என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா!? கிறிஸ்துவை விசுவசிப்பவனின் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் (இது கேட்பவனிடம் உருவாகும் என்கிறது வசனம்) கொண்ட நதிகள் ஓடும்!! மேலும் சுந்த‌ரிட‌த்தில் சொன்னால் அவ‌ர் கோபித்துக்கொள்வார், என்ன‌வென்றால் 38வ‌து வ‌ச‌ன‌ம் மூல‌ பாஷையில் இல்லாத‌ ஒரு வ‌ச‌ன‌ம்!! த‌மிழ் வேதாக‌ம‌ம் மாத்திர‌ம் போதும், அதில் என்ன‌ கொடுத்திருந்தாலும் ந‌ம்புவேன் என்று இருப்ப‌வ‌ரிட‌ம் என்ன‌ விள‌க்க‌ம் சொல்ல‌ முடியும்!! ச‌ரி அப்ப‌டியே இங்த‌ வ‌ச்ன‌ம் இருந்தால் இந்த‌ வ‌ச‌ன‌ம் சொல்லுவ‌து என்ன‌!! இந்த‌ ஜீவ‌த்த‌ண்ணீர் தான் அவ‌ன் பெற‌ போகும் ஆவி என்றா? இல்லை, மாறாக‌ இந்த‌ ஆவி இருந்தால் தான் அவ‌ரின் வார்த்தைக‌ளை விசுவ‌சிக்க‌ முடியும், அந்த‌ வார்த்தைக‌ளே ஒருவ‌னுக்குள் ஜீவ‌த்த‌ண்ணீரை ஓட‌ச் செய்யும்!! 39வ‌து வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து, இயேசு கிறிஸ்து இன்னும் ம‌கிமை அடையாத‌தால் ப‌ரிசுத்த‌ ஆவி இன்னும் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை என்று!! ஆக‌ இயேசு கிறீஸ்து ம‌கிமை அடைந்த‌ பிற‌கு ப‌ரிசுத்த‌ ஆவி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும், அதினால் அவ‌ர்க‌ள் அவ‌ரின் வார்த்தைக‌ளை விசுவாசிப்பார்க‌ள் என்ப‌தே சுந்த‌ர் சுட்டி காட்டிய‌ வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து!!

இருந்தாலும்,

யோவான் 6:63  நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

அவ‌ரின் வார்த்தைக‌ளே அந்த‌ ஆவியாம்!! அவரிடம் பெற்றுக்கொள்ளும் ஆவியினால் அவரின் வார்த்தைகளை பின் பற்றுபவன் ஜீவனை பெறுகிறான் என்கிறது வசனம்!! இந்த‌ வார்த்தைக‌ளே நித்திய‌ஜீவ‌னை த‌ருகிற‌து!! த‌ண்ணீரில் மூழ்கி எழும்புவ‌து ஒரு ச‌ட‌ங்காகும்! உண்மையான‌ ஞானஸ்நான‌ம் அவ‌ரின் வார்த்தைக‌ளில் தான் இருக்கிற‌து!! த‌ண்ணீரே இல்லாத‌ இட‌த்தில் ஒருவ‌ன் எப்ப‌டி இந்த‌ ச‌ட‌ங்கை பின்ப‌ற்ற‌ முடியும்!! இந்த‌ ச‌ட‌ங்கு இல்லாம‌ல்கூட‌ ஒருவ‌ன் நிச்ச‌ய‌மாக‌ கிறிஸ்த‌வ‌னாக‌ இருக்கமுடியும், அவ‌ரின் வார்த்தைக‌ளை விசுவ‌சித்து அத‌ன்படி ந‌ட‌ப்ப‌வ‌னே அந்த‌ கிறிஸ்த‌வ‌ன்!!

யோவான் 3:5ல் ஜலம் என்பது எழுத்தின்படி தண்ணீர் என்று எடுத்துக்கொண்டாலும் உண்மையில் அது தேவனின் வார்த்தைகளையே குறிக்கும், அப்படியே ஆவி என்பது, கிறிஸ்துவின் சிந்தையாகும்!! இவைகளே ஒருவனை நித்தியஜீவனுக்கு வழிநடத்துகிறதே அன்றி, சடங்குகள் அல்ல!! ஞாஸ்நானம் தேவை இல்லை என்று நான் போதிக்கவில்லை, ஆனால் அதை ஒரு சடங்கு அளவிற்கு வைத்தால் போதும், என்றே சொல்லுகிறேன்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:

//இயேசு குறிப்பிட்ட ஜீவ தண்ணீரை தேவனின் வார்த்தை என்று கருதுவது சரியான நிலை அல்ல என்றே நான் கருதுகிறேன்.//

சகோ.சுந்தர் அவர்களே!

யோவான் 7:38,29-ன்படி தண்ணீர் என்பது கிறிஸ்துவின் ஆவியையும் குறிக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால் சகோ.பெரியன்ஸ் சுட்டிக்காட்டிய யோவான் 6:63-ன்படி, கிறிஸ்துவின் வசனங்களும் ஆவியாக இருப்பதால் தண்ணீர், ஆவி, கிறிஸ்துவின் வார்த்தை எல்லாமுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. இன்னும் தெளிவாக அறியவேண்டுமெனில் பின்வரும் வசனங்களையும் படியுங்கள்.

எபேசியர் 5:25-27 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

கிறிஸ்துவின் வசனங்களே தண்ணீராக உள்ளது, வசனங்களாகிய அந்த தண்ணீருக்குள் மூழ்கிஎழுகையில் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதற்கு இவ்வசனங்கள் போதுமான ஆதாரமாயுள்ளன. இன்னும் பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.

1 கொரி. 10:4 எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

ஞானக்கன்மலையாகிய கிறிஸ்துவிடமிருந்து புறப்படும் ஞானபானம் அவரது வார்த்தைகளே. இந்த ஞானபானத்தை ஞானப்பால் என பேதுரு கூறுகிறார்.

1 பேதுரு 2:3 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

கிறிஸ்துவின் வசனங்களாகிய தண்ணீருக்குள் மூழ்கிஎழுகையில் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். அதே வசனங்களை ஞானப்பாலாகக் கருதி பருகுகையில் நாம் ஆவிக்குரிய மனிதனில் வளருகிறோம். நாம் (ஆவிக்குரிய) குழந்தைகளாய் இருக்கையில் நமக்கு ஞானப்பாலாக இருக்கும் கிறிஸ்துவின் வசனங்கள், நாம் குழந்தைப் பருவத்தைக் கடந்தபின் கிறிஸ்துவின் மாம்சமெனும் அப்பமாக மாறி நமக்கு ஞானபோஜனமாக இருக்கின்றன (யோவான் 6:51).

இன்னும் சொல்லப்போனால், அக்கினி என்பதும் நீங்கள் சொன்னபடி, கிறிஸ்துவின் வசனங்கள்தான். அவ்வசனங்கள் மென்மையாக நம்மைச் சுத்திகரிக்கையில் தண்ணீராக/ஞானப்பாலாக/அப்பமாக இருக்கின்றன.; அதே வசனங்கள் நம்மைக் கடிந்து சிட்சித்து சுத்திகரிக்கையில் அக்கினியாக இருக்கின்றன. அந்த வசனங்கள் நமக்குள் ஒரு வைராக்கியத்தை உண்டாக்கும்போதும் அவை நமக்கு அனலாக இருக்கின்றன.

இந்த அனல் நமக்குள் இருந்தால்தான், வசனத்திற்கு விரோதமாக பேசி இடறல்களை உண்டாக்குகிறவர்களை வைராக்கியமாக கடிந்துகொள்ளமுடியும். ஆனால் நம்மில் பலருக்கு வசனத்தின் மீதுள்ள வைராக்கியத்தால் நம்முள் அனல் உண்டாவதில்லை. மாறாக, வசனத்திற்கு விரோதமாகப் பேசுவோராகிய நம் அபிமான ஊழியக்காரர்கள் மீதுதான் வைராக்கியமான பற்று உண்டாகிறது. இதனால் நம் அபிமான ஊழியக்காரர்களின் வசன விரோதப்போக்கைக் கண்டிப்போர்மீது நாம் அனலாகப் பாய்கிறோம்.

மொத்தத்தில், கிறிஸ்துவின் வசனங்கள்தான் எல்லாமும். தண்ணீர், ஞானபானம், ஞானப்பால், மாம்சம், அப்பம், போஜனம், அக்கினி எல்லாமும் கிறிஸ்துவின் வசனங்களே. அவை ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமாக நம்மில் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்பட்டு நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துகின்றன.

எனவேதான் இத்தளத்தில் மீண்டும் மீண்டும் கிறிஸ்துவின் வசனங்களை முக்கியப்படுத்திக் கூறிவருகிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக மற்றொரு விஷயத்தையும் நாம் அறியவேண்டும். கிறிஸ்துவின் வசனங்கள் உயிராகிய இரத்தமாகவும் இருந்து நமக்கு நித்தியஜீவனைத் தருகின்றன. எனவேதான் கிறிஸ்து பின்வருமாறு கூறினார்.

யோவான் 6:53-58 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

இயேசு இவ்வாறு சொன்னதை வைத்து, இந்நாட்களில் பலர் திருவிருந்து எனும் சடங்காச்சாரத்தை முக்கியப்படுத்தி, அந்த விருந்தில் தவறாமல் கலந்துகொண்டால்தான் நித்தியஜீவன் எனக் கூறி வருகின்ரனர். ஆனால் சடங்காச்சாரமான அந்த விருந்தில் நாம் கலந்துகொள்வதால், கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசிக்கவும் இயலாது, அவரது இரத்தத்தைப் பானம் பண்ணவும் இயலாது.

கிறிஸ்துவின் வசனங்கள் நம் ஆவிக்குரிய மனிதனை உருவாக்கும் போஜனமாகவும் பானமாகவும் இருப்பதன்மூலம்தான் கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து அவரது இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர்களாகிறோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

அக்கினி அபிஷேகத்தைக் குறித்து நம்மவர்கள் பேச மாட்டார்கள்!! ”அக்கினி” என்பது பாடுகளையும் சுத்திகரிப்பையும் குறிக்கும் வார்த்தையாகும்!!

அவரது வசனத்தில் (தண்ணீரில்) முங்கி எழுந்தவர்களின் விசுவாசம் சோதிக்கப்படும்படியாக பாடுகளின் மத்தியிலும் செல்ல வேண்டியதாக இருக்கிறது!! இந்த பாடுகளை பென்ஸ் காரிலோ, ஹோண்டா அக்கார்ட் காரிலோ செல்பவர்கள் பிரசங்கிக்க முடியாது!!

1 பேது 1:6. இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.7. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

இப்பொழுது கொஞ்சக்காலம் என்பது இந்த பூமியின் வாழ்வை குறித்து தான் பேதுரு சொல்லுகிறார்!! தண்ணீரில் முங்கி எழுந்தவர்கள் அக்கினி என்னும் சோதனைகளால் புடமிடப்பட்டு அதன் பெலனை கிறிஸ்து இயேசு வரும் போது தான் பெறுவார்கள்!! இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகள் போதிப்பது போல், இன்றே, இப்பொழுதே, இந்த கூட்டத்தை விட்டு செல்லும் முன்னமே இல்லை, மாறாக கிறிஸ்து இயேசு வெளிப்படும் போது தான்!!

1 பேது 4:12. பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், 13. கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

தண்ணீர் ஞானஸ்நானத்தை போதிப்பவர்கள், அக்கினியை குறித்து பேசாதது எதுக்கு என்று அவரின் வார்த்தை என்னும் தண்ணீரில் முங்கி எழுந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்!! ஏனென்றால்,

ரோமர் 8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

மற்றவர்களுக்கு அக்கினி என்றால் "நரகம்" ஒன்றே தெரியும்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

1 பேதுரு 1:6,7 மற்றும் 1 பேதுரு 4:12,13 வசனங்கள் மூலம் அக்கினியால் ஞானஸ்நானம் என்றால் என்னவென்பதை சகோ.பெரியன்ஸ் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இவ்வளவாய் தெளிவான வசனங்கள் இருந்தும், பல பிரபல ஊழியர்கள் கூட்டணி போட்டு, தாங்கள் அக்கினி அபிஷேகத்தை இறக்கப்போவதாகச் சொல்லி, திருப்பத்தூர் எனும் இடத்திற்கு வருடாவருடம் விசுவாசிகளை அழைத்துவருகின்றனர்.

கிறிஸ்துவினிமித்தமும் அவரது வசனங்களின்படி நடப்பதினிமித்தமும் நாம் அனுபவிக்கிற உபத்திரவங்களும் பாடுகளும்தான் நமக்கு அக்கினி ஞானஸ்நானமாக இருக்கின்றன. இந்தப் பாடுகளைக் குறித்து பின்வரும் வசனத்தில் கிறிஸ்து சொன்னதையும் நினைவுகூருவோமாக.

மத்தேயு 16:24 இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

இத்திரியில் தங்கள் கருத்துக்களைப் பதித்து இத்திரியை அநேகருக்குப் பயனுள்ளதாக்கிய சகோ.சுந்தர் மற்றும் சகோ.பெரியன்ஸ்-க்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

அடுத்தபதிவில், நிக்கெதோமுவுடன் இயேசு நடத்திய சம்பாஷணையின் மூலம் ஜலத்தினால்/ஆவியினால் பிறத்தல் என்றால் என்னவென்பதை பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

வேதத்தை வாசித்து புரிந்துக்கொள்ளாமல் வெறுமனே அனுபவ ரீதியாக கிறிஸ்தவத்தை அனுகினால் இப்படி பட்ட முட்டாள்தனமான கூட்டனிகள் திருப்பத்தூரில் மாத்திரம் அல்ல, கோவை, சென்னை, நாகர்கோவில் போன்ற இடங்களிலும் கூட்டம் சேர்த்து வியாபாரம் செய்யும்!!

இன்று கிறிஸ்தவத்தில் எந்த ஊழியன் தான் சீஷனின் பன்பில் இருக்கிறார்!! ஊழியன் என்று சொல்லிக்கொள்ள பிரியப்படுகிறவர் ஒரு ஊழியனை போல் இல்லையே!! உபத்திரவங்கள் பாடுகள் என்ன வென்று இந்த நவீன ஊழியர்கள் அறிந்ததே கிடையாது!! பரம்பரை ஊழியர்கள் வாரிசு ஊழியர்களின் குடும்பங்களின் கதையே இன்னும் வித்தியாசமாக இருக்கும்!! அது எப்படி தேவன் ஒரே குடும்பத்தில் உள்ள அத்துனை பேருக்கும் 'அபிஷேகம்' தந்து தாத்தா முதல் பேரன் பேத்தி வரையில் உள்ள அனைவரையும் 'ஊழியக்காரனாகவும் ஊழியக்காரியாகவும்' மாற்றுகிறாரோ!! மற்ற எல்லோரையும் பரம்பரை பரம்பரையாக சாதாரன விசுவாசிகளாகவே வைத்திருக்கிறார், ஆனாலும் ஒரே வேதம், ஒரே விசுவாசம் ஒரே ஆவியைக்கொண்டிருந்தும்!!

இதற்கு அடிப்படிபடையே, வசனங்களை வாசித்து அதை ஆராயாமல் அதை புரியாமல் அதை புரிந்துக்கொள்ள பிரயாசப்படாமல், வானத்திலிருந்து எந்த ஆவி வேண்டுமென்றாலும் அதற்கு விளக்கும் தரும் என்கிற நம்பிக்கையில் இருப்பதினால் தான் இப்படி எல்லாம் நேருகிறது!!

மேற்படி ஒன்றுமே எழுதாமல் 4 நாட்களாக இந்த பகுதி அப்படியே இருக்கிறதே!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:

//மேற்படி ஒன்றுமே எழுதாமல் 4 நாட்களாக இந்த பகுதி அப்படியே இருக்கிறதே!!//

அன்பான சகோதரரே!

எனது பத்திரிகை மற்றும் வேறு பல அலுவல்களில் ஈடுபட்டிருப்பதால் பதிவைத் தர தாமதமாகிவருகிறது. விரைவில் பதிவுதர முயல்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நிக்கெதோமுவிடம் இயேசு சொன்ன “ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்” என்றால் என்ன என்பதை அறிய, நாம் வேறு வேதாகமப் பகுதிக்குச் செல்லவேண்டியதில்லை. நிக்கெதோமுவுடனான இயேசுவின் சம்பாஷணையிலேயே அவற்றிற்கான அர்த்தங்கள் உள்ளன. அவற்றை சற்று ஆராய்ந்தறிவோம்.

முதலாவதாக நிக்கெதோமுவுடனான இயேசுவின் உரையாடலின் ஆரம்பப் பகுதியைப் பார்ப்போம்.

இயேசு: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

நிக்கெதோமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ?

இயேசு: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

இதுவரையிலான இயேசுவின் வார்த்தைகளின்படி பார்த்தால்,  மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன எனும் கேள்விக்குப் பதிலாகத்தான், ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தலைக் குறித்து அவர் கூறுகிறார் என அறிகிறோம். எனவே மறுபடியும் பிறத்தல் என்பதும் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல் என்பதும் ஒன்றுக்கொன்று சமமானவைகளே என அறிகிறோம்.

தொடர்ந்து வரும் உரையாடலில் இயேசு இவ்வாறு கூறுகிறார்.

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்.

இவ்வார்த்தைகளில் 2 குறிப்புகளை நாம் பார்க்கிறோம்.

1. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாய் இருக்கும் எனக் கூறிய இயேசு, ஜலத்தினால் பிறப்பது எப்படியிருக்கும் என்பதைக் கூறவில்லை.

2. மறுபடியும் பிறப்பதைக் குறித்து அதிசயப்படவேண்டாம் என்று சொன்ன அவர், இறுதியில், ஆவியினால் பிறந்தவன் எப்படி இருப்பான் என்பதை மட்டுந்தான் சொல்கிறாரேயன்றி, ஜலத்தினால் பிறந்தவன் எப்படி இருப்பான் என்பதைச் சொல்லவில்லை.

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்தான் மறுபடியும் பிறத்தல் என ஆரம்ப வரிகளில் சொன்ன இயேசு, மேலே 2-வது குறிப்பில் மறுபடியும் பிறத்தலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்கையில், ஆவியினால் பிறந்தவன் எப்படி இருப்பான் என்பதை மட்டுமே கூறுகிறார். இயேசுவின் இக்கூற்றிலிருந்து, ஜலத்தினால் பிறப்பதென்பது ஆவியினால் பிறத்தலுக்குள் அடங்கியுள்ளது, அல்லது ஜலத்தினால் பிறப்பதும் ஆவியினால் பிறப்பதும் ஒன்றுதான் என அறிகிறோம்.

ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகளை அடுத்தடுத்து இயேசு சொல்வதை பல வசனங்களில் நாம் காணலாம்.

யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

ஆவிதான் ஜீவன், ஜீவன் தான் ஆவி என்பது நாம் அறிந்ததே. (மத்தேயு 27:50; மாற்கு 15:37; லூக்கா 23:46 வசனங்களைப் படித்துப் பார்க்கவும்)

மத்தேயு 11:30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.

நுகம் என்பதும் சுமை என்பதும் ஏறக்குறைய ஒரே அர்த்தத்தை உடையவைதான்.

மத்தேயு 22:37 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

இருதயத்தில்/ஆத்துமாவில்/மனதில் ஆகிய மூன்றிலும் அன்புகூருதலென்பது ஒன்றுக்கொன்று சமமானவைதான். ஒருவனைப் பார்த்து: இவன் இருதயத்தில்தான் அன்புகூருகிறான், ஆனால் ஆத்துமாவில் அன்புகூரவில்லை என்றும் கூறமுடியாது; அல்லது, இவன் ஆத்துமாவில் அன்புகூருகிறான், ஆனால் மனதில் அன்புகூரவில்லை என்றும் சொல்லமுடியாது.

ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்வதற்காக, இப்படி ஒரே உள்ளர்த்தமுள்ள வார்த்தைகளை அடுத்தடுத்து இயேசு பயன்படுத்தியுள்ளார்.

இதேவிதமாகத்தான் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தலை இயேசு கூறுகிறார்.

ஜலத்தினால் பிறத்தலும் ஆவியினால் பிறத்தலும் வேறு வேறெனில், அவற்றைக் குறித்து தனித்தனியான விளக்கத்தை இயேசு கூறியிருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. எனவே,
ஜலத்தினால் பிறத்தலும் ஆவியினால் பிறத்தலும் ஒன்றுக்கொன்று சமமானவை, அல்லது ஒன்றுக்குள்ளொன்று அடங்கியவைகளே.

மறுபடியும் பிறத்தல் குறித்து இன்னும் சில விளக்கங்களை தொடர்ந்து வரும் உரையாடலில் இயேசு கூறுகிறார். அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

முதலாவது "மறுபடியும் பிறத்தல்" என்றால் என்ன என்று விளக்குங்கள்!! பிறகு அடையும் வழியை விவாதிக்கலாமே!!

"மறுபடியும் பிறப்பது" என்று இந்த பெந்தேகோஸ்தே சபைகள் சொல்லி வருகிறார்களே, அதை தான் இந்த பகுதியில் இருக்கிறதா அல்லது வேறு எதுவுமா!! அதை பற்றி முதலில் சொல்லி விட்டு பிறகு விளக்கம் தாருங்கள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:

//முதலாவது "மறுபடியும் பிறத்தல்" என்றால் என்ன என்று விளக்குங்கள்!! பிறகு அடையும் வழியை விவாதிக்கலாமே!!//

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல் தான் மறுபடியும் பிறத்தல் என இயேசுவே சொல்லிவிட்டார்! நானும் அதை எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்! கீழ்காணும் எனது பதிவை மீண்டும் படியுங்கள்.

anbu57 wrote:

//எனவே மறுபடியும் பிறத்தல் என்பதும் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல் என்பதும் ஒன்றுக்கொன்று சமமானவைகளே என அறிகிறோம்.//

இவ்வுண்மையைச் சொல்லிவிட்டுத்தான் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல் என்றால் என்ன என்பதைக் கூறிவருகிறேன்.

bereans wrote:

//"மறுபடியும் பிறப்பது" என்று இந்த பெந்தேகோஸ்தே சபைகள் சொல்லி வருகிறார்களே, அதுதான் இந்தப் பகுதியில் இருக்கிறதா அல்லது வேறு எதுவுமா!! அதைப் பற்றி முதலில் சொல்லி விட்டு பிறகு விளக்கம் தாருங்கள்!!//

மறுபடியும் பிறத்தல் பற்றி பெந்தேகோஸ்தே சபைகள் என்ன சொல்கின்றன என்பது எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆயினும் “தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம்” பெறுவதுதான் மறுபடியும் பிறத்தலின் முதல் பகுதி என்றும், தண்ணீர் ஞானஸ்நானம் இல்லாதவன் மறுபடியும் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் அவர்கள் கூறுவதாக ஓரளவு அறிவேன். இப்படி அவர்கள் சொல்வது நிச்சயமாகச் சரியல்ல என்பதே எனது கருத்து.

இனி, மறுபடியும் பிறத்தல் பற்றி இயேசு நிக்கெதோமுவிடம் கூறியதை தொடர்ந்து ஆராய்வோம்.

ஒருவனிடம் ஆவியினால் பிறத்தல் என்பது எப்படி நிகழும் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் இயேசு கூறியுள்ளார்.

யோவான் 3:6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்.

ஒருவன் எப்போது ஆவியினால் பிறக்கிறான் என்பதை நமது மாம்சக்கண்களால் காண இயலாது. காற்று வீசுவதை அதின் சத்தத்தாலும் உணர்வினாலும் புரிந்து கொள்கிற நாம், அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறதென்பதை நம் மாம்சக் கண்களால் காண இயலாததைப் போலவே, ஒருவன் ஆவியினால் பிறப்பதையும் நம்மால் காண இயலாது.

காற்று வீசுவதை அதன் சத்தத்தால் நாம் அறியமுடியும். அதாவது காற்று வீசுவதால் உண்டான விளைவைக் கொண்டுதான் காற்றுவீசுவதை நாம் அறியமுடியும். அதேவிதமாக, ஆவியினால் பிறந்தவனால் உண்டாகும் விளைவைக் கொண்டுதான் ஒருவன் ஆவியினால் பிறந்துள்ளான் என்பதை அறியமுடியும். காற்று வீசுவதால் உண்டாகும் விளைவு: அதன் சத்தம்; அவ்வாறே ஆவியினால் பிறந்தவனால் உண்டாகும் விளைவு: அவனது ஆவிக்குரிய கிரியைகள்.

அந்த ஆவிக்குரிய கிரியைகளைக் கொண்டுதான் ஒருவன் ஆவியினால் பிறந்துள்ளானா இல்லையா என்பதை அறிய இயலும்.

ஆவிக்குரிய கிரியைகள் எவை என்பதையும் நிக்கெதோமுவிடம் இயேசு  கூறினார்.

யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.

சத்தியத்தின்படி செய்வதுதான் ஆவிக்குரிய கிரியைகள். சத்தியம் என்பது எது?.

யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

தேவவசனமாகிய சத்தியத்தின்படி செய்வதுதான் ஆவிக்குரிய கிரியைகள். ஒருவனது கிரியைகள் தேவனுக்குள்ளானவைகளாக இருக்கும்படி, தேவவசனத்தை அறியத்தக்கதாக அவன் ஒளியாகிய இயேசுவிடம் வருகிறான்.

எனவே ஒளியாகிய இயேசுவிடம் வந்து, சத்திய வசனமாகிய தேவவசனத்தை அவரிடம் கேட்டு, அந்த சத்திய வசனத்தின்படி நடப்பதுதான் ஆவிக்குரிய கிரியைகள்.

ஆவிக்குரிய கிரியைகளை நிக்கெதோமுடம் சொன்ன இயேசு, மாம்சத்தின் கிரியைகளையும் கூறினார். அவை:

யோவான் 3:19,20 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

மனிதனின் பொல்லாத கிரியைகள் அனைத்தும் மாம்சத்திற்குரியவைகளே. எவர்களுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதோ அவர்களெல்லாரும் ஒளியை விரும்பாமல் இருளைத்தான் விரும்புகிறார்கள்.

பொல்லாத கிரியைகளை நடப்பித்து மாம்சத்திற்குரியவனாக இருக்கும் ஒருவன், மறுபடியும் பிறக்கவேண்டுமெனில், முதலில் அவனது மாம்சத்தின் கிரியைகள் ஒழியவேண்டும். அதற்கு அவன் செய்யவேண்டிய காரியம், அவனிடமுள்ள அசுத்தம் எனும் பொல்லாத கிரியைகள் நீங்கத்தக்கதாக அவன் கழுவப்படவேண்டும். ஒருவன் சாதாரண ஜலத்தில் மூழ்கிஎழுகையில் அவனது புறம்பான மாம்சந்தான் சுத்தமடையும். ஆனால் அவனது மாம்சத்தின் கிரியைகள் நீங்கி அவன் சுத்தமடைய வேண்டுமெனில், வேறொரு விசேஷித்த ஜலத்தினால் அவன் கழுவப்பட வேண்டும்.

அந்த விசேஷித்த ஜலம்: தேவ வசனமே. இவ்வுண்மைக்கு ஆதாரமாக எபேசியர் 5:25-27; 1 கொரி. 10:4; 1 பேதுரு 2:3 வசனங்களைக் கூறலாம். இந்த ஆதாரத்திற்காக மட்டுந்தான் “நிக்கெதோமு - இயேசு உரையாடலை” விட்டு நாம் வெளியே செல்ல வேண்டியதுள்ளது.

மற்றபடி, பொல்லாத கிரியைகளைச் செய்து இருளில் இருக்கும் ஒருவன், ஒளியாகிய இயேசுவிடம் வந்து அவரது வசனங்களாகிய சத்தியத்தின்படி செய்வதுதான் மறுபடியும் பிறத்தல் என்பதை அந்த உரையாடலிலேயே (யோவான் 3:19-21) இயேசு தெளிவாகக் கூறிவிட்டார்.

ஜலத்தினால் பிறத்தல் என்பது தண்ணீரில் மூழ்கி எழுகிற ஞானஸ்நானம் என இயேசு குறிப்பிடவில்லை. தண்ணீரில் மூழ்கிஎழும் ஞானஸ்நானம் மாம்சத்தின் அழுக்கை மட்டுமே நீக்கக்கூடியது. ஆனால் மாம்சத்தின் பொல்லாத கிரியைகளெனும் அழுக்கு, ஜலத்தினால் நீக்கப்படுவதைக் குறித்துதான் இயேசு கூறுகிறார். இது சம்பந்தமாகக் கூறுகிற 1 பேதுரு 3:20,21 வசனங்களையும் படிப்போம். இவ்வசனங்கள் தமிழ் வேதாகமத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. எனவே NIV வேதாகமத்தில் அவற்றைப் படித்து, தமிழில் அவற்றை மொழிபெயர்த்துப் படிப்போம்.

1 Peter 3:20,21 In it (Noah's ark) only a few people, eight in all, were saved through water, and this water symbolizes baptism that now saves you also-not the removal of dirt from the body but the pledge of a good conscience toward God.- NIV

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு:

நோவாவின் பேழைக்குள்ளிருந்த 8 பேராகிய சிலர் மட்டுமே தண்ணீர் மூலம் காக்கப்பட்டனர். அந்தத் தண்ணீர் உங்கள் மாம்சத்தின் அழுக்கை நீக்குகிற ஞானஸ்நானத்தின் அடையாளமாயிராமல் தேவனைப் பற்றுகிற நல்மனச்சாட்சியின் உடன்படிக்கைக்கு அடையாளமாயுள்ளது.

நேவாவின் காலத்தில் தண்ணீரில் மூழ்கின ஜனங்கள் அனைவரும் அழிந்து போயினர். ஆனால் தண்ணீரில் மிதந்த பேழைக்குள்ளிருந்த 8 பேர் மட்டுமே காக்கப்பட்டனர். அந்த 8 பேர்தான் தேவனைப் பற்றுகிற நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை அடையாளமான ஞானஸ்நானத்தைப் பெற்றதாக பேதுரு கூறுகிறார்.

எனவே வெறுமனே தண்ணீரில் மூழ்கி எழுகிற ஞானஸ்நானம், நல்மனச்சாட்சியின் உடன்படிக்கைக்கு அடையாளம் அல்ல. அது மாம்சத்தின் அழுக்கை மட்டுமே நீக்கும். பேதுரு இவ்வாறு கூறியிருக்கையில், வெறுமனே தண்ணீரில் மூழ்கிஎழுகிற ஞானஸ்நானம் தான் ஜலத்தினால் பிறத்தல் என இயேசு கூறியிருப்பாரா?

நோவா சொன்ன (ஜலமாகிய) தேவவார்த்தைகளை அன்றைய ஜனங்கள் கேட்டதைப் போலவே, நாமுங்கூட ஜலமாகிய தேவவார்த்தைகளைக் கேட்கத்தான் செய்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளால் நம் மனச்சாட்சி சுத்தமடைய முயலாமல், வெறுமனே தண்ணீரில் மூழ்கிஎழுகிற ஞானஸ்நானத்தில் நாம் திருப்தியடைந்து விடுவதால், அன்றைய ஜனங்களை ஜலம் அழித்ததைப் போலவே நாம் கேட்ட தேவவார்த்தைகளாகிய ஜலம் நம்மையும் அழித்துவிடும். இக்கருத்தைப் பின்வரும் வசனத்தில் இயேசுவும் கூறியுள்ளார்.

யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

ஆம், வசனமாகிய ஜலம் நோவாவைக் காத்ததைப் போல் காக்கவும் செய்யும், அதே வசனமாகிய ஜலம் வசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களை அழித்ததைப்போல், கடைசி நாளில் நம்மை நியாயந்தீர்த்து அழிக்கவும் செய்யும் என்பதை அறிவோமாக.

இதுவரையிலான நம் தியானத்தின் மூலம், மறுபடியும் பிறத்தல் என்பது தேவவசனங்களாகிய சத்தியத்தைக் கேட்டு அவற்றின்படி நடந்து ஒளியாகிய இயேசுவை அடைதலே என அறிகிறோம். இந்த மறுபடியும் பிறத்தலில் வெறுமனே தண்ணீரில் மூழ்கிஎழுகிற ஞானஸ்நானம் அடங்கவில்லை என்பதையும் அறிகிறோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

உங்கள் விளக்கத்தின்படி மறுபடியும் பிறக்கும் மனிதன் அவன் செய்யும் கிரியைகளினால் அறியப்படுகிறான் என்று வைத்துக்கொண்டால் கூட எனக்கு இருக்கும் ஒரே சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்!!

இயேசு கிறிஸ்து வாக்களித்த பரிசுத்த ஆவியை முதலில் பெற்றுக்கொண்ட அப்போஸ்தலர்கள் கூட இயேசு கிறிஸ்து பரமேரிய பிறகே என்று வேதம் நமக்கு சொல்லியிருக்கிறது!! அப்படி என்றால், நிக்கெதோமு பரிசுத்த ஆவியின் கிரியை எப்படி தான் அறிய வாய்ப்பு உள்ளது!!

என் புரிந்துக்கொள்ளுதலின்படி, இயேசு கிறிஸ்து ஒருவரே ஆவியில் (ஆவியால்) உயிர்ப்பிக்கப்படவராக இருக்கிறார் (மறுபடியும் பிறந்தவர்)!! மறுபடியும் பிறந்த மனிதன் காற்றை போல் இருக்கிறானாம், அதாவது கண்களுக்கு தெரியாதவனாக இருக்கிறான் (இயேசு கிறிஸ்து அப்படி இருந்தார், மூடிய அறைகளுக்குள் நுழைந்தார்)!! ஜலத்தினால் (ஞானஸ்நானம்) பிறந்தார், ஆவியினாலும் (தேவனின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்தார்) பிறந்தார், அதன் பின் தேவ சித்தத்தின்படி ஆவியாக (காற்றைபோல்) உயிர்த்தெழுந்தார்!!

அப்படிப்பட்ட ஒரு உயிர்த்தெழுதலை ஏன் மறுபடியும் பிறப்பது என்று எடுக்க கூடாது!? அப்படி பட்ட ஒரு உயிர்த்தெழுதல் (ஆவியில் உயிர்ப்பிக்கப்படுதல்) பெற நிச்சயமாகவே ஒரு மனிதன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறந்திருக்க வேண்டும்!! இது வரையில் இயேசு கிறிஸ்து ஒருவரே மறுபடியும் பிறாந்தவர் என்றும், மற்றவர்கள் அந்த நிலையை அடைய காத்திருக்கிறார்கள் என்பது என் கருத்து!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//இயேசு கிறிஸ்து வாக்களித்த பரிசுத்த ஆவியை முதலில் பெற்றுக்கொண்ட அப்போஸ்தலர்கள் கூட இயேசு கிறிஸ்து பரமேரிய பிறகே என்று வேதம் நமக்கு சொல்லியிருக்கிறது!! அப்படி என்றால், நிக்கெதோமு பரிசுத்த ஆவியின் கிரியை எப்படி தான் அறிய வாய்ப்பு உள்ளது!!//

இயேசுகிறிஸ்து பரமேறிய பிறகுதான் பரிசுத்த ஆவி என வேதம் சொல்வதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் யோவான்ஸ்நானகன் தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது எப்படி (லூக்கா 1:15)? சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது எப்படி (லூக்கா 1:67)?

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த சகரியாவையும் யோவான்ஸ்நானகனையும் ஆவியினால் பிறந்தவர்களாக ஏன் கருதக்கூடாது?

bereans wrote:
//மறுபடியும் பிறந்த மனிதன் காற்றை போல் இருக்கிறானாம், அதாவது கண்களுக்கு தெரியாதவனாக இருக்கிறான் (இயேசு கிறிஸ்து அப்படி இருந்தார், மூடிய அறைகளுக்குள் நுழைந்தார்)!!//

இயேசுகிறிஸ்து கண்களுக்குத் தெரிகிறவராகவும் இருந்தாரே! மரியாள் முதல் அவருடைய சீஷர்கள் அனைவரும் தங்கள் மாம்சக் கண்களால் அவரைக் கண்டனரே! ஆணியடிக்கப்பட்ட தமது கைகளை அவர் காட்டினாரே! தோமாவின் கைகளை தமது விலாவிலே போடும்படி
தோமாவிடம் சொன்னாரே (யோவான் 20:27!.

மறுபடியும் பிறந்தவன் காற்றைப் போல இருக்கவேண்டுமெனில் எப்பொழுதும் பிறரது கண்களுக்குத் தெரியாதவனாக அல்லவா இருக்க வேண்டும்? சில நேரம் பிறரது கண்களுக்குத் தெரியும்படியும், சில நேரம் பிறரது கண்களுக்குத் தெரியாதபடியும் இருப்பதை எப்படி காற்றைப் போல் இருப்பதாகக் கூறமுடியும்?

bereans wrote:
//ஜலத்தினால் (ஞானஸ்நானம்) பிறந்தார், ஆவியினாலும் (தேவனின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்தார்) பிறந்தார், அதன் பின் தேவ சித்தத்தின்படி ஆவியாக (காற்றைபோல்) உயிர்த்தெழுந்தார்!! அப்படிப்பட்ட ஒரு உயிர்த்தெழுதலை ஏன் மறுபடியும் பிறப்பது என்று எடுக்க கூடாது!?//

நல்லது சகோதரரே!

இயேசுவைப் போல ஜலத்தினால் பிறந்து (அதாவது ஞானஸ்நானம் பெற்று), ஆவியினாலும் பிறப்பவன் தான் (அதாவது தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து, மரித்து, உயிர்த்தெழுபவன்) மறுபடியும் பிறந்தவன் எனில், இவ்வுலக மக்கள் அனைவரும் 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுகையில், அவர்களில் பலர் மறுபடியும் பிறக்காதவர்களாக அல்லவா இருப்பார்கள்? ஏனெனில், இவ்வுலக ஜனங்களில் பலர் இவ்வுலகில் ஜலத்தினால் பிறப்பதில்லை (அதாவது ஞானஸ்நானம் பெறுவதில்லை); பலர் ஆவியினாலும் பிறப்பதில்லை (அதாவது இயேசுவைப் போல் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து மரிக்கவில்லை). அவ்வாறெனில் இவ்வுலக மக்களில் பலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டார்களா?

இன்னும் சொல்லப்போனால், இவ்வுலக மக்களில் எவருமே தேவ வார்த்தைகளுக்கு முழுமையாகக் கீழ்படிந்து வாழ முடியாது என நீங்கள் கூறுகிறீர்கள். அவ்வாறெனில் யாருமே தேவனுடைய ராஜ்யத்தைக் காண முடியாதா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

யோவான் 7:38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். 39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.

சகரிய பெற்றதோ, யோவான் பெற்றதோ, அல்லது தாவீதோ, சவுலோ ஆவியை பெற்றது ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக மாத்திரமே, அதன் பின் அந்த ஆவி அவர்களிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். மேலும் சகரியாவோ, யோவானோ, ஏன் மரியாள் கூட அந்த ஆவியை பெற்றிருந்தாலும் அவர்கள் பழைய ஏற்பாட்டு பலிகளையே செலுத்தி வந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறதே!! இயேசு கிறிஸ்து "ஆவியால் பிறப்பது" என்பது சகரியாவிற்கோ, யோவானுக்கோ கிடைத்த ஆவியை குறித்து அல்ல, மாறாக ஆவியால் பிறப்பது (இரண்டாம் ஆதாம் உயிர்ப்பிக்கும் ஆவியானார், அதாவது உயிர்த்தெழச்செய்யும் ஆவியானார்) என்பது கிறிஸ்துவினால் உயிர்ப்பிக்கப்படுதலையே குறிக்கும் என்று நான் நினைக்கிறேன்!! ஏனென்றால்,

இவர்கள் யாரும் ஜலத்தினால் (ஞானஸ்நானம்) பிறக்கவில்லையே!! இயேசு சொல்லுகிற ஞானஸ்நானம் அவர் பரமேறும் போது தானே அப்போஸ்தலர்களுக்கே கட்டளையாக சொல்லுகிறார்.

மத். 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;

ஆகவே யோவானோ, சகரியாவோ ஆவியால் பிறந்தவர்கள் என்று கருத முடியாது அல்லது கூடாது!!

இயேசு கிறிஸ்து ஒருவரே உயிர்த்தெழுந்து ஆவியான சரீரத்தை தரித்துக்கொண்டிருப்பவர், ஆனால் சீஷர்கள் குறிப்பாக அப்போஸ்தலர்கள், இயேசு கிறிஸ்து மரித்து விட்டாரே, இனி நம் கதி என்ன என்கிற பீதியில் இருக்கும் போது, அவர்களை பெலப்படுத்தவே அவர்களுக்கு தோன்றினார், காட்சியளித்தார்!! அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துக்கொள்ளும்படியாக அவர்களுக்கு 'தரிசனமானார்' மற்றப்படி அவர் வேற் யார் பார்வைக்கும் பட்டதாக இல்லையே!!

அப்.1:3. அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

அதுவும் நாற்பது நாட்களே!!

நாற்பது நாட்களுக்கு பின் யாரும் ஆவியாக இருக்கும் கிறிஸ்துவை பார்த்ததில்லை (இன்று ரீல் விடும் சில 'தேவ மனுஷர்களை' தவிர)!! அப்போஸ்தலர்களுக்கும் சீஷர்களுக்கும், "பரிசுத்த ஆவி" வழங்கப்படும் போதுக்கூட தான் பலத்த காற்றின் சத்தமும், அக்கினிமையமான நாவுகளுமாக வந்ததே!! இன்று என்ன அப்படியா நடக்கிறது!! அவர்களுக்கு வெளிப்புற அடையாளம் தேவைப்பட்டதால், கிறிஸ்து அப்படி செய்ய சித்தமானார்!! ஆகவே உயிர்த்தெழுந்த இயேசுவை பார்த்தார்கள் என்றால் இதற்காக தான்!!

தேவனுடைய இராஜியம் "மாம்ச சரீரம்" உள்ளதும் "ஆவிக்குறிய சரீரம்" கொண்டதுமாகவே இருக்கும்!! இதில் ஆவிக்குறிய சரீரமாக, அதாவது கிறிஸ்துவின் சாயலில் தேவ ராஜியத்திற்குள் (பரலோகம் என்று பிரசங்கிக்கிறார்களே, அது தான் இது) நுழைவோர் மிகவும் குறைவானவர்களே (இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிப்பவர்கள்)!! மீதமானோர் அனைவரும் இதே பூமியில் மாசத்தில் பிறப்பார்கள்!!

1 கொரி 15:40. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; (மேலும் 1 கொரி 15: 35 முதல் 45 வரை தியானித்து பாருங்கள்)

எல்லோருமே தேவனுடைய இராஜியத்திற்குள் தான் வருவார்கள், சிலர் ஆவிக்குறிய மேனியுடன், கிறிஸ்துவின் சாயலாக மாற்றப்பட்டு தேவனை தரிசிப்பவர்களாகவும், மற்றவர்கள் மாம்சத்துக்குறிய மேனியுடன் இதே பூமியில் வருவார்கள் (அனைவருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்பினால்)!!

யாருமே முழுமையாக கிறிஸ்துவின் வார்த்தைகளின் படி வாழவில்லை என்பது நான் மாத்திரம் இல்லை வேதத்தை படிக்கும் யாரும் ஒப்புக்கொள்வார்கள் (மனசாட்சியில் பொய்யர்களை தவிர, ஏனென்றல் மற்ற மார்க்கத்தாரை காட்டிலும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை தாழ்த்தாமல் உயர்த்தி பேசுவோர் தான் இன்று அதிகமாக இருக்கிறார்கள்)!! ஆகவே தான் தேவனின் கிருபை, அவரின் முன்குறித்தல், அவரின் தெரிந்துக்கொல்ளுதள் இருக்கிறது என்றும் சொல்லுகிறேனே!!

இன்னும் பகிர்ந்துக்கொள்வேன்!! திறாந்த மனதுடன் விவாதிக்கலாம்!! "மறுபடியும் பிறப்பது" என்பது விவாதிக்க வேண்டிய மிகவும் அவசியமான தலைப்பு!! பெந்தகோஸ்தே சபையார் மறுபடியும் பிறந்தவர்கள் என்றால்,  ஞானஸ்நானம் எடுத்து "அந்நிய பாஷை பேச வேண்டும்" "துள்ளி குதிக்க வேண்டும் (ஆவியில் நிறம்பியாம்)" போன்றவற்றை செய்பவராக இருக்க வேண்டும்!! இது தான் அவர்களின் புரிந்துக்கொள்ளுதலில் "மறுபடியும் பிறத்தல்"!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//இன்னும் பகிர்ந்துக்கொள்வேன்!! திறாந்த மனதுடன் விவாதிக்கலாம்!! "மறுபடியும் பிறப்பது" என்பது விவாதிக்க வேண்டிய மிகவும் அவசியமான தலைப்பு!! பெந்தகோஸ்தே சபையார் மறுபடியும் பிறந்தவர்கள் என்றால்,  ஞானஸ்நானம் எடுத்து "அந்நிய பாஷை பேச வேண்டும்" "துள்ளி குதிக்க வேண்டும் (ஆவியில் நிறம்பியாம்)" போன்றவற்றை செய்பவராக இருக்க வேண்டும்!! இது தான் அவர்களின் புரிந்துக்கொள்ளுதலில் "மறுபடியும் பிறத்தல்"!!//

நல்லது சகோதரரே! மறுபடியும் பிறத்தல் சம்பந்தமான எனது சில கேள்விகளுக்கு நேரடியான பதிலைச் சொன்னால், இவ்விஷயத்தில் நாம் தெளிவடைய ஏதுவாயிருக்கும்.

1. மறுபடியும் பிறத்தல் பற்றி நிக்கெதோமுவிடம் இயேசு சொன்னது, நிக்கெதோமுவுக்கும் உரித்தானதுதானே?

2 (a). ஆம் எனில், இயேசு சொன்னபடி மறுபடியும் பிறப்பதற்கு நிக்கெதோமு என்ன செய்திருக்க வேண்டும்?

(b). இல்லை எனில், நிக்கெதோமுவிடம் அதை ஏன் இயேசு சொன்னார்?

3. இவ்வுலகில் நம்மில் யாரேனும் மறுபடியும் பிறக்க இயலுமா?

4(a). ஆம் எனில், மறுபடியும் பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

(b). இல்லை எனில், நாம் எப்போது மறுபடியும் பிறக்க முடியும்?

bereans wrote:
//ஜலத்தினால் (ஞானஸ்நானம்) பிறந்தார்,//

5. ஜலத்தினால் பிறத்தல் என்றால் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுதல் என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு எழுதியுள்ளீர்களா?

தயவுசெய்து நேரடியான பதில்களைத் தரவும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

anbu wrote:
//1. மறுபடியும் பிறத்தல் பற்றி நிக்கெதோமுவிடம் இயேசு சொன்னது, நிக்கெதோமுவுக்கும் உரித்தானதுதானே?//

நிச்சயமாகவே நிக்கெதோமுவிடம் தான் இயேசு கிறிஸ்து இந்த பகுதிய ஆரம்பிக்கிறார் ஆனால்,

7. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம், நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

போன்றவைகளில் "நீங்கள்" என்பது இதன் மூலம் கற்றுக்கொள்பவர்களையே குறிக்கும் என்பது என் கருத்து. நிக்கெதோமு போதகராக இருந்தாலும் அவனால் இந்த காரியத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை!!

பதிவு தொடரும்.........



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard