நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம்மை பகைப்பவர்கள்!!


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
நம்மை பகைப்பவர்கள்!!
Permalink  
 


யோவான் 15:20. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். 21. அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

யோவான் 16:. 2.அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். 3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.

யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

இயேசு கிறிஸ்துவின் பிதா யார் என்று தெரியாத திரித்துவ கூட்டனி என்ன தான் பரிகாசமாக நம்மை பேசினாலும், வசனம் நமக்கு சாதகமாக இருக்கிறது!! இயேசு கிறிஸ்துவை துன்பப்படுத்திய அறியாமை கூட்டம் இன்றும் நம்மை துன்பப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது!! நாமோ வசனத்தை கைக்கொள்கிறோம், இவர்களோ பாரம்பரியத்தை கைக்கொள்கிறார்கள்!! பிதா தான் இயேசுவாக வந்தார் என்று இவர்களின் வாதம் கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி தவிடுபொடுயாகிவிடுகிறது, ஏனென்றால் கிறிஸ்து சொல்லுகிறார் அவர்கள் (திரித்துவவாதிகள்) கிறிஸ்துவை அனுப்பினவரை அறியாது இருக்கிறார்கள்!! ஆனாலும் இவைகளையெல்லாம் இவர்கள் வாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் மூலமாக நமக்கு தெரியப்படுத்தியும், இவர்கள் செய்யும் பாவத்தை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள், ஆனாலும் வேதத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் இதை பேசுவதால், இவர்களுக்கு போக்குச்சொல்ல இடமில்லை!! இதை கிறிஸ்து இயேசுவே இவர்களுக்காக சொல்லுவதாக அமைந்திருக்கிறது!!

நம்மை கொலைசெய்யும் வெறியுடன் இருக்கும் சில்சாமிற்கு யோவான் 16:2 மிகவும் பொருத்தமாக இருக்கிறது!! இவர் இப்படி நம்மை கொலை வெறியோடு எழுதுவதை தான் பலர் இந்த சில்சாம் தேவனுக்கு தொண்டுசெய்கிறவர்னென்று நினைக்க வைக்கிறது!! வசனம் எத்துனை உண்மையுள்ளது என்பதை வசனம் தெரிந்தவர்கள் அறியட்டும்!! இவர்களுக்கு பிதா யார் என்றும், கிறிஸ்து யார் என்று அறியாததினால் தான் இந்த சூழல்!!

நாமோ யோவான் 7:28ல் உள்ளபடி, கிறிஸ்து இயேசு யார் என்று அறிவோம், அவர் சுயமாக வராமல், பிதாவாகிய தேவனே அவரை அனுப்பி வைத்தார் என்று நாம் அறிவோம், ஆனால் இந்த திரித்துவ கூட்டம் அவரை அறியாதிருப்பதினால், அவர் தான் இவர் என்று போதித்து வருவது வசனம் எத்துனை சத்தியமுள்ளது என்பதை நிரூபிக்கிறது!!

யோவான் 17:25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

நம்மை குறித்தே கிறிஸ்து இயேசு தன(நம்) பிதாவிடத்தில் இப்படியாக சொல்லியிருக்கிறார்!! கிறிஸ்து இயேசு பிதா இல்லை என்றும், மாறாக பிதா தான் கிறிஸ்து இயேசுவை அனுப்பினார் என்று நமக்கு வசனத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்!!

போகட்டும், இவர்கள் இவர்களின் இயேசு சாமி, இயேசு நாதர், அருள் நாதர் போன்ற குலத்தெய்வங்களிடத்தில் திருப்த்தியடயட்டும், நாமோ கிறிஸ்து இயேசுவின் பாத சுவடுகளை பற்றி கொண்டு நடப்போம்!! ஏனென்றால் இவர்களின் பகை நம்மோடு நின்று விடவில்லை, மாறாக, கிறிஸ்து இயேசு சொல்லுவது போல்,

யோவான் 15:18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

பாரம்பரிய விசுவாசத்தில் உள்ளவர்கள் தான் உலகத்தார் என்பதை திரித்துவ பாரம்பரியத்தை பின்பற்றுவோர் தெரிந்துக்கொள்ளட்டும்!!


இவர்கள் சொல்லுவது போல் இல்லாமல், கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி,

யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

அனைவரும் பிதாவை தொழுதுக்கொள்ளுங்காலம் வருகிறாது என்று கிறிஸ்து இயேசுவே சொன்ன பிறகு இந்த திரித்துவ வாதிகள் என்ன சொல்லியும் என்ன பிரயோஜனம்!!


__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Newbie

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

அன்புச் சகோதரர் அன்பு அவர்களுக்கு

நித்திய ஜீவன் விவாத மேடையை சில மாதங்களாகப் பார்க்கிறேன். பயனுள்ள பல கருத்த்களை சொல்லியுள்ளீர்கள். ஆனால் சில நாளாக வேலை வெட்டி இல்லாமல் மற்றவர்களை தனிப்பட்ட முறையில் விமரிசிக்கிற சிலருக்கு பதில் சொல்வதில்தான் அதிக நேரத்தை வீனாக்குகிறீர்கள். உங்களை குற்றப்படுத்துவதாய் நினைக்காதீர்கள். காலத்தைப் பிரயோசனமாய் பயன்படுத்தத் தவறுகிறீர்களோ என ஆதங்கப்படுவதால் சொல்கிறேன்.

வேதத்தைப் புரட்டுவதுபோல் உங்கள் வார்த்தையையும் புரட்டுகிற கொல்வின், சில்சாமின் ஆகியோரின் வஞ்சகத்தை இன்னும் நீங்கள் புரியவில்லையா? அவர்களின் வஞ்சகத்துக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ராஜ்குமாரை அறிவில்லாதவன் என்ற அர்த்தத்தில் பேதையர் என நீங்கள் சொன்னீர்கள் என்பது அனைவரும் புரியக்குடியதாக உள்ளது. ஆனால் கொல்வின் என்பவர் மிகவும் வஞ்சகமாக பேதையர் என்றால் பெண்கள் என்ற அர்த்தமும் உண்டு எனச் சொல்லி நீங்கள் அந்த அர்த்தத்தில் சொன்னதாக புதுக்கதை விட்டார். கொல்வின் சொன்னதை பிடித்துக்கொண்டு நீங்கள் பெண்களை இழிவு படுத்தியதாக சில்சாம் சொல்லி தந்திரமாக உங்களை பெண்களின் எதிரியாக மாற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட அநேக வஞ்சகங்கள் அவர்களிடம் உண்டு. எனவே உங்களுக்கு நான் சொல்கிற ஆலோசனை: அந்த வஞ்சகர்களின் தளத்துக்கு நீங்கள் செல்லவேண்டாம் என்பதே. நித்திய ஜீவன் தளத்தில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பதிவுகளை மட்டும் கொடுங்கள்.

சகோ.பெரியன்ஸ் சொன்னபடி உலகத்தைச் சேர்ந்த அவர்கள் உங்களைப் பகைக்கத்தான் செய்வார்கள், உங்களை சிக்கலில் மாட்டிவிட கண்ணியையும் விரிப்பார்கள். அவ்ர்கள் கண்ணியில் நீங்கள் விழாமல் இருக்கணுமானால் அவர்கள் தளத்திற்கு நீங்கள் செல்லாமல் இருப்பதுதான் ஒரே வழி.

சில்சாமுக்கு எச்சரிக்கை:

//நீக்கப்பட்டது//



-- Edited by Jeyam on Monday 28th of March 2011 10:23:34 AM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.ஜெயம் அவர்களை இத்தளத்தில் அன்புடன் வரவேற்கிறேன்.

Jeyam wrote:

//இப்படிப்பட்ட அநேக வஞ்சகங்கள் அவர்களிடம் உண்டு. எனவே உங்களுக்கு நான் சொல்கிற ஆலோசனை: அந்த வஞ்சகர்களின் தளத்துக்கு நீங்கள் செல்லவேண்டாம் என்பதே. நித்திய ஜீவன் தளத்தில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பதிவுகளை மட்டும் கொடுங்கள்.//

தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி சகோதரரே! நானும் கூட அடிக்கடி நீங்கள் சொல்வதுபோல் நினைப்பதுண்டு; ஆகிலும் இதோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வருகிறேன். ஆனாலும் முடிந்தபாடில்லை. பிரயோஜனமானவற்றில் கவனம் செலுத்தாமல் இப்படி செய்கிறோமே என அடிக்கடி நானும் நினைப்பதுண்டு; நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் தளத்திற்கு செல்லவேண்டாம் என்றும் நினைத்ததுண்டு. ஆகிலும் அவர்கள் என்னதான் எழுதுகின்றனர் என பார்ப்போமே எனும் ஓர் உந்துதலில் அங்கு சென்றுவிடுகிறேன். அங்கு அவர்கள் எழுதியதைப் பார்த்ததும் பதில் எழுத உந்தப்படுகிறேன்.

இனி நீங்கள் சொல்வது போல் அங்கு செல்லாதிருக்க முயல்கிறேன்; அப்படியே சென்றாலும் அவர்கள் எழுத்தைக் கண்டுகொள்ளாமலும் பதில் எழுதாதிருக்கவும் முயல்கிறேன்.

Jeyam wrote:

//சில்சாமுக்கு எச்சரிக்கை://

வேண்டாம் சகோதரரே! பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

எரேமியா 17:5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். 8 அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

ஆம் சகோதரரே! மனுஷன் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வுகாண முயலவேண்டாம். சில்சாமின் பதிவை மனுஷரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்போவதாகச் சொல்லி சில்சாமை எச்சரித்துள்ள வாசகங்களை தயவுசெய்து நீங்களாகவே எடுத்துவிடுங்கள்.

நாம் எல்லாவற்றையும் தேவனிடம் தெரிவிப்போம். நீதியுள்ள நியாயாதிபதியாகிய அவர் தமது நீதியின்படியே செய்வாராக. மீண்டுமாக அன்புடன் வேண்டுகிறேன்; சில்சாமை எச்சரிக்கும் வாசகங்களை நீக்கிவிடுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

//இராணுவத்தின் பலத்தைவிட மக்கள் சக்தியே இங்கு மேன்மையானது;இராணுவத்தையும் வங்கி அமைப்பையும் துப்புரவு தொழிலாளர்களையும் நான் ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்திவிட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நான் முழுவதும் மறுக்கிறேன்;அதுபோன்ற குற்றச்சாட்டுகள் விஷமத்தனமானதாகும், அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்; இந்த மிரட்டல்களூக்கு நான் ஒருபோதும் பணியவே மாட்டேன் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.//

 

இப்படி எழுதி மீண்டும் இந்த விஷயத்திற்கு ஒரு ஆரம்பத்தை கொடுக்க நினைக்காதேயும்!! நீர் ஏதோ அறைகுறையாக மண்ணிப்பு கேட்டீர் என்று தான் நான் என் முழு திரியையே நீக்கினேன்!! நீர் எழுதியது இன்னும் என்னிடத்திலும் இருக்கிறது!! மண்ணிப்பு கேட்ட ஒரு விஷயத்தை நான் ஒன்றும் செய்யாததற்கு மண்ணிப்பு கேட்டேன் என்று பிரபலப்படுத்தீர்!! இந்த கடைசி பதிவு உம் திமிர்த்தனைத்தை தான் காண்பிக்கிறது!! இப்படி எழுதி மீண்டும் சர்ச்சையை துவக்கி வைக்காதீர் என்று எச்சரிக்கை செய்கிறேன்!!

 

கொல்வின், ஜான், ஜோஸப் அவர்களே, தேவையில்லாமல் ராணுவ விஷயத்தில் சில்சாம் எழுதியதில் நீங்கள் நுழைய நினைக்காதீர்கள் என்பதை மாத்திரம் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்!! ஒன்றும் செய்ய போவதில்லை என்கிற மமதையில் சில்சாம் இன்னும் எழுதிக்கொண்டு இருப்பது உங்கள் மூவருக்கும் தெரியவில்லை போல்!! இத்துனை எழுதியும், இன்னும் தான் தப்பாக ஒன்றும் எழுதவில்லை என்று கூப்பாடு போடுவது அவரின் அசட்டைத்தனத்தையே காண்பிக்கிறது!! தான் எழுதியது எத்துனை பெரிய தவறு என்பதை அறியாமல், ஏதோ ஜோஸப் அவருக்கு சாதகமாக எழுதியதை சுட்டி காண்பித்து ஜோஸப் அவர்களையும் தன் வலையில் இழுத்துக்கொள்ள பார்க்கிறார், ஜோஸப் அவர்களே தாங்கள் இதில் பங்கு பெற வேண்டாம் என்று நல்ல மனதுடன் உங்களுக்கு சொல்லுகிறேன், உங்கள் மூவரால் முடிந்தால் இவர் இப்படிபட்ட ஒரு பொய்யை திமிராம மீண்டும் மீண்டும் சொல்லுவதை நிறுத்த சொல்லுங்கள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Newbie

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்களே, தேசத்தின் சில பிரிவினரை நேரடியாக தாக்கின சில்சாம், நீங்கள் ராஜ்குமாரை தனிப்பட்டமுறையில் பேதையர் எனச் சொன்னதற்கு அவராக ஒரு அர்த்தம் கற்பித்து, உங்களை பெண்களின் எதிரியாக மாற்ற முயன்றதை கவனித்தீர்களல்லவா? அந்த வஞ்சக புத்திக்காகத்தான் சில்சாமின் பழைய கதையை நினைவுபடுத்தி அவரை எச்சரித்தேன். தவறை எண்ணி திருந்திய ஒருவரிடம் எத்தனை தாழ்மை வேண்டும்? ஆனால் இவரிடம் கொஞ்சமும் தாழ்மை இல்லை. மறுபடி மறுபடி ஏதாவது சொல்லி யாரையாவது வம்புக்கல்லவா இழுக்கிறார்? அதனால்தான் அப்படி எச்சரித்தேன். ஆயினும் என் அறியாமையை உணர்த்துமாறு நீங்கள் சுட்டியுள்ள வசனங்களை நான் ஏற்கிறேன். சில்சாமுக்கான எனது எச்சரிக்கையை திரும்பப்பெறுகிறேன். தங்கள் அறிவுரைப்படி எனது எச்சரிக்கையை நீக்கிவிட்டேன். ஆனால் தற்போது என்னையும் அவர் வசவத் தொடங்கிவிட்டார். இவருக்கு தேவன்தான் நல்லபுத்தியை கொடுக்கணும்.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.ஜெயம் அவர்களே!

நான் கேட்டுக்கொண்டபடி தங்கள் பதிவை நீக்கியதற்கு நன்றி.

இத்தளத்தை சில மாதங்களாகப் பார்த்துவரும் நீங்கள், இதுவரை பதிவேதும் தராததற்குக் காரணம் ஏனோ? இனியாவது பயனுள்ள பதிவுகளைத் தரும்படி வேண்டுகிறேன்.

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிட்டது. இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.

முட்செடிகளில் அத்திப்பழங்களை பறிக்கமுடியுமா, அல்லது நெருஞ்சிச் செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கமுடியுமா? (லூக்கா 6:44)

கெட்ட மரமானது நல்ல கனிகளைக் கொடுக்காது. (லூக்கா 6:43)

நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் (லூக்கா 3:9).

இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

////மற்றவர்களை குறை சொல்லும் சில்சாம் சண்டை போட்ட நபர்களின் விவரம் ஜான்சன் கென்னடி , அன்பு , இளங்கோ , சுந்தர் ,ஆபிரகாம் , ஆதாம், தினோ , கருணா , குரு , சகாயம் , நிசி மற்றும் பலர்

 

கிறிஸ்தவத்தின் அன்பை நமது சகோதரர் சில்சாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்,

மேலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் காட்டு என்பது அவர்புரிந்து கொண்ட வேதம் போல ..................

நல்ல சாட்சி இவரெல்லாம் கிறிஸ்தவராம்,

 

அவர்களுக்கு இவர் கொடுத்த பட்டம், வேத புரட்டர்கள் , அந்திகிறிஸ்து , பாவிகள் , இன்னும் பல..................

 

என்ன கொடுமை சார் இது.......

 

http://lord.activeboard.com/forum.spark ////////////////

 

அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள் 



__________________
Chelva
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard