நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இத்தள பதிவுகளின் மேற்கோளுக்கு தொடுப்பு தரவேண்டியதில்லை!


Militant

Status: Offline
Posts: 830
Date:
இத்தள பதிவுகளின் மேற்கோளுக்கு தொடுப்பு தரவேண்டியதில்லை!
Permalink  
 


அன்பான தள நண்பர்களே!

இத்தளத்தை நான் அமைத்ததன் நோக்கம் தேவவார்த்தைகள் திக்கெட்டும் பரவவேண்டும் அதன்மூலம் ஜனங்கள் நித்தியஜீவனுக்கு வழிநடத்தப்படவேண்டும் என்பதுதானேயொழிய எனது இத்தளத்தின் பெயரோ எனது பெயரோ பிரஸ்தாபமாக வேண்டும் என்பதல்ல. இத்தளத்தில் நான் தருகிற போதனைகள் யாவும் என் சுயபோதனைகளாயிராமல் வேதபோதனைகளாகவே இருப்பதால் அப்போதனைகளுக்கு copy-right கேட்க எனக்கு எந்த உரிமையுமில்லை.

கிறிஸ்து ஒருவரே நம்மெல்லோருக்கும் போதகர் என கிறிஸ்து கூறுவதை மிகமிக அழுத்தமாகப் பிரதிபலிப்பவன் நான். நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக மட்டுமே இருக்கிறோம். கிறிஸ்துவை ஆராதிப்பதாக போலியாகக் கூறிக்கொண்டு, அவர்தம் வார்த்தைகளைக் காலின்கீழ் போட்டு மிதிப்பவர்கள்தான் ஒருவரையொருவர் போதகரென்றும், பாஸ்டரென்றும், குருவானவரென்றும் சொல்லிக்கொள்வார்கள். மெய்யாகவே கிறிஸ்துவைக் கனம் பண்ணுபவர்கள் அவர்தம் வார்த்தைகளின்படி தங்களை சகோதரரென்று மட்டுமே சொல்ல முன்வருவார்களேயன்றி அதற்குமேலாக சொல்லிக்கொள்ள சற்றும் முன்வரமாட்டார்கள்.

கிறிஸ்துவை மட்டுமே போதகராக ஏற்றுக்கொண்டு, அவரது போதனைகளை மட்டுமே பிரதிபலிக்கும் எனது பதிவுகளுக்கு முழு உரிமையாளர் கிறிஸ்து மட்டுமே. அவர் தமது வார்த்தைகளை உலகெங்கும் பிரஸ்தாபப்படுத்தும்படி சொல்லி நம் அனைவருக்கும் ஏற்கனவே முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே அவர்தம் வார்த்தைகளைப் பிரதிபலிக்கும் எனது பதிவுகளை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எனது அனுமதியின்றியும் எனது தளத்தின் தொடுப்பைத் தராமலும் தாராளமாகப் பதியலாம். அப்படிச் செய்பவர்கள் கசப்பான பிச்சிலும் பாவக் கட்டிலும் இருப்பதாக சிலர் கருதுவதைப் போல் நான் கருதாமல், தேவவார்த்தைகள் திக்கெட்டும் பரவுவதை எண்ணி மிகவும் மகிழவே செய்வேன்.

இத்தளத்தில் பதிகிற பிறருங்கூட (சகோதரர்கள் பெரியன்ஸ், சுந்தர், டினோ, தேனீர் பூக்கள் போன்றோர்) எனது கருத்தை ஆமோதிப்பார்களென நம்புகிறேன். ஆகிலும் பிறரது பதிவுகளின் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்வது நல்லது.

இத்தளத்தின் எனது பதிவுகள் மட்டுமின்றி எனது பத்திரிகையின் கட்டுரைகளையுங்கூட தாராளமாக எங்கும் எதிலும் வெளியிடலாம். அப்படி வெளியிடும்போது எந்தத் தொடுப்பையும் தரவேண்டியதுமில்லை, இத்தளம் மற்றும் எனது பத்திரிகை பற்றி எந்தவொரு சிறுகுறிப்பையும் தரவேண்டியதுமில்லை.

நன்றி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
RE: இத்தள பதிவுகளின் மேற்கோளுக்கு தொடுப்பு தரவேண்டியதில்லை!
Permalink  
 


anbu57 wrote:
யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எனது அனுமதியின்றியும் எனது தளத்தின் தொடுப்பைத் தராமலும் தாராளமாகப் பதியலாம். அப்படிச் செய்பவர்கள் கசப்பான பிச்சிலும் பாவக் கட்டிலும் இருப்பதாக சிலர் கருதுவதைப் போல் நான் கருதாமல், தேவவார்த்தைகள் திக்கெட்டும் பரவுவதை எண்ணி மிகவும் மகிழவே செய்வேன்.

இத்தளத்தில் பதிகிற பிறருங்கூட (சகோதரர்கள் பெரியன்ஸ், சுந்தர், டினோ, தேனீர் பூக்கள் போன்றோர்) எனது கருத்தை ஆமோதிப்பார்களென நம்புகிறேன். ஆகிலும் பிறரது பதிவுகளின் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்வது நல்லது.

 

தாங்களின் இந்த அறிவிப்புக்கு மிக்க நன்றி சகோதரரே!

நாம்இங்கு ஆண்டவரின் வார்த்தைகளைத்தான் எழுதுகிறோம். இதில் நமக்கு "சுயமேன்மை" கிடைக்கும் என்றோ, பிரபலமாக
வேண்டும்
என்ற எதிர்பார்ப்போ  இல்லாத பட்சத்தில்  இது போன்ற ஒரு முடிவை எடுக்க எந்த சிரமமும் இராது  
 
தாங்கள் வேதவார்த்தைகளை விளக்கும்போது  மூல பாஷையில் உள்ள கருத்துக்களை எடுத்து எழுதுவதால் சில நேரங்களில் உங்கள் கட்டுரையை நான் காப்பி செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அந்த தடை இப்பொழுது நீங்கியிருகிறது.
 
நன்றி
சுந்தர்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard