நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?
Permalink  
 


வேதாகம காலத்திற்குப் பின்வந்த சபைகளில் பல சபைகள் இயேசுகிறிஸ்துவை தொழத்தக்க தெய்வமாகக் கருதி அவரைத் தொழுதுவருகின்றனர். குறிப்பாக சமீபநாட்களில் “இயேசுவை ஆராதிப்போம், இயேசுவுக்கு ஆராதனை” என்கிற முழக்கங்கள் பல சபைகளில் ஓங்கி ஒலிக்கின்றன. இப்படிச் செய்வது சரியா, இது சம்பந்தமாக வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை நாம் கண்டிப்பாக அறியவேண்டும்.

ஒருசில நாட்களுக்கு முன் தமிழ் கிறிஸ்தவ தளம் , யெளவன ஜனம் மற்றும் இறைவன் தளங்களில் “இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?” எனும் தலைப்பில் திரி துவக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் இதுவரை கூறப்பட்டுள்ள கருத்துகளையும் அவற்றிற்கான பதில்களையும் இத்திரியில் பார்ப்போம். கூடவே புதிய கருத்துக்களையும் தள அன்பர்கள் பதியும்படி வேண்டுகிறேன்.

முதலில் யெளவன ஜனம் தளத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்:

//இயேசுவானவரின் தெய்வத்துவத்தைக் குறித்து வேதம் சொல்லும் போது...

"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது." (கொலோசெயர்.2:9)

அதாவது தேவத்துவத்தின் ஒரு பகுதி இயேசுவில் இல்லை; இயேசுவுக்குள் தெய்வத்துவத்தின் அனைத்தும் இருக்கிறது.

"ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." (அப்போஸ்தலர்.3:15)

"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளிப்படுத்தல்.1:18)

மரணம் என்பதன் புதிய பொருள் இதன்மூலம் விளங்குகிறது; மரணம் என்பது ஒரு சரீரத்திலிருந்து ஆவியானது வெளியேறுவது மட்டுமே என்றும் அந்த சரீரம் மீண்டும் அதே தன்மையில் உயிரடையும் என்பதையும் இங்கே சிருஷ்டிகர் நிகழ்த்தி காட்டுகிறார். எனவே தெய்வம் மரிக்கலாமா என்ற சர்ச்சையும் இங்கே நிறைவடைகிறது; அவர் வெளியே சென்றார், மீண்டும் உள்ளே வந்தார், ஆக‌ எல்லாம் சரியாகவே நடந்தேறியிருக்கிறது.

"ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." (அப்போஸ்தலர்.2:36)

இங்கே ஆண்டவரும் கிறித்துவும் என்பதில் அனைத்தும் அடங்கும்; அதாவது அவரே அனைத்துக்கும் அதிகாரியாகிறார்; அதாவது கிறித்துவின் தன்மையில் தம்மை வெளிப்படுத்தின தேவன் தாம் சிருஷ்டித்த மாம்ச இயேசுவுக்கு புதிய ஸ்தானத்தைக் கொடுத்தார். இதன் அடுத்த கட்டம் அடுத்துவரும் வசனத்தில் நிறைவேறும்.

"சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்." (1.கொரிந்தியர்.15:28)

இங்கே கீழ்ப்பட்டிருத்தல் என்பது ஆதியில் இருந்த தன்மையே; எப்போதுமே வார்த்தையானது ஆவியில்லாமல் செயல்படவில்லையே; எனவே ஆவியே முந்தினது என்றும் ஆவியிலிருந்து ஆவியின் அதிகாரம் மற்றும் வல்லமையோடு வார்த்தையானது வெளிப்பட்டு தன் காரியமாகும்படி வாய்க்கும் என்பதும் விளங்குகிறது.

எனவே நூற்றுக்கு அதிபதி ஒருவார்த்தை சொன்னால் போதும் வேண்டும் போது அவன் தன்னை வார்த்தையின் பிரதிநிதியாகக் கொண்டு தனக்கு மேலுள்ள அதிகாரத்துக்கு அதாவது ஆவிக்கு தான் கட்டுப்பட்டவன் என்று கூறுகிறான்;ஆண்டவரும் அவன் சொன்னதைப் பாராட்டி இஸ்ரவேலருக்குள்ளும் இதுபோன்ற விசுவாசத்தைக் காணவில்லையே என்று ஸ்லாகிக்கிறார்; ஆண்டவரால் பாராட்டப்பட்ட ஒரு சிலரில் இவனும் ஒருவன்; காரணம், அவன் இராஜ்யத்தின் தன்மையையும் அதன் ஸ்தானங்களையும் குறித்து அறிந்திருந்தான்.

"நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.

இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு.8:8,9,10)

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர்.4:12)

இதுவரை மீட்கப்படுதல் என்பதைக் குறித்த அறிவே இல்லாமல் ஞானிகளின் வாக்கியம் போலவும் தத்துவம் போலவும் எங்கோ இருந்த ஒரு பொக்கிஷம் நம்மருகில் வந்துவிட்டது.

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." (பிலிப்பியர் 2:9,10,11)

எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் யூதருடைய நம்பிக்கையின்படி "யாவே" சிருஷ்டிகருடைய நாமமே; அதற்கும் மேலாக இவருடைய நாமம் உயர்த்தப்பட்டது;

"ஏலோஹிம்" என்று சிருஷ்டிப்பிலும்  "எல்ஷடாய்" என்று ஆபிரகாமிடமும் தம்மை வெளிப்படுத்தின கர்த்தர், மோசேக்கு தன்னுடைய விசேஷித்த நாமத்தில் வெளிப்படுத்தினார்.

"மேலும், தேவன் ("ஏலோஹிம்") மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் ("எல்ஷடாய்")என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை." (யாத்திராகமம்.6:2,3)

இதன் பின்னணியிலுள்ள சில சத்தியங்கள்,முதன்முதலாக மோசேக்கு தம்மைக் குறித்து கர்த்தர் சொன்னபோது,

"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்." (யாத்திராகமம்.3:14)

இதே "இருக்கிறேன்" என்ற சொல்லை இயேசுவும் தம்முடைய போதனையில் அடிக்கடி பயன்படுத்துவதையும் கவனிக்கவேண்டும்; அதாவது "இருக்கிறேன்" என்ற சொல்லானது இறந்த காலத்தின் சொல்லாகவோ எதிர்காலத்தின் சொல்லாகவோ இல்லாமல் நிகழ்காலத்தின் சொல்லாகவே இருக்கிறது.

(உ-ம்) "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான்.14:6)

"ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் (யேகோவா ) என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். " (யோவான்.8:24)

மேற்கண்ட எனது வியாக்கியானங்களுடன் ஒத்துப்போகாதிருப்பவர்கள் தாராளமாக - நாகரீகமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்; அதற்குரிய சரியான பதிலைத் தர ஆயத்தமாக இருக்கிறோம். அதேபோல நாம் எழுதியது சரிதான் என்று ஒப்புக்கொள்ளுபவர்களும் ஒரு சில வரிகளை எழுதி ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.

நாம் சத்திய விரோதிகளிடம் இதேபோன்ற நாகரீகமான முறையினையே கடைபிடித்து வருகிறோம் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ளுகிறோம்; இந்த அளவுக்கு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயம் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.//


சில்சாமின் இந்த வியாக்கியானங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் “நாகரீகமான” முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என அவர் கூறுகிறார். ஆனால் அந்த எதிர்ப்புகளுக்கு அவர் “நாகரீகமான” முறையில் பதில் தருவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யெளவன ஜனம் கூறுகிறது:
//இயேசுவானவரின் தெய்வத்துவத்தைக் குறித்து வேதம் சொல்லும் போது...

"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது." (கொலோசெயர்.2:9)

அதாவது தேவத்துவத்தின் ஒரு பகுதி இயேசுவில் இல்லை; இயேசுவுக்குள் தெய்வத்துவத்தின் அனைத்தும் இருக்கிறது.//


இயேசுவில் தெய்வத்துவம் பரீபூரணமாக இருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் “ஒரே தேவன்” என்பவர் அவரா என்பதுதான் கேள்வி. “ஒரே தேவனைப்” பற்றி பின்வரும் வசனங்களில் பவுல் கூறுவதைப் படிப்போம்.

1 கொரிந்தியர் 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.

1 கொரி 8:5-7 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

பிதாவாகிய தேவன் மட்டுமே “ஒரே தேவன்” (unique God) எனப்படுபவர். உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என வேதாகமம் கூறுகிறது, இயேசுவும் அதை வழிமொழிகிறார் (உபாகமம் 6:13; 10:20; மத்தேயு 4:10)

இத்தனை தெளிவான வசனங்கள் இருக்கையில் இயேசுவையும் ஆராதிக்க வேண்டும், இயேசுவும் ஆராதனைக்குரியவர் என்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு சொன்ன பின்வரும் வசனங்களையும் படிப்போம்.

மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

யோவான் 5:41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.


தம்மை நோக்கி: கர்த்தாவே என்று சொல்வது கூட அவசியமற்றது, பிதாவின் சித்தத்தை செய்வதுதான் அவசியமானது என இயேசுவே நேரடியாகக் கூறியுள்ளார். மேலும் மனுஷரால் நான் மகிமையை ஏற்றுக்கொள்கிறதில்லை என்று சொன்ன அவரை நாம் ஆராதிப்பதை ஏற்பாரா? சிந்தித்துப் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யெளவன ஜனம் கூறுகிறது:
//"ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." (அப்போஸ்தலர்.3:15)

"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளிப்படுத்தல்.1:18)


மரணம் என்பதன் புதிய பொருள் இதன்மூலம் விளங்குகிறது; மரணம் என்பது ஒரு சரீரத்திலிருந்து ஆவியானது வெளியேறுவது மட்டுமே என்றும் அந்த சரீரம் மீண்டும் அதே தன்மையில் உயிரடையும் என்பதையும் இங்கே சிருஷ்டிகர் நிகழ்த்தி காட்டுகிறார். எனவே தெய்வம் மரிக்கலாமா என்ற சர்ச்சையும் இங்கே நிறைவடைகிறது; அவர் வெளியே சென்றார், மீண்டும் உள்ளே வந்தார், ஆக‌ எல்லாம் சரியாகவே நடந்தேறியிருக்கிறது.//

இங்கு கூறப்பட்டுள்ள அப்போஸ்தலர் 3:15 சொல்கிறது: தேவன்தான் இயேசுவை உயிரோடெழுப்பினார் என்று. ஆம், இயேசு தாமாக உயிர்த்தெழவில்லை. தேவனாகிய பிதாதான் அவரை உயிரோடெழுப்பினார். அப்படியிருக்க, அவர் எப்படி “ஒரே தெய்வம் அல்லது தேவன்” என்பவராக இருக்கமுடியும்?

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களைக்கூட தேவர்கள் என “ஒரே தேவனாகிய யெகோவா” கூறியுள்ளார்.

யோவான் 10:34-36 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

சங்கீதம் 82:6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

இயேசு மட்டுமல்ல, தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட மனிதனைக்கூட “தேவன்” என “யெகோவாகிய தேவன்” கூறுகிறார்.

இதனால் “தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்கள்” அனைவரும் தேவனுக்குச் சமமாகிவிட முடியுமா? சிந்தித்துப் பார்ப்போம்.

“ஒரே தேவன்” எனப்படுபவர் நிச்சயமாக மரிக்கக்கூடது. ஆனால் தேவனாகிய இயேசுவோ மரித்தார். எனவே அவர் நிச்சயமாக “ஒரே தேவன்” எனப்படுபவராக இருக்கமுடியாது.

“அவர் வெளியே சென்றார், மீண்டும் உள்ளே வந்தார்” எனும் யெளவன ஜனத்தின் கூற்றில், “அவர் வெளியே சென்றார்” என்பது மெய்தான். ஏனெனில் அவரது ஜீவனை யாரும் எடுக்கவில்லை, அவராகவே அவரது ஜீவனை பிதாவிடம் ஒப்புவித்தார் (லூக்கா 23:46).

ஆனால் “மீண்டும் உள்ளே வந்தார்” என்பது சரியல்ல. ஏனெனில் தேவன் தான் அவரை உயிரோடெழுப்பியதாக அப்போஸ்தலர் 3:15,26; 2:24,32; 5:30; 10:40; 13:30,33,34; 17:31; ரோமர் 4:24; 8:11; 10:9; 1 கொரிந்தியர் 6:14; 15:15; 2 கொரிந்தியர் 4:14; எபேசியர் 1:19; 2:7; 1 பேதுரு 1:21 வசனங்கள் கூறுகின்றன. இவ்வசனங்களை தவறாமல் படிக்கவும். இவற்றில் 2 வசனங்களை இங்கு தருகிறேன்.

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

1 பேதுரு 1:21  உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன் மேலிருக்கும்படி, அவரை (இயேசுவை) மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.


யெளவன ஜன நிர்வாகியே! இனிமேலும், “இயேசு அவராகவே அவரது சரீரத்திற்குள் வந்தார்” என விசுவாசிக்கப் போகிறீர்களா? அல்லது (யெகோவாகிய) தேவன் தான் அவரை உயிரோடெழுப்பினார் என விசுவாசிக்கப்போகிறீர்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யெளவன ஜனம் கூறுகிறது:
//"ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." (அப்போஸ்தலர்.2:36)

இங்கே ஆண்டவரும் கிறிஸ்துவும் என்பதில் அனைத்தும் அடங்கும்; அதாவது அவரே அனைத்துக்கும் அதிகாரியாகிறார்; அதாவது கிறித்துவின் தன்மையில் தம்மை வெளிப்படுத்தின தேவன்

தாம் சிருஷ்டித்த மாம்ச இயேசுவுக்கு புதிய ஸ்தானத்தைக் கொடுத்தார். இதன் அடுத்த கட்டம் அடுத்துவரும் வசனத்தில் நிறைவேறும்.

"சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்." (1.கொரிந்தியர்.15:28)

இங்கே கீழ்ப்பட்டிருத்தல் என்பது ஆதியில் இருந்த தன்மையே; எப்போ
துமே வார்த்தையானது ஆவியில்லாமல் செயல்படவில்லையே; எனவே ஆவியே முந்தினது என்றும் ஆவியிலிருந்து ஆவியின் அதிகாரம் மற்றும் வல்லமையோடு வார்த்தையானது வெளிப்பட்டு தன் காரியமாகும்படி வாய்க்கும் என்பதும் விளங்குகிறது.//

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மெய்தான் (மத்தேயு 28:18). இதனால் இயேசு தொழத்தக்க தெய்வமாகிவிடுவாரா? இயேசுவுக்கு அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவன், இயேவைவிட மேலானவரல்லவா? அவர் ஒருவரையே ஆராதிக்கும்படித்தானே இயேசுவும் கூறுகிறார்? அப்படியிருக்க அதிகாரத்தைப் பெற்றவரான இயேசுவை ஆராதிக்கவேண்டும் என்பது எப்படி சரியாயிருக்கமுடியும்?

சகலத்தையும் கீழ்ப்படுத்தின யெகோவாகிய தேவனுக்கு இயேசுவுங்கூட கீழ்ப்பட்டிருப்பார் என 1 கொரி. 15:28 தெளிவாகக் கூறுகிறதே! இதன் பின்னும் இயேசுதான் பிதா, பிதாதான் இயேசு எனச் சொல்வதும், இயேசுவை ஆராதிக்கலாம் எனச் சொல்வதும் எப்படி சரியாயிருக்க முடியும்? சிந்தித்துப் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

அடிப்படை ஞானம்,

பிதா என்பவர் தருகிறவர் என்றும் குமாரன் என்பவர் பெற்றுக்கொள்பவர்!! இதை புரிந்துக்கொள்ள மதமோ மார்கமோ தேவையில்லை!!

ஆனால் நம் வேத ஞானிகளுக்கு மாத்திரம் இந்த விஷயம் புரிவதில்லை போல்!!

என்னை நல்லவர் என்று ஏன் சொல்லுகிறீர்கள், பிதா ஒருவரை தவிர நல்லவர் ஒருவரும் இல்லை!! என்கிறார் இயேசு கிறிஸ்து

அது மாம்சத்தில் வந்த போது அப்படி சொன்னார் என்கிறார்கள் இந்த அறிவாளி வேத பண்டிதர்கள், சரி அப்படி என்றால், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, மரியாளிடம் சொன்னது என்ன‌,

யோவான் 20:17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

என் பிதா, உங்கள் பிதா, என் தேவன் உங்கள் தேவன்!! அப்படி என்றால் கிறிஸ்து யார், நம் சகோதரர், மூத்த சகோதரர்!! இதை அவரே சொல்லியும் இருக்கிறர்!! நாம் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாக இருக்க போகிறோம் என்றால் அவர் நமக்கு மூத்த சகோதரர் தானே!! அப்படி என்றால் அவர் சிருஷ்ட்டிக்கப்பட்டார் என்பதை மாத்திரம் இந்த திருத்துவ வாதிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வசனம் இருந்தும்!!

கொலோ 1:16 அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். பேறுமானவர் என்றாலே பெற்று எடுக்கப்பட்டவர் என்பது தானே அர்த்தம்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யெளவன ஜனம் கூறுகிறது:
//"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர்.4:12)

இதுவரை மீட்கப்படுதல் என்பதைக் குறித்த அறிவே இல்லாமல் ஞானிகளின் வாக்கியம் போலவும் தத்துவம் போலவும் எங்கோ இருந்த ஒரு பொக்கிஷம் நம்மருகில் வந்துவிட்டது.

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." (பிலிப்பியர் 2:9,10,11)

எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் யூதருடைய நம்பிக்கையின்படி "யாவே" சிருஷ்டிகருடைய நாமமே; அதற்கும் மேலாக இவருடைய நாமம் உயர்த்தப்பட்டது;//

முதலாவது அப்போஸ்தலர் 4:12-ஐ எடுத்துக் கொள்வோம். “நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழே, மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமத்தைத் தவிர வேறொரு நாமமும் கட்டளையிடப்படவில்லை” எனும் கூற்று மிகத் தெளிவாகத்தானே இருக்கிறது? இதை யாரும் மறுக்கவில்லையே! ஆனால் இதற்கும் இயேசு தொழத்தக்கவர் என்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

அடுத்து, பிலிப்பியர் 2:9-11-ஐ எடுத்துக்கொள்வோம்.

இவ்வசனங்களில் “வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும்” எனும் சொற்றொடரானது “வானம், பூமி, பூமியின் கீழே யாவருடைய முழங்கால்களும்” என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தேவனாகிய பிதாவுக்கு வானம் சிங்காசனமாகவும் பூமி பாதபடியாகவும் இருப்பதால் அவர் வானம், பூமி, பூமியின் கீழ் எங்கும் வியாபித்திருக்கிறவராக இருக்கிறார். எனவே “வானம், பூமி, பூமியின் கீழே யாவருடைய முழங்கால்களும்” என்ற சொற்றொடரில் “பிதாவாகிய தேவன்” அடங்க மாட்டார்.  அவ்வாறே “நாவுகள் யாவும்” என்ற சொற்றொடரில் “பிதாவாகிய தேவனின்” நாவு அடங்காது; “எல்லா நாமத்திற்கும் மேலான” என்ற சொற்றொடரிலும் “பிதாவாகிய தேவனின்” நாமம் அடங்காது.

யூதருடைய நம்பிக்கையின்படி “எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்” யாவே தேவனுடையது என்பது சரியே. இங்கு “யூதரின் நம்பிக்கைப்படி” எனும் அடைமொழி தேவையில்லை. “யூதரின் நம்பிக்கை” இயேசு மேசியா அல்ல என்றிருந்ததால்தான் இயேசுவை அவர்கள் கொலை செய்தனர் என்பதை நாம் அறிவோமல்லவா?

யாவே எனப்படும் பிதாவாகிய தேவனின் நாமம் “எல்லா நாமத்திற்கும் மேலானது” என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் “அந்த நாமத்திற்கும் மேலாக இயேசுவின் நாமம் உயர்த்தப்பட்டது” எனும் கூற்று “யெளவன ஜனத்தின்” சொந்தக் கூற்றேயன்றி வசனத்தின்படியான கூற்று அல்ல.

“எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை தேவன் இயேசுவுக்குத் தந்தருளினார்” என்றுதான் வசனம் சொல்கிறதேயொழிய, “எல்லா நாமத்திற்கும் மேலான யாவே தேவனின் நாமத்திற்கும் மேலான நாமத்தை தேவன் அவருக்குத் தந்தருளினார்” என வசனம் கூறவில்லை.

எனவே யெளவன ஜனத்தின் “யாவே சிருஷ்டிகருடைய நாமத்திற்கும் மேலாக இவருடைய (இயேசுவின்) நாமம் உயர்த்தப்பட்டது” எனும் கூற்று தவறானது என்பதோடு விஷமத்தனமானதுமாகும்.

இயேசுவின் நாமம் உட்பட எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாக யெகோவா தேவனின் நாமம் ஏற்கனவே இருக்கிறது. அந்த யெகோவா, “வானம், பூமி, பூமியின் கீழுள்ள யாவரது நாமத்திற்கும்” மேலாக இயேசுவின் நாமத்தை உயர்த்தினார். ஆகிலும் ஏற்கனவே உள்ளபடி, “இயேசுவின் நாமம் உட்பட எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாக யெகோவா தேவனின் நாமம் இருக்கிறது” என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

“வானம், பூமி, பூமியின் கீழுள்ள யாவரது நாமத்திற்கும்” மேலாக இயேசுவின் நாமத்தை யெகோவா தேவன் உயர்த்தியுள்ளதால், “வானம், பூமி, பூமியின் கீழுள்ள யாவரது” நாவுகளும் இயேசுவை கர்த்தரென்று அறிக்கை பண்ணவேண்டும், “யாவரது” முழங்கால்களும் இயேசுவுக்கு முன்பாக முடங்கவேண்டும் என்பதே பிலிப்பியர் 2:9-11 வசனங்களின் கருத்து.

“முழங்கால்கள் முடங்கவேண்டும்” எனும் சொற்றொடர், இயேசுவுக்கு கீழ்ப்படியவேண்டும் என்பதையே குறிப்பிடுகிறதேயொழிய இயேசுவை ஆராதிக்கவேண்டும் என்பதையல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யெளவன ஜனம் கூறுகிறது:
//"ஏலோஹிம்" என்று சிருஷ்டிப்பிலும்  "எல்ஷடாய்" என்று ஆபிரகாமிடமும் தம்மை வெளிப்படுத்தின கர்த்தர், மோசேக்கு தன்னுடைய விசேஷித்த நாமத்தில் வெளிப்படுத்தினார்.

"மேலும், தேவன் ("ஏலோஹிம்") மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் ("எல்ஷடாய்")என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை." (யாத்திராகமம்.6:2,3)

இதன் பின்னணியிலுள்ள சில சத்தியங்கள்,முதன்முதலாக மோசேக்கு தம்மைக் குறித்து கர்த்தர் சொன்னபோது,

"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். (யாத்திராகமம்.3:14)

இதே "இருக்கிறேன்" என்ற சொல்லை இயேசுவும் தம்முடைய போதனையில் அடிக்கடி பயன்படுத்துவதையும் கவனிக்கவேண்டும்; அதாவது "இருக்கிறேன்" என்ற சொல்லானது இறந்த காலத்தின் சொல்லாகவோ எதிர்காலத்தின் சொல்லாகவோ இல்லாமல் நிகழ்காலத்தின் சொல்லாகவே இருக்கிறது.

(உ-ம்) "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான்.14:6)

"ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் (யேகோவா ) என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்." (யோவான்.8:24)
//

இருக்கிறேன் என்ற சொல் நிகழ்காலத்தின் சொல்லாகவே இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதற்கும் திரித்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் புரியவில்லை.
யெகோவாகிய தேவன் தம்மை “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்றாராம்; இயேசுவும் “இருக்கிறேன்” என பல வசனங்களில் கூறியுள்ளாராம்; எனவே யெகொவாவும் இயேசுவும் ஒன்றுதானாம் எனக் கூறுகிறது யெளவன ஜனம்.

"இருக்கிறேன்" என்ற சொல்லை இயேசு மட்டுந்தான் பயன்படுத்தினாரா? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

யோவான் 1:23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.

அப்போஸ்தலர் 18:6 அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; ...

அப்போஸ்தலர் 23:6 பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் ...என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.

1 கொரிந்தியர் 9:21 நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.

தன்னைக் குறித்த விபரத்தைக் கூறுகிற அனைவருமே “இருக்கிறேன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, “நான் இப்படியாக இருக்கிறேன்” எனச் சொல்வது ஒரு சாதாரண பயன்பாடு. அதே போலத்தான் இயேசுவும் “நான் இப்படியாக இருக்கிறேன்” எனக் கூறினார். இதையும், யெகோவா தம்மை “இருக்கிறவராகவே இருக்கிறேன்” எனக் கூறியதையும் நிச்சயம் சம்பந்தப்படுத்த முடியாது.

யோவான் 8:24-ல், “நானே அவர்” என இயேசு சொன்னதை “நானே அவர் (யெகோவா)” என யெளவன ஜனம் குறிப்பிடுவது எத்தனை துணிகரமான விஷமத்தனம்?

இப்படித்தான் இயேசு விடுவிக்கிறார் நிறுவனத்தார் ஒரு வசனத்தில் விஷமத்தனம் செய்து, அவர்களின் பாளையங்கோட்டை அலுவலகத்தில் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் செய்த விஷமத்தனம்:

1 தீமோத்தேயு 2:5,6 தேவன் ஒருவரே, ... எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த ... கிறிஸ்து இயேசு அவரே.

இயேசு கிறிஸ்துதான் ஒரே தேவன் என வேதாகமம் கூறுவதாகக் காட்டும்படி, வசனங்களின் சில பகுதிகளை வெட்டி, அவர்கள் இவ்வாறு எழுதி வைத்துள்ளனர். ஆனால் இவ்வசனங்களின் முழுப்பகுதி இவ்வாறு கூறுகிறது.

1 தீமோத்தேயு 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.

வசனத்தைக் குறைத்து, இயேசு விடுவிக்கிறார் நிறுவனத்தார் எத்தனை துணிகரமான விஷமத்தனம் செய்துள்ளனர் என்பது புரிகிறதா?

இதேபோலத்தான் யெளவன ஜனம் நிர்வாகி வசனத்தைக் கூட்டி, துணிகரமான விஷமத்தனம் செய்துள்ளார். இப்படி வசனங்களைக் கூட்டி/குறைத்து விஷமத்தனங்களைச் செய்துதான் “இயேசுவே ஒரே தேவன்” என நிரூபிக்க வேண்டிய பரிதாப நிலையில் திரித்துவத்தார் இருக்கின்றனர் என்பதற்கு இவைகளே சாட்சி.

யோவான் 8:24-ஐ ஒட்டிய சில வசனங்கள் மூலம் “நானே அவர்” என யாரைக் குறித்து இயேசு சொன்னார் என்பதைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

யோவான் 8:24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

25 அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். 26 உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

27 பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். 28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

“நானே அவர்” என இயேசு சொன்னபோது, “அவர்” என யாரைக் குறிப்பிடுகிறார் என்பது யூதர்களுக்குப் புரியாததால், “நீர் யார்” என நேரடியாகவே அவர்கள் கேட்டனர் (வசனம் 25).

அதற்குப் பதிலாக இயேசு சொன்னது: “நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்” (வசனம் 25).

24-ம் வசனத்தில் “அவர்” என இயேசு சொன்னது, “ஆதிமுதலாய் யூதர்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்” என்பது 24,25 வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இனி, “ஆதிமுதலாய் யூதர்களுக்குச் சொல்லியிருக்கிறவர்” யார் என்பதை பின்வரும் வசனங்கள் மூலம் பார்ப்போம்.

லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

லூக்கா 24:46 எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

யோவான் 5:46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.

மத்தேயு 26:23,24 அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்.

மாற்கு 9:12 அவர் பிரதியுத்தரமாக: ... அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.

லூக்கா 4:17-21 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

லூக்கா 22:37  அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 1:45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.

யோவான் 12:14 அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.


மோசேயின் ஆகமம் மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் தம்மைக் குறித்து எழுதப்பட்டுள்ளதைத்தான், யோவான் 8:25-ல் “ஆதிமுதல் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்” என இயேசு கூறினார். மோசேயின் ஆகமம் மற்றும் தீர்க்கதரிசனங்களில் வரப்போகிறவராகிய மேசியாவைக் குறித்துதான் சொல்லப்பட்டுள்ளதேயன்றி “யெகோவாவைக்” குறித்து சொல்லப்படவில்லை.

(மோசேயின் ஆகமம் மற்றும் தீர்க்கதரிசனங்களில் வரப்போகிறவராகிய மேசியாவைக் குறித்து சொல்லப்பட்டுள்ள சில வசனங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்)

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவர் தாம்தான் என்பதை லூக்கா 4:21-ல் இயேசு நேரடியாகவே சொன்னார். ஆகிலும் அன்றைய யூதர்கள் “அறியாமையினால்” இயேசுவே மேசியாவாகிய கிறிஸ்து என்பதை அறியாமற்போனார்கள்.

அதேபோலத்தான் இன்றும் தங்கள் “அறியாமையினால்” மேசியாவாகிய கிறிஸ்துவை, யெகோவா தேவன் என திரித்துவக்காரர்கள் கூறிவருகின்றனர்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மோசேயின் ஆகமம் மற்றும் தீர்க்கதரிசனங்களில் வரப்போகிறவராகிய மேசியாவைக் குறித்து சொல்லப்பட்டுள்ள சில வசனங்களையும் அவை இயேசுவில் நிறைவேறியதையும் பார்ப்போம்.

மோசேயின் ஆகமத்தில் கூறப்பட்டவை:

உபாகமம் 18:17,18 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: ... உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

இவ்வசனங்கள் இயேசுவில் நிறைவேறுதல்:

அப்போஸ்தலர் 3:22-24 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

தீர்க்கதரிசன வசனங்கள்:

ஏசாயா 66:1-3 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், 3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்;

இவ்வசனங்கள் இயேசுவில் நிறைவேறுதல்:

லூக்கா 4:17-21 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

தீர்க்கதரிசன வசனங்கள்:

எரேமியா 23:5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

இவ்வசனங்கள் இயேசுவில் நிறைவேறுதல்:

லூக்கா 1:31,32 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

யோவான் 5:27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

தீர்க்கதரிசன வசனம்:

சகரியா 9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

இவ்வசனம் இயேசுவில் நிறைவேறுதல்:

மத்தேயு 21:1-5 இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

இயேசுவைக் குறித்து ஆதியில் தேவன் சொன்னது:

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இவ்வசனம் இயேசுவில் நிறைவேறுதல்:

கன்னியின் வயிற்றில் இயேசு பிறந்து, சாத்தானின் சோதனைகளை வென்றதன் மூலம் இவ்வசனம் நிறைவேறியது. பின்வரும் வசனத்திலும் இதன் நிறைவேறுதல் கூறப்பட்டுள்ளது.

2 தெச. 2:7,8 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.

இயேசுவைக் குறித்து யாக்கோபும் மீகா தீர்க்கதரிசியும் சொன்னது:

ஆதியாகமம் 49:10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். Matt 2:6;

மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்;


இவை இயேசுவில் நிறைவேறுதல்:

மத்தேயு 2:6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லெகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

இப்படியாக ஆதி முதல் சொல்லப்பட்டவர் தாமே என்பதைத்தான் யோவான் 8:24-ல் “நானே அவர்” என்று சொல்லி, 25-ல் “நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்” என இயேசு கூறினார்.

ஆனால் யெளவன ஜனமோ, “நானே அவர்” என இயேசு சொன்னதை “நானே யெகோவா” எனப் புரட்டிக் கூறுகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

சகோதரர் அன்பு அவர்களே மிக அருமை..... ..
 
பழைய ஏற்பாடு  மற்றும் புதிய ஏற்பாடு இவைகளில் இருந்து இயேசு கிறிஸ்துவை பற்றிய வசனங்களை
மிக அருமையாய் பதிவிட்டு  இருக்கின்றீர்கள்

உங்களிடம் எனக்கும் என் நண்பர்களுக்கும் பிடித்த ஒன்று நீங்கள் வசனங்களை ஆராய்ந்து பதிவிடும் முறையே   

 இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?

இந்த தலைப்பில் என்னுடைய கருத்து என்னவெனில் இறைவன் தளத்தில் சகோதரர் சுந்தர் சொல்வது போல்

------------------------------------------------------------------

சுந்தர் எழுதியது

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
  
இந்த வசனப்படி பிதாவை யாரென்று  இயேசு  ஒருவருக்கு வெளிப்படுததாதவரை அவர்கள் இயேசுதான் பிதா என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பர்கள் இவ் வார்த்தைகளை நாம் தவறு என்றும் சொல்லுவதற்க்கில்லை. ஏனெனில் சென்னை பக்கத்தில் உள்ள  "வங்க கடலை" அறிந்த ஒருவர் இதுதான் பசிபிக்
பெருங்கடல் என்று சொன்னால், வங்க கடல் ஒருபுறம்  இந்துமாக சமுத்திரத்தில் சேர்ந்து
அந்த இந்துமகாசமுத்திரம் பசுபிக் கடலில்  சேர்ந்துள்ளதால் அதிலும் சில உண்மைகள்  இருப்பதுபோல் இக்காரியம்  உண்மையாகிறது.

அதுபோல் இயேசுவும் தேவனும் ஒன்றுக்குள் ஒன்றானவர்களே!
------------------------------------------------------------------
 
இந்த கருத்தை நான் ஏற்று கொள்கின்றேன


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 4th of December 2010 03:27:10 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
//உங்களிடம் எனக்கும் என் நண்பர்களுக்கும் பிடித்த ஒன்று நீங்கள் வசனங்களை ஆராய்ந்து பதிவிடும் முறையே//

கருத்துக்கு நன்றி சகோதரரே! தேவகிருபையால் இந்நாட்களில் கணினி மூலம் வசனங்களைக் கண்டறியும் வசதி உள்ளதால் இவ்வளவாய் வசனங்களை ஆராய்ந்து தரமுடிகிறது. இந்நாட்களில் நாம் செய்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒன்றுமேயில்லை. பல வருடங்களுக்கு முன் இவ்வளவாய் வசதியில்லாத நாட்களிலும் வசனங்களையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் வெகுசிரமத்துடன் பலர் ஆராய்ந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களே போற்றத்தக்கவர்கள்.


பிதா, இயேசு இருவரின் நிலை பற்றி சகோ.சுந்தரின் கருத்தை ஆமோதித்துள்ளீர்கள். ஆனால் சுந்தரின் கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. சுந்தர் தந்துள்ள உதாரணம், பொருந்தாத உதாரணம்.

வங்கக் கடலையும் பசிபிக் கடலையும் அறிந்த ஒருவர், வங்கக்கடலை வங்கக்கடல் என்றுதான் சொல்வாரேயொழிய பசிபிக் கடல் என ஒருபோதும் சொல்லமாட்டார்; அவ்வாறே பசிபிக் கடலை பசிபிக் கடல் என்றுதான் சொல்வாரேயொழிய வங்கக்கடல் என ஒருபோதும் சொல்லமாட்டார்.

இரு கடல்களையும் அறியாதவர்தான் இரண்டையும் தொடர்புப்படுத்தி தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவார் (சில்சாமைப் போல).

பிதா, குமாரன் இருவரையும் வேறுபடுத்தி பல வசனங்கள் உள்ளபோதிலும் பாரம்பரிய கோட்பாட்டை விட்டுக்கொடுக்க மனதில்லாததாலோ அல்லது பாரம்பரிய பாதிப்பு மனதில் ஆழமாகப் பதிந்ததாலோ என்னவோ, பிதாவையும் குமாரனையும் இணைத்து குழம்புகின்றனர்.

சுந்தர் குறிப்பிட்டுள்ள வசனத்தின் (மத்தேயு 11:27) கருத்தில் எனது புரிந்துகொள்தலைக் கூறுகிறேன்.

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இவ்வசனத்தின் முதல் பகுதியைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை எதுவுமில்லை. 2-வது பகுதியைத்தான் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம். அதாவது “அறியான்” என்றால் ஏதோ யாரும் சாதாரணமாக அறியக்கூடாத ஒரு புதிரைப் பற்றி இயேசு சொல்வதாக நாம் கருதுகிறோம். இது பற்றி விபரமாக அறிவதற்குமுன், இவ்வசனத்தில் காணப்படும் ஒரு “மொழிபெயர்ப்புப் பிழையைப்” பார்ப்போம்.

இவ்வசனத்தின் நடுப்பகுதியில் “பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்” என இயேசு கூறுவதாயுள்ளது. ஆனால் இக்கூற்று சரியாக இருக்கமுடியுமா?

“பேதுரு, பவுல், யாக்கோபு, யோவான்” போன்ற அப்போஸ்தலரை எடுத்துக்கொள்வோம். இவர்களெல்லாம் இயேசுவை நன்கு அறிந்துதான் நிருபங்களை எழுதியுள்ளனரேயன்றி, இயேசுவை அறியாமல் அல்ல. எனவே “பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்” எனும் கூற்று தவறானதாகும். இத்தவறுக்குக் காரணம் மொழிபெயர்ப்புப் பிழையே. இப்பிழையைப் புரிந்துகொள்ள இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்போம்.

Matthew 11:27 All things have been committed to me by my Father. No one knows the Son except the Father, and no one knows the Father except the Son and those to whom the Son chooses to reveal him. - NIV

இதில் கடைசியாகக் கூறப்பட்டுள்ள “him" எனும் வார்த்தைதான் தவறுக்குக் காரணம். உண்மையில், மூலபாஷை வார்த்தைகளில் “him" எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தை காணப்படவில்லை. மொழிபெயர்ப்பு வசதிக்காக அதைச் சேர்த்துள்ளனர். எனவே “him" எனும் வார்த்தையை எடுத்துவிட்டு ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்போம்.

Matthew 11:27 All things have been committed to me by my Father. No one knows the Son except the Father, and no one knows the Father except the Son and those to whom the Son chooses to reveal.

இப்போது இதன் பொருள் நம்மில் சிலருக்குப் புரிந்திருக்கக்கூடும். புரியாதவர்கள், இதிலுள்ள ஒரு வரியை 2-ஆகப் பிரித்து பின்வருமாறு படிப்போம்.

No one knows the Son except the Father and those to whom the Son chooses to reveal.

no one knows the Father except the Son and those to whom the Son chooses to reveal.


இப்படி 2-ஆகக் கூறப்படவேண்டிய வாக்கியங்களை ஒரே வாக்கியமாக இயேசு கூறியுள்ளார். அப்படி கூறும்போது, இவ்விரு வாக்கியங்களின் பொதுவான சொற்றொடரான “and those to whom the Son chooses to reveal” எனும் சொற்றொடரை இறுதியில் கூறியுள்ளார். ஆனால் நம் மொழிபெயர்ப்பாளர்கள் “him" எனும் வார்த்தையையும் சேர்த்ததால், “and those to whom the Son chooses to reveal him” எனும் சொற்றொடர் அவ்வசனத்தின் பின்பகுதிக்கு மட்டும் உரித்தானதாக ஆகிவிட்டது. ஆக, “No one knows the Son except the Father” எனும் சொற்றொடர் தனி வாக்கியமாகிவிட்டது. தமிழில் “பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்” என்றாகி விட்டது. இத்தவறு நீங்கவேண்டுமெனில், அவ்வசனம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்படவேண்டும்.

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இதைச் சுருக்கமாகக் கூறவேண்டுமெனில் பின்வருமாறு கூறலாம்.

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவையும் குமாரனையும் எவனுக்கு வெளிப்படுத்த குமாரன் சித்தமாயிருக்கிறாரோ அவனையும் பிதாவையும் தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; அவனையும் குமாரனையும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.

ஆங்கிலத்தில்,
No one knows the Son except the Father, and no one knows the Father except the Son and those to whom the Son chooses to reveal them
என்றிருந்தால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலும்.

இப்புரிந்து கொள்தலுடன் அவ்வசனத்தின் உட்கருத்தை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தேவனை/கிறிஸ்துவை “அறிதல்” என்றால் அதை குறைந்தபட்சம் 3 அர்த்தங்களில் நாம் எடுக்கமுடியும். அவை:

1. தேவன் யார், கிறிஸ்து யார், இருவருக்கும் என்ன உறவு, என்ன நாமம் போன்றவற்றை அறிதல்.

2. தேவனின்/கிறிஸ்துவின் விருப்பங்கள் என்ன, அவர்கள் மனிதனிடம் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிதல்.

3. தேவனின் அதிகாரம் என்ன, கிறிஸ்துவின் அதிகாரம் என்ன, அவர்களின் வல்லமை என்ன போன்றதை அறிதல்.


இந்த 3 வித “அறிதல்களை” தகுந்த வசனங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்போம்.

1. தேவன் யார், கிறிஸ்து யார், இருவருக்கும் என்ன உறவு, என்ன நாமம் போன்றவற்றை அறிதல்.

ஒரே தேவனாகிய நம் தேவன் யெகோவா எனும் நாமமுள்ளவர். இதுபோக மேலும் பல காரணப் பெயர்களும் உண்டு. அவ்வாறே கிறிஸ்துவுக்கும் இயேசு என்ற நாமமும் வேறு பல நாமங்களும் உண்டு. தேவன் கிறிஸ்துவை “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்கிறார்; கிறிஸ்து தேவனை “என் பிதா” என்கிறார். இதன் மூலம் தேவனும் கிறிஸ்துவும் பிதா குமாரன் எனும் உறவில் இருக்கின்றனர் என அறிகிறோம்.

2. தேவனின்/கிறிஸ்துவின் விருப்பங்கள் என்ன, அவர்கள் மனிதனிடம் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிதல்.

எரேமியா 22:16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 யோவான் 2:3,4 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான்.

இதுபோன்ற மேலும் பல வசனங்கள் உண்டு. குறிப்பாக பின்வரும் வசனத்தைப் படிப்போம்.

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இவ்வசனத்திலும் 1 யோவான் 2:3,4-லும் “அறிதல்” எனும் வார்த்தைக்கு மூலபாஷையில் "ginosko" எனும் ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே 1 யோவான் 2:3,4-ன் “அறிதலைப்” போல் யோவான் 17:3-லும், தேவனின்/கிறிஸ்துவின் எதிர்பார்ப்பை அறிந்து நடக்கிற “அறிதலைத்தான்” யோவான் 17:3-ம் குறிப்பிடுகிறதென அறிகிறோம்.

அதாவது தேவனின்/கிறிஸ்துவின் எதிர்பார்ப்பின்படி அவர்களின் கற்பனைகளைக் கைக்கொள்வதுதான் மெய்யாகவே அவர்களை அறிகிற அறிவு, இந்த அறிவின் மூலமே நாம் நித்தியஜீவனைப் பெறுகிறோம் என யோவான் 17:3 கூறுகிறது.

3. தேவனின் அதிகாரம் என்ன, கிறிஸ்துவின் அதிகாரம் என்ன, அவர்களின் வல்லமை என்ன போன்றதை அறிதல்.

இந்த அறிதலை மத்தேயு 11:27; 28:18; யோவான் 5:27; 10:29 போன்ற பல வசனங்கள் தருகின்றன.

இவற்றில் மத்தேயு 11:27-ஐத்தான் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வசனத்தின் முழு விளக்கத்தையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நாம் ஏற்கனவே பார்த்த மொழிபெயர்ப்பு திருத்தத்தின்படி, மத்தேயு 11:27-ஐ பின்வருமாறு எழுதலாம்.

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இவ்வசனத்தில் காணப்படும் “அறியான்” எனும் வார்த்தைக்கு, யோவான் 17:3 மற்றும் 1 யோவான் 2:3,4 வசனங்களில் காணப்படும் “அறிதல்” எனும் வார்த்தைக்கான மூலபாஷை வார்த்தை பயன்படுத்தப்படாமல், "epiginosko" எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்:

epiginosko; to know upon some mark, i.e. recognize; by implication, to become fully acquainted with, to acknowledge:

அதாவது: ஏற்றுக்கொள்தல் அல்லது ஒப்புக்கொள்தல் என்பதே இவ்வார்த்தையின் அர்த்தம்.

இனி, வசனத்தின் முதல் பகுதிக்கு வருவோம். “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது” என இயேசு கூறுகிறார். அதாவது, பிதா தான் சகலத்திற்கும் சொந்தக்காரர், ஆனால் அவர் அவற்றைத் தம்மிடம் ஒப்புவித்திருப்பதாக இயேசு கூறுகிறார்.

இதன்மூலம் பிதாவின் அதிகாரத்தையும் இயேசு உணர்த்துகிறார், தமது அதிகாரத்தையும் இயேசு உணர்த்துகிறார். சகலத்திற்கும் சொந்தக்காரர் எனும் அதிகாரம் பிதாவைச் சேர்ந்தது, பிதாவிடமிருந்து சகலத்தையும் பெறுவதற்கான அதிகாரம் தம்மைச் சேர்ந்தது என்கிறார்.

இந்த உண்மையை பிதா மற்றும் இயேசுவைத் தவிர வேறு யாரெல்லாம் ஏற்றுக்கொள்வார்கள் (அல்லது ஒப்புக்கொள்வார்கள்)? இக்கேள்விக்கான பதிலைத்தான் அவ்வசனத்தின் 2-வது பகுதியில் கூறுகிறார். ஆம், குமாரனாகிய இயேசு யாருக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்கள் மட்டுமே இந்த உண்மையை ஏற்பார்கள், அல்லது ஒப்புக்கொள்வார்கள். ஆனால் குமாரனாகிய இயேசு பிதாவின் சித்தப்படியே செய்பவர். எனவே, பிதா எவர்களுக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்களுக்கே குமாரனும் வெளிப்படுத்துவார்.

இவ்வசனத்தை இயேசு சொன்னதன் பின்னணியை சற்று ஆராய்வோம்.

மத்தேயு 11:27-ஐ ஒட்டின வசனங்களை இயேசு எவர்களிடம் கூறினாரோ அவர்கள் இயேசுவின் அதிகாரத்தை ஏற்கவில்லை, (அல்லது ஒப்புக்கொள்ளவில்லை). ஏனெனில் இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் நம்பவில்லை. அவர்களின் அவநம்பிக்கையைக் குறித்து, பின்வரும் வசனத்தில் கூறுகிறது.

மத்தேயு 11:20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:

இந்த ஜனங்கள் இயேசுவுக்கு பிதா தந்த அதிகாரத்தை ஏற்கவில்லை (அல்லது நம்பவில்லை). எனவே அவர்கள் மனந்திரும்பவில்லை. இவர்களுக்கு நேரப்போகும் ஆக்கினைகளைக் குறித்து 21-24 வசனங்களில் இயேசு கூறுவதைக் காணலாம்.

அதன்பின் 25,26 வசனங்களை பிதாவிடம் இயேசு சொன்னார்.

மத்தேயு 11:25,26 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

தாம் பேசிக்கொண்டிருந்த ஜனங்கள் தம்மை அறியத் தவறியதால் (அதாவது பிதா தமக்குத் தந்த அதிகாரத்தை ஏற்கத் தவறியதால்), பிதாவிடம் இயேசு இவ்வாறு கூறினார். இயேசு பேசிக் கொண்டிருந்த (ஞானிகளும் கல்விமான்களுமாகிய) ஜனங்கள் அவரை அறியவில்லை; ஏனெனில் அவர்கள் தங்களைத் தாழ்த்தி இயேசுவை அறிய முற்படாமல், தங்கள் ஞானம் மற்றும் கல்வியைக் கொண்டு இயேசுவை அறிய முற்பட்டனர். அதாவது தங்கள் அறிவைக் குறித்த மேட்டிமையுடன் இயேசுவை அறிய முற்பட்டனர். எனவே பிதாவானவர் அவர்களுக்கு இயேசுவை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் பாலகரைப் போல் தங்களைத் தாழ்த்தி இயேசுவை அறிய முற்படுவோருக்கு பிதாவானவர் இயேசுவை வெளிப்படுத்தினார் (வெளிப்படுத்துவார்). (உ-ம்: பேதுரு, ஒரு வார்த்தை சொன்னால் போதும் எனக் கூறின நூற்றுக்கதிபதி, மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளை நாய்கள் தின்னுமே எனக் கூறிய கானானிய ஸ்திரீ, அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்கள்). எனவேதான் பாலகருக்கு வெளிப்படுத்தினீர் என 25-ம் வசனத்தில் பிதாவிடம் இயேசு கூறுகிறார்.

பிதாவிடம் 25,26 வசனங்களை இயேசு கூறினபின், 27-ம் வசனத்தை தமக்குள்ளாகவே சொல்லியிருக்கலாம், அல்லது தமக்கு முன்னே நின்ற மனந்திரும்பாத ஜனங்களிடம் கூறியிருக்கலாம். எப்படியாயினும், அந்த வசனத்தை, தமக்கு முன்னே நின்ற ஜனங்களை மனதில் வைத்தே கூறினார்.

அவ்வசனத்தில் “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்லி பிதா எப்படி தம்மைக் கனப்படுத்தியுள்ளார் என்பதைக் கூறுகிறார். இவ்வாறு பிதா இயேசுவுக்குக் கனத்தைக் கொடுத்ததையும், பிதாவிடம் இயேசு கனத்தைப் பெற்றதையும் எவர்கள் அறிந்து ஏற்பார்கள் என்பதைத்தான் 27-ம் வசனத்தில் இயேசு கூறுகிறார்.

குமாரனாகிய இயேசு எவர்களுக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்கள்தான் “பிதாவிடம் எப்படி சகல அதிகாரமும் இருந்தது, அவர் அவற்றை எப்படி இயேசுவுக்கு கொடுத்தார்” என்பதை அறிந்து ஏற்பார்கள்.

இப்போது நம் மனதில், “எவர்களுக்கு வெளிப்படுத்த குமாரன் சித்தமாயிருப்பார்” எனும் கேள்வி எழலாம். எவர்களெல்லாம் பாலகரைப் போல் தங்களைத் தாழ்த்தி பிதாவையும் குமாரனையும் அறிய இயேசுவிடம் வருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வெளிப்படுத்த இயேசு சித்தமுள்ளவராயிருக்கிறார்.

எனவேதான் 27-ம் வசனத்தையடுத்து, 28-ம் வசனத்தில் இயேசு பின்வருமாறு கூறினார்.

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

ஆம், எல்லோரும் இயேசுவிடம் செல்லலாம். தம்மிடத்தில் வருகிறவர்களை அவர் புறம்பே தள்ளுவதில்லை (யோவான் 6:37). எனவே நம்மைத் தாழ்த்தி அவரிடம் சென்றால் நிச்சயமாக அவர் தம்மையும் பிதாவையும் நமக்கு வெளிப்படுத்துவார்.

உண்மையில் பல வசனங்கள் மூலம் ஏற்கனவே அவர் வெளிப்படுத்திவிட்டார். உதாரணமாக மத்தேயு 11:27-ல் “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது” எனும் உண்மையை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் இன்றைய திரித்துவக்காரர்கள், இயேசுவும் பிதாவும் ஒன்றுதான், இயேசுவே பிதாவாக வந்தார், என்பது போன்ற குழப்பமான கருத்துக்களை வைத்திருப்பதால், “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது” என்பது போன்ற உண்மைகளை அவர்களால் ஏற்க இயலவில்லை, ஒப்புக்கொள்ள இயலவில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

ஆண்டவராகிய இயேசுவை பற்றிய தாங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. நான் அறிந்ததை நான் பதிவிட்டேன். நீங்கள் அறிந்ததை வசனத்தின் அடிப்படையில் பதிவிட்டிருக்கிறீர்கள். நான் மூல பாஷை ஆராயாததால் எதையும் மறுப்பதற்கு இல்லை! இதை ஒரு பெரிய முரண்பாடாக கருதி  விவாதிக்கவும் நான் விரும்பவில்லை
இயேசுவின் 12 சீடர்களில் பேதுரு மட்டுமே இயேசுவைப்பற்றிய சரியான வெளிப்பாட்டை பெற்றதாக சொல்லி இயேசு அவனை பாராட்டினார்.  பரலோக பிதாவினடத்தில் இருந்து இயேசுவை பற்றிய சரியான வெளிப்பாட்டை  பெற்ற பேதுருவே,  இயேசு சிலுவைப்பாடுகள் குறித்து   "அது சம்பவிக்க கூடாது" என்று கூறும்போது இயேசு சற்றும் தயங்காமல் "அப்பாலே போ சாத்தனே!" என்று கடிந்து கொண்டார்

இங்கு  யார் இயேசுவை சரியாக கணித்தார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. மாறாக  யார் தேவனின் சித்தத்தை அறிந்து அதை சரியாக நிறைவேற்றினார்கள் என்பதே முக்கியம்!

தொழுதுகொள்வது  பற்றி!   
சங்கீதம் 29:2
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்.

ரோமர் 10:13
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்
.

மத்தேயு 4:10
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

சங்கீதக்காரன், பவுல் மற்றும் இயேசுவின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு கர்த்தரை தொழுகோள்வோம்! சில சகோதரர்கள் புரியாமல் நமக்கு எதிராக சொல்வதுபோல்  சொல்வது போல அந்த கர்த்தர்தான் இயேசுவாக இருந்தால் அத்தொழுகை அவருக்கே போய் சேரட்டும்
அல்லது

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்

பிலிப்பியர் 3:3
ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து , கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்

வெளி 22:9
,
தேவனைத் தொழுது கொள் என்றான்.

ஆண்டவராகிய இயேசுவும் பவுலும் தேவ தூதர்களும்  சொல்வதுபோல் தேவனை தொழுதுகொண்டு ஆராதனை செய்து, கிறிஸ்த்துவுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம்  ஒருவேளை சில சகோதரர்கள் சொல்வதுபோல் இயேசுவே தேவனாக இருந்தால் அதுவும் அவருக்கே போய் சேரும்.
இங்கு இயேசு எந்த வருத்தமும் படப்போவது இல்லை!  மாறாக சகோதரர் களுக்கு இடையே  குழப்பத்தை உண்டுபண்ண வேண்டும் என்று எண்ணி  இயேசுவை ஒருஅஸ்திரமாக பயன்படுத்துகிறவர்களுக்கு மட்டும் தான் இங்கு வேதனையும் வருத்தமும் உண்டாகும்!


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//இங்கு யார் இயேசுவை சரியாகக் கணித்தார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. மாறாக, யார் தேவனின் சித்தத்தை அறிந்து அதை சரியாக நிறைவேற்றினார்கள் என்பதே முக்கியம்!//

தேவசித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றுவதே முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இயேசுவுங்கூட இவ்வாறு கூறியுள்ளார்.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

இயேசு இத்தனை தெளிவாகச் சொல்லியிருந்தும், இயேசுவை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்வதிலும் அதைவிட ஒருபடி சென்று இயேசுவை ஆராதிப்பதிலும் பலர் தீவிரப்படுவதாலும்தான் அதைக் குறித்து சொல்ல வேண்டியதாயுள்ளது. தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய் எனத் தேவன் கூறியிருக்கையில், அவரது சித்தத்திற்கு விரோதமாக/ கட்டளைக்கு விரோதமாக “இயேசுவை ஆராதித்தால்” அது தேவகட்டளையை அவமதித்தல் அல்லவா?

இவ்விஷயத்தில் தொடர்ந்து தியானிக்கும் முன், ஆராதனை என்றால் என்ன, இதுபற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஆராதனை எனும் தமிழ்வேதாகம வார்த்தைக்கு இணையாக, பழையஏற்பாட்டில் “ஊழியம்” எனப் பொருள்படும் 'abad' என்ற வார்த்தையும், புதியஏற்பாட்டில் “தொண்டாற்றுதல்” எனப் பொருள்படும் 'latreuo' எனும் வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பழையஏற்பாட்டில் ஆராதனை வழிமுறைகளாக சில காரியங்கள் கூறப்பட்டுள்ளன.

யாத்திராகமம் 12:25-27 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

யாத். 29:30 அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.

யாத். 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

மூலபாஷை வார்த்தையின் அர்த்தப்படி பார்த்தால், தேவனுக்கு ஊழியம் செய்வதும் அவரைச் சேவிப்பதும்தான் அவரை “ஆராதித்தல்” என அறியப்படுகிறது. ஆகிலும் அந்த “ஆராதித்தலை” சில குறிப்பிட்ட முறைப்படி செய்யும்படி பழையஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

ஆனால் இம்மாதிரி முறைமைகளைச் செய்வதோடு தேவனை “ஆராதித்தல்” முடிந்துபோவதில்லை. குறிப்பிட்ட முறைப்படி பலியிடுவதாலோ காணிக்கையிடுவதாலோ மட்டும் ஊழியம் முடிந்துபோவதில்லை. “ஊழியம்” என்றால் எஜமானின் அத்தனை கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதுதான் மெய்யான ஊழியம். அதுதான் மெய்யான “ஆராதனை”. அந்த மெய்யான “ஆராதனை” தமக்கு மட்டுமே உரியது எனத் தேவன் கூறுகிறார் (உபாகமம் 6:13; 10:20).

பெற்றோரின் கட்டளைகளுக்கு, அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு மற்றும் பெரியோரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அவசியம்தான். ஆனால் அவர்களின் கட்டளைகளைவிட மேலானது தேவனின் கட்டளைகள். அவை மற்றெல்லோரது கட்டளைகளையும் பின்னாகத் தள்ளி முதன்மையில் நிற்பவையாகும். எனவே நாம் முதலிடம் கொடுக்கவேண்டியது தேவன் ஒருவரது கட்டளைகளுக்கு மட்டுமே. அவற்றிற்குப் பின்னாகத்தான் மற்றவர்களின் கட்டளைகள்.

நாம் முதலாவதாக ஊழியம் அல்லது சேவை செய்யவேண்டியது தேவனுக்குத்தான். அதற்குப்பின்னர்தான் மற்றவர்களுக்குச் செய்யும் ஊழியம் அல்லது சேவை எல்லாம். நாம் முதன்மையாக ஊழியம் செய்யவேண்டிய அந்த ஒரே தேவனின் நாமம் யெகோவா என்பதுவே. எனவே “அவர் ஒருவருக்கே ஆராதனை” எனும் சொற்றொடர் தேவனாகிய யெகோவாவுக்கு மட்டுமே எனக் குறிப்பதாக உள்ளது.

பழையஏற்பாட்டின் ஆராதனை முறைமைகள் எல்லாம் (அதாவது ஆசரிப்புக்கூடார காரியங்கள், பலிகள் போன்றவை) இயேசுவின் ஒரே பலியின் மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டன . எனவே புதியஏற்பாட்டுக் காலத்தில் ஆராதனை முறைகள் என எதுவும் கிடையாது. எனவேதான் தேவனுடைய ஆலயத்தில் மட்டுமின்றி “பிதாவை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரும்” என யோவான் 4:21-ல் இயேசு கூறினார். குறிப்பாக நம் சரீரமே தேவனுடைய ஆலயமாக இருப்பதால் “தேவனுக்கு ஆராதனை” என்பது நம் கிரியைகளின் மூலம்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இக்கருத்துக்கு இசைவாக பின்வரும் வசனங்கள் இருப்பதைக் காணலாம்.

ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட “தேவன் ஒருவருக்கு மட்டுமே ஆராதனை ” எனும் கோட்பாடு என்றென்றும் மாறாததாயிருக்கிறது. ஆனால் பழைய ஏற்பாட்டின் ஆராதனை முறைமைகள் புதிய ஏற்பாட்டில் ஒழிந்துபோயின. புதியஏற்பாட்டைப் பொறுத்தவரை தேவனுக்குக் கீழ்ப்படிவதை நம் சரீரத்தின் ஒவ்வொரு செயலின் மூலமாகவும் காட்டுவதுதான் ஆராதனை.

பழையஏற்பாட்டில் மோசே மூலம் தமது கற்பனைகளைக் கூறிய தேவன், புதியஏற்பாட்டில் இயேவின் மூலம் தமது கற்பனைகளைக் கூறினார். மாத்திரமல்ல, இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்றும் மோசே மூலம் கூறிவைத்துள்ளார் (உபாகமம் 18:19).

எனவே மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதென்றால் அதன் அர்த்தம் தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதுதான். அவ்வாறே இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதென்றால் அதன் அர்த்தம் தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே. மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதை எப்படி மோசேயை ஆராதிப்பதாகச் சொல்லமுடியாதோ அதேவிதமாக இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதையும் இயேசுவை ஆராதிப்பதாகச் சொல்லமுடியாது.

மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தாலும் சரி, இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தாலும் சரி, அது தேவன் ஒருவரை மட்டுமே ஆராதிப்பதாகப் பொருள்படும்.

தேவனை நான் ஆராதிக்கிறேன் என வார்த்தையால் சொல்லவேண்டியதில்லை, அல்லது பழையஏற்பாட்டுக் காலம் மாதிரி ஏதேனும் வழிமுறைமைகள் (சடங்குகள்) மூலம் தேவனை ஆராதிக்க வேண்டியதில்லை. நம் செயலில் (அதாவது கிரியைகளில்) இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தால் போதும், அப்போது நாம் தேவனுக்கு ஆராதனை செய்கிறவராகிவிடுவோம்.

ஆனால் இன்று நம் மத்தியில், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதை முக்கியப்படுத்தாமல், “இயேசுவை ஆராதிக்கிறேன், இயேவை ஆராதிப்போம் ” என வார்தைகளால் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

பல விஷயங்களில் ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்த சகோ.விஜய்76 கூட “இயேசு ஆராதனைக்குரியவர்” என்பது போன்ற சடங்கான வார்த்தைகளைச் சொல்வது வினோதமாகவும் புரியாத புதிராகவும் உள்ளது.

இயேசுவுக்கு முன்னாக முழங்கால்கள் யாவும் முடங்கும் என வேதாகமம் சொல்வது மெய்தான். இதன் அர்த்தமென்ன? இயேசுவுக்கு முன்னாக அனைவரும் பணியவேண்டும், அவரது வார்த்தைகளுக்கு அனைவரும் கீழ்ப்படியவேண்டும் என்பதே. ஆனால் நாம் இப்படிச் செய்வதன்மூலம் யாரை ஆராதிக்கிறோம்? ஒரே தேவனாகிய யெகொவாவையே.

ஏனெனில் இயேசுவுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது “ஒரே தேவனாகிய யெகோவாவே”.

யோசேப்பின் உத்தரவில்லாமல் எகிப்தில் யாரும் கையை/காலை அசைக்கக்கூடாது எனும் பார்வோனின் உத்தரவுக்கு எகிப்து ஜனங்கள் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் யாருக்குக் கீழ்ப்படிந்தார்கள் எனச் சொல்லமுடியும்? பார்வோனுக்கா, யோசேப்புக்கா? பார்வோனுக்குத்தான் என நிச்சயமாகச் சொல்லமுடியும். அதேபோலத்தான், நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்றால் அதன் உள்ளர்த்தம், நாம் தேவனுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதே.

இயேசு நம் பாவங்களுக்காக தியாகபலியானார் என்பதற்காக நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிவதில்லை; “இயேசுவுக்கு யாவரும் கீழ்ப்படியவேண்டும், அவருக்கு முன்பாக முழங்கால்கள் யாவும் முடங்கவேண்டும் ” எனத் தேவன் கூறியதால்தான் இயேசுவுக்கு நாம் கீழ்ப்படிகிறோம், அவருக்கு முன்பாகப் பணிகிறோம். இதனால் “ஒரே தேவனுக்கு ஆராதனை” என்பது இயேசுவுக்கும் ஆராதனை என மாறுவதில்லை. சிங்காசனத்தில் மட்டும் யோசேப்பைவிட பார்வோன் பெரியவனாயிருந்ததைப்போல (ஆதி. 41:40), ஆராதனை என்பது தேவன் ஒருவரையே சேரும்.

ஆகிலும் பழையஏற்பாட்டைப் போல ஆராதனை முறைகள் எதுவும் புதியஏற்பாடுக் காலத்தில் இல்லாததால் “ஆராதனை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைவிட, ரோமர் 12:1 மற்றும் யாக்கோபு 1:27 கூறுகிறபடியான “ஆராதனையை” செயலில் காட்டினாலே போதும். ஆனால் இந்நாட்களில் அநேகர் “இயேசுவுக்கு ஆராதனை” எனும் சுலோகத்தை அழுத்தமாகக் கூறிவருவதால்தான் அதைக் கண்டித்து கூறவேண்டியதாகிறது.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 4:10 கூறுகிற ஆராதனை எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தையான 'latreuo' எனும் வார்த்தை, 21 வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் அப்போஸ்தலர் 7:42, ரோமர் 1:25 ஆகிய 2 வசனங்களைத் தவிர மற்ற வசனங்கள் யாவும் தேவனை ஆராதிப்பது சம்பந்தமானவைகளே. 2 வசனங்கள் புறஜாதி தேவனையும் சிருஷ்டியையும் ஆராதிப்பது சம்பந்தமாகச் சொல்லி அப்படிச் செய்வதைக் கடிந்துகொள்ளுகின்றன.

அன்றைய அப்போஸ்தலர்கள் அனைவரும் தேவனை ஆராதிப்பதைத்தான் கூறியுள்ளனர்.

(தொடரும்...)


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//தொழுதுகொள்வது  பற்றி!
சங்கீதம் 29:2 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்.

ரோமர் 10:13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் .

மத்தேயு 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.


சங்கீதக்காரன், பவுல் மற்றும் இயேசுவின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு கர்த்தரை தொழுகோள்வோம்! சில சகோதரர்கள் புரியாமல் நமக்கு எதிராக சொல்வதுபோல்  சொல்வது போல அந்த கர்த்தர்தான் இயேசுவாக இருந்தால் அத்தொழுகை அவருக்கே போய் சேரட்டும். //

தமிழ்வேதாகமத்தின், “கர்த்தர், தொழுதுகொள்தல், ஆராதித்தல்” எனும் வார்த்தைகளின் பயன்பாட்டை ஒருங்கிணைத்து ஒரு கருத்தைச் சொல்வது சரியாக இருக்காது.

ரோமர் 10:13-ன் “தொழுது கொள்தல்” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை ‘epikaleomai’ என்பதாகும். மத்தேயு 4:10-ன் “ஆராதனை” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை ‘latreuo' என்பதாகும்.

ரோமர் 10:13-ன் “கர்த்தர்” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை ‘kurios’ என்பதாகும். மத்தேயு 4:10-ன் “தேவனாகிய கர்த்தர்” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தைகள் ‘theos மற்றும் kurios' என்பவைகளாகும்.

பழையஏற்பாட்டின் பிரதான மூலபாஷை “எபிரெயு”; புதிய ஏற்பாட்டின் பிரதான மூலபாஷை ‘கிரேக்கு’. இப்படியிருக்கையில் முழுவேதாகமத்துக்கும் ஒரே பொதுவான மொழியைக் கொண்ட தமிழ்வேதாகமத்தின் பழைய/புதிய ஏற்பாடுகளின் வார்த்தை ஒற்றுமைகளைப் பயன்படுத்தி ஒரு கருத்தைச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை மெய்யாகவே அறிந்து கருத்தைச் சொல்லவிரும்புபவர்கள், மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தங்களையெல்லாம் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும். வெறுமனே தமிழ் வேதாகம வார்த்தை ஒற்றுமைகளை மட்டும் வைத்துக் கருத்தைச் சொன்னால் அதை நிச்சயமாக ஏற்கமுடியாது.

//அல்லது

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்

பிலிப்பியர் 3:3 ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து , கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்

வெளி 22:9 , தேவனைத் தொழுது கொள் என்றான்.

ஆண்டவராகிய இயேசுவும் பவுலும் தேவ தூதர்களும்  சொல்வதுபோல் தேவனை தொழுதுகொண்டு ஆராதனை செய்து, கிறிஸ்த்துவுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம்  ஒருவேளை சில சகோதரர்கள் சொல்வதுபோல் இயேசுவே தேவனாக இருந்தால் அதுவும் அவருக்கே போய் சேரும்.
//

மேலே சொன்னதைத்தான் மீண்டும் சொல்லுகிறேன்.

வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை மெய்யாகவே அறிந்து கருத்தைச் சொல்லவிரும்புபவர்கள், மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தங்களையெல்லாம் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும். வெறுமனே தமிழ் வேதாகம வார்த்தை ஒற்றுமைகளை மட்டும் வைத்துக் கருத்தைச் சொன்னால் அதை நிச்சயமாக ஏற்கமுடியாது.

இவரைத் தொழுவதாக இருக்கட்டும், அவரைத் தொழுவதாக இருக்கட்டும் என நாம் நம் விருப்பத்திற்குத் தக்கதாக எடுக்கமுடியாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லும்படி இயேசு கூறியுள்ளார். எனவே “சமரசம்” என்ற பேச்சுக்கே இடமில்லை.

வேதாகமம் குழப்பத்திற்கிரியதல்ல. இவரையும் ஆராதிக்கலாம், அவரையும் ஆராதிக்கலாம் என்பதுபோன்ற குழப்பமான கருத்துக்களை அது கூறவில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.தினகரன் அவர்களின் பரலோக தரிசனங்கள் ” என்ற தலைப்பில் Bible Uncle தளத்தில் வெளியான செய்தியில் சகோ.தினகரனின் வீடியோ பேட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு பேட்டியில், சகோ.தினகரன் கூறியுள்ள ஓர் அனுபவம்:

//நான் பலமுறை பரலோகம் சென்று வந்துள்ளேன். அதில் ஒன்றைக் கூறுகிறேன்.

ஆவியின் வரங்களுக்காக, குறிப்பாக குணமாக்கும் வரத்திற்காக ஒரு மாதம் முழுமையாக நான் ஜெபித்தேன். அதன்பின் ஒரு நாள் நான் ஜெபிக்கையில் ஒரு சத்தம் “இங்கு வா” என என்னை அழைத்தது. அப்போது ஒரு பெரிய கரமும் என் முன் வந்து நின்றது. நான் அக்கரத்தின்மீது குதித்து ஏறி நின்றேன். அக்கரம் என்னை உயரே தூக்கிச் சென்றது. அப்படிச் செல்கையில் கீழே நான் ஜெபித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். மேலே மேகங்கள் மற்றும் நட்சத்திரங்களைப் பார்த்தேன். பரலோகத்தில் கோடிக்கணக்கான தேவதூதர்கள் மேலும் கீழும் செல்வதைப் பார்த்தேன்.

அங்கு கர்த்தராகிய இயேசுவையும் பார்த்தேன். அவர் “உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டார். நான் “எனக்கு ஆவியின் வரங்கள் வேண்டும்” என்றேன். இயேசு புன்னகைத்து, “என்னுடன் வா, பிதாவிடம் செல்வோம்” என்றார். பின்னர் மேலும் வெகு தூரத்திற்கு நாங்கள் சென்றோம். அங்கு 1 தீமோத்தேயு 6:15,16 கூறுகிறபடியான சேரக்கூடாத ஒளியைக் கண்டேன். அங்கு பெரிய சிங்காசனத்தையும் கண்டேன். அதைச் சுற்றி ஒளி வட்டம் காணப்பட்டது. அந்த சிங்காசனத்தில் மகிமை நிறைந்த ஒருவர் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அவரது முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

மீண்டும் “உனக்கு என்ன வேண்டும்” எனும் சத்தத்தைக் கேட்டேன். ஆனால் இந்தச் சத்தம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது மகா பயங்கர சத்தமாக இருந்தது. இயேசுவின் சத்தம் பாசமாக, அன்பாக, கருணையாக இருந்தது. ஆனால் இந்தச் சத்தமோ சங்கீதம் 29 கூறுகிறபடி மகத்துவமும் வல்லமையுமுள்ளதாக இருந்தது. நான் அவரிடம், “பிதாவே, ,எனக்கு ஆவிக்குரிய 9 வரங்கள் வேண்டும்” என்றேன்...
//

இப்படியாக சகோ.தினகரன் தனது அனுவத்தை தொடர்ந்து கூறுகிறார்.

தினகரனின் இந்த அனுபவத்தை உண்மையானதொன்றாகக் கருதி, இதை இங்கு நான் வெளியிடவில்லை. இந்த அனுபவம் உண்மையாக இருக்கக்கூடுமா இல்லையா எனும் விவாதத்தை, தேவைப்பட்டால் மற்றொரு திரியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்பேட்டியை இங்கு இத்திரியில் வெளியிட வேறொரு முக்கிய காரணம் உண்டு.

தினகரனுங்கூட திரித்துவ கோட்பாட்டை ஏற்றுள்ளவர் என்பதை நாம் அறிவோம். ஒருமுறை தனது இயேசு அழைக்கிறார் பத்திரிகையில், “பிதாவாகிய தேவன் மாறுவேடம் பூண்டு மனிதனாக இவ்வுலகிற்கு வந்தார் ” என அவர் எழுதியுள்ளார். அதாவது பிதாவும் இயேசுவும் ஒருவரே என நம்புகிறவராக அவர் இருந்தார். அப்படிப்பட்ட அவர், தான் பரலோகம் சென்றபோது இயேசுவையும் பிதாவையும் தனித்தனியே அதிக வேறுபாடுள்ளவர்களாகப் பார்த்ததாகக் கூறுகிறார். இக்கூற்று அவர் நம்புகிற திரித்துவக் கோட்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

சில்சாம் உட்பட எத்தனையோ பேர் தினகரன் சொல்வதை அப்படியே ஏற்கிற தீவிரவாதிகளாக இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். அவர்களுக்கு ஒரு கேள்வி:

பிதாவாகிய தேவன் மாறுவேடம் பூண்டு மனிதனாக இவ்வுலகிற்கு வந்தார் என தினகரன் சொன்னதை அவர்கள் நம்புகிறார்களா? அல்லது,

அவர் பரலோகத்தில் பிதாவையும் இயேசுவையும் முற்றிலும் வேறுபட்ட தனித்தனி நபர்களாகப் பார்த்ததை நம்புகிறார்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

//அவர்களுக்கு ஒரு கேள்வி:

பிதாவாகிய தேவன் மாறுவேடம் பூண்டு மனிதனாக இவ்வுலகிற்கு வந்தார் என தினகரன் சொன்னதை அவர்கள் நம்புகிறார்களா? அல்லது,

அவர் பரலோகத்தில் பிதாவையும் இயேசுவையும் முற்றிலும் வேறுபட்ட தனித்தனி நபர்களாகப் பார்த்ததை நம்புகிறார்களா? //

அது அந்த‌ அந்த‌ செய்தி கொடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை பொறுத்த‌து!! ஒரு செய்தியிலிருந்து இன்னோரு செய்தி முறணாக‌ இருப்ப‌துதானே இவ‌ர்க‌ளின் த‌னித்த‌ன்மை!!

ஒரு மாத‌மாக‌ "குண‌மாக்கும் வ‌ர‌ம்" கிடைக்க‌ ஜெபித்தேன் என்று சொல்லுகிறாரே, யாரிட‌த்தில் ஜெபித்தார்!! அப்ப‌டி இயேசு கிறிஸ்துவிட‌ம் அல்ல‌து பிதாவிட‌ம் ஜெபித்தும், பாவ‌ம் அவ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வில்லையா? அதனால்தான் உனக்கு என்ன‌ வேண்டும் என்று கேட்டார்களா? எப்ப‌டி எல்லாம் த‌ங்க‌ளை மேன்மைப்ப‌டுத்துகிறார்க‌ள் இவ‌ர்க‌ள்!! இன்னும் கொடுமை என்ன‌வென்றால், இவ‌ரைப் ப‌ர‌லோக‌த்திற்கு கூட்டி சென்ற‌வ‌ர்க‌ள் யாராம்? இவ‌ரே சென்று விட்டாரா? இவ‌ர் ப‌ர‌லோக‌த்திற்கு கூட்டி செல்ல‌ப்ப‌ட்டிருக்கிறார், ஆனாலும் ப‌ர‌லோக‌த் தேவ‌னுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் இவ‌ரின் வ‌ருகை ஏன் என்று தெரிய‌வில்லையாம்!! "உன‌க்கு என்ன‌ வேண்டும்" என்று அவ‌ரிட‌ம் கேட்கிறார்க‌ளாம், இயேசு கிறிஸ்துவும் அத‌ன் பிற‌கு பிதாவும்!!

இதை எல்லாம் ப‌டித்தால் ஏதோ விக்கிர‌மாதித்யா க‌தை போல் இருக்கிற‌து!! இப்ப‌டி எல்லாம் பேசினால்தான் கூட்ட‌ம் சேர்க்க‌ முடியும்!!

2 கொரி 12ல் ப‌வுல் எழுதிய‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் இது போன்ற‌ மாயாஜால‌ க‌தைக‌ள் உருவாகக்‌ கார‌ண‌மாகி விட்ட‌து!! ப‌வுலுக்குக்கூட‌ பேசும் காரிய‌ங்க‌ள் ஒன்றும் விள‌ங்க‌வில்லை, ஆனால் இவ‌ரிட‌ம் இயேசு கிறிஸ்துவும் பிதாவும் கேள்வி கேட்டிருக்கிறார்க‌ள் (த‌மிழில்!?). கிறிஸ்துவின் மார்பின் சாய்ந்திருந்த‌ அவ‌ரின் அன்பான‌ அப்போஸ்த‌ல‌னே, இயேசு கிறிஸ்துவின் ம‌கிமையை க‌ண்டு செத்த‌வ‌ன் போல் ஆனேன் என்கிறார், ஆனால் இவ‌ர்க‌ள் எத்துனை துணிச்ச‌ல் இருந்தால், பிதாவைக்க‌ண்டேன், பேசினேன், கிறிஸ்து கையைப் பிடித்து கூட்டிச் சென்றார் என்பது போன்றதைத் துணிச்ச‌லாகப்‌ பேசுகிறார்க‌ளோ!! இவ‌ர்க‌ளுக்கு ஒரு தீவிர‌வாத‌ ப‌ட்ட‌ள‌ம் இருக்கிற‌ துணிச்ச‌ல்தான் போல்!!

2 தெச‌ 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

கொடிய‌ வ‌ஞ்ச‌க‌த்தினால் தான் இவ‌ர்க‌ள் இப்ப‌டிப் பொய் பேசுகிறார்க‌ள், அதைப் ப‌ல‌ர் ந‌ம்புகிறார்க‌ள்!! வ‌ச‌ன‌ம் தெரியாத‌தினால்!! வேத‌ம் சொல்லும்‌ வார்த்தைக‌ளைவிட‌ ஊழிய‌ர்க‌ள் சொல்லும் வார்த்தைக‌ள் தான் இவர்களுக்குப் பெரிசு!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இத்திரியின் தலைப்பு சம்பந்தமான யெளவன ஜனம் தளத்தின் கருத்துக்களுக்கு பதில் தந்து விட்டோம். இறுதியாக இவ்விஷயத்தில் யெளவன ஜனம் தளத்தின் ஒரு முரண்பாடான கருத்தை தள அன்பர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

//ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் (யேகோவா ) என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.  (யோவான்.8:24)//

இயேசு சொன்ன ஒரு வசனத்தை எடுத்துக்காட்டும் யெளவன ஜனம், அடைப்புக்குறிக்குள் “யேகோவா” எனும் வார்த்தையைச் சேர்த்ததன் மூலம், இயேசுவே யேகோவா எனும் கருத்தைச் சொல்கிறது. அதே யெளவன ஜனம் இப்படியும் சொல்கிறது.

//இயேசுவையே பிதா என்று இங்கு யாரும் சொல்லவில்லை; அது தனியான துர்ப்போதனை//

இயேசுவை பிதா என்று சொல்வது துர்ப்போதனையாம்; ஆனால் அவரை யேகோவா எனச் சொல்வது நற்போதனையாம். இயேசுவை பிதா எனச் சொல்வதற்கும் யேகோவா எனச் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விபரமறிந்தவர்கள் கூறுவார்களாக.

காலஞ்செஞ்ச டி.ஜி.எஸ்.-ன் ஊழியத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் யெளவன ஜனத்திற்கு ஒரு கேள்வி:

பிதாவாகிய தேவன் மாறுவேடம் பூண்டு மனிதனாக இவ்வுலகிற்கு வந்தார் என டி.ஜி.எஸ். சொன்னது நற்போதனையா? துர்ப்போதனையா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இத்திரியின் தலைப்பு சம்பந்தமான ஒரு திரி தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உள்ளதென்றாலும், அதில் சில்சாமின் யெளவன ஜன தளத்தின் கருத்துக்களே அதிகமாக இடம் பெற்றுள்ளன. சகோ.அற்புதம் மட்டும் பின்வரும் ஒரு வசனத்தைப் பதித்துள்ளார்.

//அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:22,23)//

பிதாவைக் கனம்பண்ணுகிறவிதமாக குமாரனையும் கனம்பண்ணவேண்டும் என பிதவானவர் சொல்வதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் கனம்பண்ணுதல் என்பதற்கும் “ஆராதித்தல்” என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இவ்வுலகில் நாம் பலரையும் கனம்பண்ணுகிறோம்; ஆனால் எல்லாரையும் ஒரேவிதமாய் கனம்பண்ணுவதில்லை. ஒவ்வொருவரைக் கனம்பண்ணுவதற்கும் ஒரு அளவுகோல் வைத்துள்ளோம். பிரதமரைக் கனம்பண்ணுவதுபோல் முதலமைச்சரைக் கனம்பண்ணுவதில்லை; முதலமைச்சரைக் கனம்பண்ணுவதுபோல் அரசு அதிகாரிகளைக் கனம்பண்ணுவதில்லை; அரசு அதிகாரிகளைக் கனம்பண்ணுவதுபோல் அரசு அலுவலர்களைக் கனம்பண்ணுவதில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொருக்குமுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரையும் கனம்பண்ணுகிறோம். பெற்றோரை, பெரியோர்களை அதிகாரத்தின் அடிப்படையில் கனம்பண்ணாமல், உறவின் அடிப்படையிலும் வயதின் அடிப்படையிலும் கனம்பண்ணுகிறோம்.

ஆக, கனம்பண்ணுதல் என்பது பலருக்கும் உரியதாக உள்ளது. ஆனால் அதன் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதாயிருக்கிறது. அதிகபட்ச கனம் என்பது பிதாவாகிய தேவனையே சாரும். ஆனால் பிதாவாகிய தேவன் தமக்குரிய அந்த அதிகபட்ச கனத்தை குமாரனுக்கும் கொடுக்கும்படியாக, தமது அதிகாரத்தை, குறிப்பாக மனிதரை நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை குமாரனிடம் வழங்கியுள்ளார். அதைத்தான் யோவான் 5:22,23 வசனங்கள் கூறுகின்றன.

கனம்பண்ணுதல் என்பது ஒருவித மரியாதையே. எல்லா சந்தர்ப்பங்களிலும் கனம் பெறுகிறவர், கனம்பண்ணுகிறவரைவிட உயர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. உதாரணமாக, நாட்டிலேயே அதிக கனமுடையவராகிய பிரதமர், ஒரு விளையாட்டு வீரனை, அவனது விளயாட்டுத் திறமைக்காக கனம்பண்ணுவதுண்டு. இதனால் பிரதமரைவிட விளையாட்டு வீரன் உயர்ந்தவனாக முடியாது.

பிதாவுங்கூட இயேசுவுக்கு ஊழியஞ்செய்பவனை கனம்பண்ணுவார் என பின்வரும் வசனம் கூறுகிறது.

யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

இதனால் பிதாவைவிட அவர் கனம்பண்ணுகிற மனிதன் உயர்ந்தவனாகிவிட முடியாது. கனம்பண்ணுதல் என்பது ஒரு குறிப்பிட்ட காரணத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் ஒரு பரிசு அல்லது மரியாதை எனச் சொல்லலாம். ஒரேவிதமான பரிசு அல்லது மரியாதையைப் பெறுகிற அனைவரும் மற்றெல்லா விதத்திலும் சமமானவர்களாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.

எனவே பிதாவுக்கும் குமாரனுக்கும் சம அளவிலான கனத்தைக் கொடுக்கவேண்டுமென்பதால் அவர்கள் இருவரும் எல்லா விதத்திலும் சமமானவர்களாக முடியாது. குறிப்பாக “ஆராதனை” எனும் விஷயத்தில் பிதாவும் குமாரனும் சமமானவர்கள் அல்ல. “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக” என பழையஏற்பாடு சொல்வதை இயேசு வழிமொழிகிறார்.

எனவே ஆராதனை என்பது பிதாவாகிய தேவன் ஒருவருக்கு மட்டுமே.

நம் மேற்பார்வைக்காக:

கனம்பண்ணுதல் எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தையான 'timao' என்பதன் அர்த்தம்: to prize, i.e. fix a valuation upon; by implication, to revere:


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இத்திரியின் தலைப்பு சம்பந்தமாக இறைவன் தளத்தில் கூறப்பட்ட கருத்துக்களை இனி பார்ப்போம்.

sundar wrote in இறைவன்:
//பழைய  ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் இயேசுவை சேவிக்கும்படி கூறப்பட்ட வசனம்:

தானியேல் 7:13 14. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்;   சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

புதிய ஏற்பாட்டு சபையில் இயேசுவை தொழுதுகொண்டார்கள் என்பதற்கு  ஆதார வசனம்:

அப்போஸ்தலர் 7:59 அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

1 கொரிந்தியர் 1:2  எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
//

நாம் ஏற்கனவே பார்த்தபடி வேதாகம மொழிபெயர்ப்பின்போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் ஒற்றுமை அடிப்படையில் ஒரு கருத்தைச் சொல்வதுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாயுள்ளது.

தானியேல் 7:14-ல் பயன்படுத்தப்பட்டுள்ள “சேவிக்கும்படி” எனும் வார்த்தைப் பயன்பாட்டின் அடிப்படையில் சகோ.சுந்தர் தனது கருத்தை வைத்துள்ளார். இப்படிக் கூறுகிற அவர் பின்வரும் வசனத்தைப் படிப்பாராக.

ஆதியாகமம் 15:13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.

இப்பொழுது சற்று சிந்தித்துப் பார்ப்போம். “மனுஷகுமாரனான கிறிஸ்துவை சேவிக்கும்படி” என தானியேல் 7:13,14 கூறுவதையும் “அந்நிய தேசத்தாரைச் சேவிப்பார்கள்” என ஆதி. 15:13 கூறுவதையும் ஒரே கருத்தில் எடுக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது.

ஆதி. 15:13-ன்படி இஸ்ரவேலர் எகிப்தியரைச் சேவித்தது என்பது எகிப்தியரை மகிமைப்படுத்தி சேவித்ததாக அல்ல, அவர்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிருந்ததால் கட்டாயத்தினிமித்தம் எகிப்தியர் சொன்ன வேலைகளைச் செய்ததுதான் அந்த சேவித்தலாகும். அவ்வாறு சேவிக்கையில் அவர்கள் எகிப்தியரை தங்கள் இருதயத்தில் மகிமைப்படுத்தவுமில்லை, கனப்படுத்தவுமில்லை.

ஆனால் தானியேல் 7:14 கூறுகிற “சேவிக்கும்படி” என்பதோ, இயேசுவை கர்த்தத்துவ மகிமையில் வைத்து சேவிப்பதைக் குறிப்பிடுகிறது. எனவே வெறுமனே வார்த்தை ஒற்றுமையை வைத்து மட்டும் சேவிக்கப்படுவரின் கனம், மகிமை, நிலை ஆகியவற்றை ஒப்பிட முடியாது.

உன் தேவனாகிய கர்த்தருக்கே ஆராதனை செய் என உபாகம் 6:13 கூறுகிறது. இவ்வசனத்தின் “ஆராதனை” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை “abad" என்பதாகும். இதே வார்த்தைதான் பின்வரும் வசனங்களில் “வேலைசெய்தல், சேவித்து” எனும் வார்த்தைகளுக்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆதி. 29:18 யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

யாத். 21:2 எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.


இப்பொழுது சற்று சிந்தித்துப் பார்ப்போம். “abad" எனும் வார்த்தை உபாகமம் 6:13, ஆதி. 29:18, யாத். 21:2 எனும் 3 வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த 3 வசனங்களும் ஒரேவிதமான “ஆராதனையைத்தான்” கூறுகின்றனவா? அல்லது ஒரேவிதமான “வேலைசெய்தலைத்தான்” கூறுகின்றனவா? அல்லது ஒரேவிதமான “சேவித்தலைத்தான்” கூறுகின்றனவா? நிச்சயமாக அல்ல. தேவனை ஆராதித்தல் என்பது வேறு, லாபானிடம் யாக்கோபு வேலைசெய்தல் என்பது வேறு, அடிமையானவன் எஜமானை சேவித்தல் என்பது வேறு. ஆனால் 3-ற்கும் “abad" எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், இந்த “abad" எனும் வார்த்தை தானியேல் 7:14-ல் மட்டுமின்றி தானியேல் புத்தகம் முழுவதிலும் பயன்படுத்தப்படவில்லை என்பதே.

உபாகமம் 6:13-ல் கூறப்பட்டுள்ள ஆராதனை என்பது, ஒரே தேவனுக்கு மட்டுமே செலுத்தக்கூடிய விசேஷித்த மகிமை, கனம், சேவை எல்லாம். பழைய ஏற்பாட்டில் “ஆராதனைக்கென” சில முறைமைகளை தேவன் கூறியுள்ளார் என ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த “ஆராதனை” என்பது ஒரே தேவனாகிய யெகோவாவுக்கு மட்டுமே உரித்தானது. இயேசுவுங்கூட உபாகமம் 6:13-ல் எழுதப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டித்தான் “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என மத்தேயு 4:10-ல் கூறுகிறார்.

இப்படியாக வசனங்கள் தெளிவாகக் கூறியுள்ளபோதிலும், வேறு பல வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள “தொழுதுகொள்தல், பணிந்து கொள்தல்” எனும் வார்த்தைகளின் அடிப்படையில் “இயேசுவும் ஆராதனைக்குரிய தெய்வம்” என்று சொல்லி “இயேசுவை ஆராதிப்போம்” என்றும் “இயேசுவுக்கு ஆராதனை” என்றும் சொல்வது நிச்சயமாக வசனத்திற்கு எதிரானதே.

இயேசுவைத் தொழுதல், பணிந்துகொள்தல் என்பது பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard