நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகரியா 11:12,13-ன் தீர்க்கதரிசனம்


Militant

Status: Offline
Posts: 830
Date:
சகரியா 11:12,13-ன் தீர்க்கதரிசனம்
Permalink  
 


சகரியா 11:12,13 உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.


இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல், பின்வரும் வசனங்களில் காணப்படுகிறது.

மத்தேயு 27:5-10 அப்பொழுது, அவன் (யூதாஸ்) அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

சகரியா தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை, எரேமியா தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்டதென மத்தேயு சுவிசேஷம் கூறுகிறது. இதற்குக் காரணமென்ன என்பதை தள அன்பர்களில் யாராவது தெரிந்தால் அதை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.

அத்துடன், சகரியா புத்தகத்தில் காணப்படும் எந்தெந்த வார்த்தைகள், இயேசுவுக்கும் யூதாஸுக்கும் அடையாளமாயுள்ளன என்பதை அறிந்தவர்களும் தாங்கள் அறிந்ததை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard